search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காட்சி"

    • பொதுமக்களை கவர்ந்த சிறுதானிய உணவுகள்
    • உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பள்ளி மாணவ மாணவிகளின் சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,வேலூர் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை, வேலூர் மாவட்ட நுகர்வோர்கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் அரங்குகள் அமைத்திருந்தனர்.

    இதில் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின் படி நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு 'உணவே மருந்து' என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    சிறுதானிய உணவு வகைகளான கேழ்வரகு, சம்பா, தினை உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், மக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றின் செய்முறை மற்றும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. காட்சிக்க வைத்திருந்த உணவுகள் பொதுமக்களை கவரும் வகையில் இருந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அப்துல் முனீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் மருந்தியல் கண்காட்சி நடைபெற்றது
    • டாக்டர் ராஜா முகமது கண்காட்சி யை துவங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62ம் தேசிய மருந்தியல் வாரவிழா வினையொட்டி 4-ம் நாள் மருந்தியல் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தின ராக டாக்டர் ராஜா முகமது கலந்துகொண்டு கண்காட்சி யை துவங்கிவைத்தார். ரோவர் கல்வி நிறுவனங்க ளின் நிறுவனர் மற்றும் மேலாண் தலைவர் கே.வரதராஜன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் நெப்போலியன் சிறப்புரை ஆற்றினார்.

    துணை முதல்வர் மாரியம்மாள் நன்றி கூறினார். இந்த கண்காட்சியில் மருந்தியல் சம்பந்தமான 50க்கும் அதிகமான படைப்புகளை மாணவர்கள் தங்களுடைய தனித்துவத்தை கொண்டு வெளிப்படுத்தினர். மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் விழா வினை ஒருங்கிணைத்தனர். விழாவில் தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி மேலாளர் சத்திஷ்வரன் அலுவலக மேலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • மீன்வள தினத்தை முன்னிட்டு கடல்வாழ் உயிரின உணவு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பூங்கா வில் உலக மீன்வள தினத்தை யொட்டி கடல் வாழ் உயிரினங்களின் உணவு கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இக்கண்காட்சி அரங்கில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து பல அறிய வகை மீன்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இடம்பெற்றன. மாலை 4 மணிக்கு தொடங்கிய கண்காட்சி இரவு 8 மணிக்கு முடி வடைந்தது. இதில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    கண்காட்சி அரங்கில் நவீன மின்னணு திரை அமைத்து தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்தும், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்படும் வருமா னம் மற்றும் மீனவர்க ளுக்கான பயிற்சி மற்றும் பேரிடர் காலங்களில் பாது காப்புடன் சென்று வருவ தற்கான வழிகாட்டுதல் குறித்த குறும்படங்கள் திரை யிடப்பட்டது.

    குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தது. உணவு கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா. உதவி இயக்குநர்கள் சிவகுமார் (மண்டபம்), அப்துல்காதர் ஜெய்லானி (ராமேசுவரம்), மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார சிறப்பு நடுகற்கள் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உலக மரபு வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சங்ககாலத்தில் இருந்தே வீரச்செயல் செய்தவர்க ளுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் சங்க காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்கள் அழிந்துபோயின. கி.பி 6-ம் நூற்றாண்டு தொடங்கி 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர், வாணர் கால நடுகற்கள் நமக்கு கிடைக்கி ன்றன. தர்மபுரி, செங்கம் பகுதிகளில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த வா ணர்க ளின் நடு கற்கள் அதி கம் கிடை க்கி ன்றன.

    9-ம் நூற்றா ண்டுக்கு பின் சோழர்கள், வாண கோவ ரையர்கள், குறுநில நாடுகளில் நடுக ற்கள் கிடைக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் வைக்க ப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்களில் கல்வெட்டுகள் காணப்ப டுகின்றன. மன்னரின் பெயர், ஆட்சி ஆண்டு, வீரச்செயல் செய்த வீரனின் பெயர், தந்தையின் பெயர், ஊர், எதற்காக இற ந்தான் போன்ற விவரங்கள் கல்வெ ட்டில் பொறிக்கப்ப ட்டன.

    தொறுபூசல் எனப்படும் கால்நடைகளை கவர்தல், மீட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. 15-ம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டு வெட்டும் வழக்கம் குறைந்து போனது. இன்றும் கூட சில பிரிவுகளில் இறப்பின்போது கல்லெடுக்கும் வழக்கம் உள்ளது.

