search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pawan Kalyan"

    • தேர்தல் அறிக்கை மூலம் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டதாக ஆந்திராவில் சர்ச்சை எழுந்தது.
    • ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெருமளவில் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பா.ஜ.க. தெலுங்கு தேசம் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்லவும் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்லவும் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி பங்கேற்கவில்லை. தேர்தல் அறிக்கை மூலம் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டதாக ஆந்திராவில் சர்ச்சை எழுந்தது.

    ஆனால் பா.ஜ.க இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறுகையில்:-

    ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பாஜகவின் முழு ஆதரவு உள்ளது என்றார்.

    மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெருமளவில் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இதன் மூலம் கூட்டணி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

    • நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணியில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பவன் கல்யாண் தனது தொகுதியில் 2 கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை முடித்து மற்ற இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.

    ஒருங்கிணைந்த ஆந்திராவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவரது தம்பி பவன் கல்யாணுக்காக பிதாபுரம் தொகுதியில் வருகிற 5-ந் தேதி முதல் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும்.
    • பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    ஒரு புறம் அரசியல்வாதிகளும், மறுபுறம் சினிமா நடிகர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பவன் கல்யாணை ஆதரித்து நேற்று ஆந்திராவில் பிரபல நடிகரும், பவன் கல்யாணின் அண்ணன் மகனான வருண் தேஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோடாவாலியில் ரோடு ஷோ நடத்தினார்.

    அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வருண் தேஜ் பேசியதாவது, எனது தந்தையை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதிகாரத்தை பொருட்படுத்தாமல் மக்களுக்காக போராடும் தலைவர் பவன் கல்யாண். எம்.பி., எம்.எல்.ஏ. யாகவோ இல்லாவிட்டாலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடியவர்.

    தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு துணை நின்றவர். எப்போதும் மக்கள் மத்தியில் வளம் வரும் தலைவர் வெற்றி பெற வேண்டும்.

    பவன் கல்யாண் மகனாக தேர்தல் பிரசாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிதாபுரம் பகுதி மக்களின் அன்பும், பாசமும் தந்தையின் மீது என்றும் இருக்க வேண்டும்.

    தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும். பிதாபுரம் மக்களை பவன் கல்யாண் தனது குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறார்.

    இங்குள்ள வாக்காளர்கள் பவன் கல்யாணை ஆசீர்வதித்து சட்டப்பேரவைக்கு அனுப்பினால் அவர் அனைவருக்கும் சேவகம் செய்வார். பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஏற்கனவே பிதாபுரத்தில் பவன் கல்யாண் சார்பில் நடிகர் நாகபாபு பிரசாரம் செய்து வரும் நிலையில் வரும் நாட்களில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நடிகர் பவன் கல்யாணை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.

    • எனது தம்பி பவன் கல்யாண் தனது சொந்த பணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
    • அவரை ஊக்கப்படுத்த என்னுடைய பங்காக இந்த நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கி உள்ளேன்‘’ என்றார்.

    நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா கட்சி நடத்தி வருகிறார். தற்போது பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஐதராபாத்தில் 'விஸ்வம்பரா' படப்பிடிப்பில் இருந்த நடிகர் சிரஞ்சீவியை, நடிகர் பவன்கல்யாண், ஜனசேனா கட்சி பொதுசெயலாளரும், சிரஞ்சீவியின் இன்னொரு தம்பியுமான நடிகர் நாகபாபு சந்தித்தனர்.




    அப்போது அவர்களை அன்போடு படப்பிடிப்பு தளத்தில் சிரஞ்சீவி வரவேற்றார். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி கொண்டனர். அதன் பின் நடிகர் சிரஞ்சீவி ரூ. 5 கோடிக்கான காசோலையை ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணிடம் நன்கொடையாக வழங்கினார்.

    இது குறித்து சிரஞ்சீவி கூறும்போது ''பலர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், எனது தம்பியான பவன் கல்யாண் தனது சொந்த பணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

    இந்த சேவை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.மேலும் அவரை ஊக்கப்படுத்த என்னுடைய பங்காக இந்த நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கி உள்ளேன்'' என்றார்.

    • நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்.

    நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கடந்த 3 நாட்களாக வாராஹி வாகனம் மூலம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார்.

    தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தொகுதி முழுவதும் உள்ள 2 லட்சம் பேர் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் என்னால் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள முடியவில்லை. தினமும் 200 பேருடன் மட்டுமே போட்டோ எடுக்க முடிகிறது.

    தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

    நான் பிரசாரத்தில் ஈடுபடும் போது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், ஆர்வலர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆளும் கட்சியினர் அனுப்பிய கூலிப்படையினர் கூட்டத்துடன் கூட்டமாக கலந்து சிறிய கத்தியால் என்னையும், எனது பாதுகாவலர்களையும் வெட்டினர். என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காக்கிநாடாவில் வாராஹி யாத்திரை சென்ற போது என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்தது.

    தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைந்த போதும், தேர்தலில் பீமாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போதும் நான் துவண்டு விடவில்லை.