    நடுகல்லில் பல வகைகள் உள்ளது. நினைவுக்கல், வீரக்கல், நவகண்டம், அரிக ண்டம், சதிகல், புலிகுத்திப்ப ட்டான் கல், ஆநிரைக்கல் என அமைக்கப்பட்டது. இது மிக பழமையான கி.மு. 4-ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்காப்பியர் இலக்கிய விதிப்படி எழுதப்பட்ட முதல் நடுதல் புள்ளிமான் கோம்பை (தேனி) தாதா பட்டி (திண்டுக்கல்) உள்ளி ட்ட 69 நடுகற்களின் புகைப்ப டங்கள் காட்சி ப்படுத்தப்ப ட்டுள்ளன. இந்த கண்கா ட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறி ப்பிட்ட என்னை கவர்ந்த கல்வெட்டு என்கிற கல்வெட்டின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    • கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது.
    • மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    மணவாளக்குறிச்சி ;

    வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந் துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் கண்காட்சி மற்றும் கலைவிழா நடை பெற்றது. இந்த விழாவை திருவனந்தபுரத்தை சேர்ந்த திரைப்பட நடிகையான அன்கிதா வினோத் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது மாணவிகள் வேலையில்லாதவராக இல்லாமல் சுயதொழில் தொடங்குவோராக மாற வேண்டும். இதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படு கிறது என கூறினார்.

    கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். இந்த கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவி கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகளுக்கிடை யிலான நடனப்போட்டி நடை பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்க ளையும் கல்லூரியின் தாளாளர் வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் டி.ஜே. இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை தாளாளர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்கு னர் தருண் சுரத், துறை தலைவர்கள், பேரா சிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி வளர்ச்சி ஆணையர், புதுடில்லி மற்றும் கைத்தறி ஆணையர் சென்னை ஆகியோர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகரில் இன்று (3-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை மாவட்ட அளவிலான 6-வது சிறப்பு கைத்தறி கண்காட்சி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு பின்புறம் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.

    கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

    கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த பெட்ஷீட்கள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், அசல்பட்டு, காட்டன் சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விற்பனைக்கு தமிழக அரசின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.150 வரை), பட்டு ரகங்களுக்கு ரூ.300-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. பட்டு ரகங்களுக்கு சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படுகின்றது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு துணிகள் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

    • முதல் மற்றும் கடைசி வரியில் 12 குழிகளுக்கு பதிலாக 10 குழிகள் உள்ளன
    • கண் காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராள மான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொரு ளும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மாதம் கண்காட்சியில் அரும் பொருளான கலை நயம் மிக்க காசுகள் எண்ணும் மரத்தட்டு இடம் பெற்று உள்ளது.

    காசு எண்ண பயன்படும் இத்தகைய மரத்தட்டுக்கள் திருவனந்தபுரம், திருவி தாங்கூர், கொச்சின் போன்ற கேரள சமஸ்தான பகுதிகளிலும் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் குமரி மாவட்ட பகுதிகளிலும் பெருமளவில் வழக்கத்தில் இருந்தன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காசு எண்ணும் மரத்தட்டு செவ்வக வடிவமாக உள்ளது. இதில் மொத்தம் 200 குழிகள் உள்ளன. குத்து கோட்டு வரிசையில் 12 குழிகளும், கிடைகோட்டு வரிசையில் 15 புள்ளிகளும் உள்ளன.

    முதல் மற்றும் கடைசி வரியில் 12 குழிகளுக்கு பதிலாக 10 குழிகள் உள்ளன. ஆக மொத்தம் 200 குழிகள் உள்ளன. நமது முன்னோர்கள் பயன்ப டுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சி யின் நோக்கமாகும் என்று கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரி வித்தார். இந்த கண் காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.

    • வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்
    • குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்மலையனூர் வட்டா ரத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வளத்தி யில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிழ்ச்சிக்கு மேல்மலை யனூர் ஒன்றிய குழு தலை வர் கண்மணி நெடுஞ்செழி யன் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயனா வரவேற்றார்.