    இந்த முறை வெற்றியை கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அவர்தான் பித்தாபுரம் தொகுதிக்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சினிமா பாணியில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசார வாகனங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.
    • ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரம் செல்கிறார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் காரசாரமாக நடந்து வருகிறது. நூதன முறைகளில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சினிமா பாணியில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசார வாகனங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

    ஒய்.எஸ் .ஆர். காங்கிரஸ் தலைவர் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் பஸ் யாத்திரை பிரசாரம் செல்கிறார்.

    இவருடைய பிரசாரத்திற்காக பிரத்யேகமாக பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் ஏ.சி. வசதியுடன் உள்ள இந்த பஸ்சில் படுக்கையறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


    பஸ்சின் வெளிப்புறம் முழுவதும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சின்னங்கள் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதே போல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஏற்கனவே ராணுவ வாகனம் போல வாராஹி என்ற வாகனத்தை தயார் செய்து வைத்துள்ளார். அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த வாராஹி வாகனத்தில் சென்று பவன் கல்யாண் பிரசாரம் செய்கிறார். அவர் பித்தாபுரம் பாராளுமன்ற தொகுதியில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரசாரத்திற்கு பிரத்யேகமாக வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா சினிமாவைப் போல தேர்தல் களமும் பிரத்யேக வாகனங்களால் களைகட்டி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் பிராஜகளம் பொதுக்கூட்டம் இன்று மாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பால்நாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க., ஜன சேனா கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த பொதுக் கூட்டத்தில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, பொதுக் கூட்டத்தை பார்க்க வந்த தொண்டர்களில் சிலர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர். இதை பார்த்ததும் பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

     


    ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையின் போது தொண்டர்கள் மின்கம்பத்தில் ஏறுவதை பார்த்த பிரதமர் மோடி, உடனே குறுக்கிட்டு பவன் கல்யாணிடம் உரையை நிறுத்துமாறு கூறினார். தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அவர்களை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்க வலியுறுத்தினார்.

    "அங்கு மின் வயர்கள் உள்ளன. அங்கு என்ன செய்கின்றீர்கள்? உங்களது உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது. தயவு செய்து கீழே இறங்குங்கள். ஊடகத்தினர் உங்களது புகைப்படங்களை எடுத்துள்ளனர். இப்போது கீழே வாருங்கள். அங்கிருக்கும் காவலர்கள், தயவு செய்து மக்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எங்களுக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்திவிடும்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பிறகு, ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனது உரையை முடித்தார்.

    • கடந்த 2019 தேர்தலின் போது பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜ்வாகா என 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார்.
    • பா.ஜ.க மேலிட தலைவர்களுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ஜ.க.வும் இணையும் என்று உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

    சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைப்படி நடிகர் பவன் கல்யாண் வரும் தேர்தலில் பிதாபுரம் சட்ட சபை தொகுதியிலும், அனக்கா பள்ளி பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    கடந்த 2019 தேர்தலின் போது பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜ்வாகா என 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போது இரண்டிலும் தோல்வியடைந்தார். பவன் கல்யாண் இந்த முறை ஒரு சட்டசபை, ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் டெல்லி சென்றனர். இன்று பா.ஜ.க மேலிட தலைவர்களுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.
    • ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா விசாகப்பட்டினத்தில் பேட்டி அளித்தார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என்பதை உணர்ந்து விரக்தியில் இருக்கிறார். சத்தம் போட்டு கத்தி கூச்சிலிடுவதால் ஓட்டு கிடைக்காது.

    இதனை அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும். பவன் கல்யாணின் விரக்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூச்சல் போடும் அளவிற்கு சென்று விட்டது.

    அவரது தோல்விகளுக்கு தொண்டர்களை குறை கூறுவது வெட்கக்கேடானது.

    தற்போது பூத்துக் கமிட்டி இல்லாதது குறித்து அவர் பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்காக பவன் கல்யாண் வேலை செய்து வருகிறார். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்கள் கட்சிகளை தோற்றுவித்தனர்.

    ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார். ஆனால் பவன் கல்யாண் 2 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை.

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
    • தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதா தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது.

    தொகுதி உடன்பாடு ஏற்படும் முன்னதாகவே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ளது.

    இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளின் கருத்துக்களை ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

    டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அந்த மாநில தலைவர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.

    ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 1999-ம் ஆண்டு இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி தொகுதியில் பா. ஜனதா வேட்பாளராக மாநில செயலாளர் முனி சுப்பிரமணியம் அல்லது கர்நாடக மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ரத்தன பிரபாவின் மகள் நிகாரிகா ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.
    • சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தெலுங்கு தேசம் கட்சியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் 24 இடங்களை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

    பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.

    ஆனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டும் என பவன் கல்யாண் பேசுவது கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    இதனால் தான் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடுவை முன்னிலைப்படுத்த வந்துள்ளார். சந்திரபாபு நாயுடுவிடம் 25 சதவீத சீட் கூட பெற முடியாதவர் பவன் கல்யாண்.

    40 ஆண்டுகால அனுபவம் உள்ளதாக கூறிக் கொள்ளும் சந்திரபாபு நாயுடு கூட்டணி இல்லாமல் களம் இறங்கினால் படுதோல்வி ஏற்படும் என மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
    • 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.

    ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.

    அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.

    ×