    இவ்விழாவில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்க ளுக்கு சீர்வரிசை பொருட்க ளை வழங்கி சிறப்புரையாற்றி னார்.தொடர்ந்து வளத்தி ஆரம்ப சுகாதார நிலை யத்தின் சார்பில் ஊட்டச் சத்துடன் கூடிய தொகுப்பி னை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். முன்னதாக ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்கான கண்காட்சியினைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் விஜய லட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராம சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கள், சரவண குமார், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • போன்சாய் கிளப்பின் அமைப்பு பற்றியும் வெளிநாடுகளில் இருக்கும் போன்சாய் மரங்களின் தன்மை குறித்தும் விரிவாக விளக்கினார்.
    • கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். முடிவில் பத்மாபாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    உடுமலை:

    உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி , வாமன் விருக்ஷா போன்சாய் கிளப் சார்பில் இயற்கைக்குள் சிறிய இயற்கை மற்றும் இக்கபானாவின் ஜப்பானிய மலர் அலங்கரிப்பு பற்றிய கலை கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சி ஜி.வி.ஜி., மாநாட்டு அரங்கம் 1 ல் நடைபெற்றது.இந்த கண்காட்சியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார்.ஆலோசகர் மற்றும் இயக்குநர் மஞ்சுளா வரவேற்று பேசினார்.போன்சாய் கிளப்பின் தலைவர் ஸ்ரீமதி மீனா குருசாமி சிறப்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர் போன்சாய் கிளப்பின் அமைப்பு பற்றியும் வெளிநாடுகளில் இருக்கும் போன்சாய் மரங்களின் தன்மை குறித்தும் விரிவாக விளக்கினார்.

    மேலும் போன்சாய் மரங்கள் அமைதி, சமாதானம்,நற்குணங்கள், நல்ல எண்ணங்களை பிரதிபலிக்கின்றன என்று கூறியதுடன் போன்சாய் மரத்தின் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.அதைத் தொடர்ந்து போன்சாய், சாய்கேய்,சூசேகி வகைகள் மற்றும் இக்கபானா ஜப்பானிய மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அரங்குகளை விஜயகுமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.அப்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்,கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். முடிவில் பத்மாபாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.  

    • கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    மணவாளக்குறிச்சி:

    வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஐ.இ.டி. கன்னியாகுமரி நெட்வொர்க் மற்றும் அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த கண்காட்சியில் 172 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக காட்சிப்படுத்திய மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் துணை தாளாளர் சுனி, இயக்குநர் தருண்சுரத், அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வரும், ஐ.இ.டி.கன்னியாகுமரி நெட்வொர்க்கின் முன்னாள் தலைவருமான ஜோசப் ஜவகர், அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிமலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
    • 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

    கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும் கலை பொருட்கள் மீதுள்ள ஆர்வத்தையும் பாராட்டினார். இதில் சந்திராயன்-3 மாதிரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.சந்திராயன்-3 மாதிரி தொழில்நுட்பத்தோடு இயங்கும் முறையில் மாணவர்களால் உருவாக்கப்பட்டதால் பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டும் கண்டும் ரசித்தனர். தமிழர்களின் பழைய கலையான பொம்மலாட்ட பொம்மைகள் மூலம் கதை சொல்லும் கைவினை பொருட்கள், வானத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பு மற்றும் பழைய சீன முறையில் உருவாக்கப்பட்ட எளிய கணித கருவி ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களும் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் தொடர்பான பொருட்களும் மேலும் 300-க்கும் மேற்பட்ட வானியல், கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

    இதனை 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்வினை மாணவர்களே ஒருங்கிணைத்து நடத்தினர்.

    • புதுக்கோட்டையில் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
    • 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்

    புதுக்கோட்டை,

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

    இக்கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து,  மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும்,  கலை பொருட்கள் மீதுள்ள ஆர்வத்தையும் கண்டு பாராட்டினார்.  இதில் சந்திராயன்-3  மாதிரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சந்திராயன்-3 மாதிரி தொழில்நுட்பத்தோடு இயங்கும் முறையில் மாணவர்களால்  உருவாக்கப்பட்டதால் பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டும் கண்டும் ரசித்தனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான பொம்மலாட்ட பொம்மைகள், மூலம் கதை சொல்லும் கைவினை பொருட்கள், வானத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பு , பழைய சீன முறையில் உருவாக்கப்பட்ட  எளிய கணித கருவி ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்று, புதிய செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.  மாணவர்களுக்கு  எளிமையான கற்றலுக்கும், இந்த அறிவியல் மற்றும் கைவினைப்  பொருட்கள் கண்காட்சி பயனுள்ளதாக அமைந்தது. ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கைவினைப்பொருட்களும் இருநூறுக்கு மேற்பட்ட அறிவியல்  தொடர்பான பொருட்களும், முந்நூறுக்கும் மேற்பட்ட வானியல்,  கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்களும் இக்கண்காட்சியில்  இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை  1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள்,  பொதுமக்கள்  கண்டு ரசித்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்களே ஒருங்கிணைந்து செய்திருந்தது பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்தது.

    ×