search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leo"

    • தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.
    • அர்ஜூன் தாஸ் நடித்த ரசவாதி திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

    கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது….

    என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் நீங்கள் தான் அதற்கும் நன்றி என்றார்.

    அதைதொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள்.

    நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா? என்ற கேட்ட கேள்விக்கு

    நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம்.

    அர்ஜூன் தாஸ் நடித்த ரசவாதி திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார்.
    • இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.

    பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. சமீபத்தில், இவர் இயக்கிய படம் ஜெயிலர்.

    இதில், ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.

    சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் லியோ படத்தை எடுத்திருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

    நான் லியோ படத்தை இயக்கி இருந்தால் விஜய்யுடன் ஷாருக்கான், மம்மூட்டி மற்றும் மகேஷ் பாபுவை நடிக்க வைத்திருப்பேன். மேலும், கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியாபட்டை தேர்ந்தெடுத்திருப்பேன். இவ்வாறு கூறினார். பின் யாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிரது என்ற கேள்விக்கு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறேன் என்ரு பதிலளித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.
    • சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

     லோகேஷ் கனகராஜ் அவரது படங்களின் ப்ரோமோ வீடியோவை மிக வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் கதையோடு ஒரு அங்கமாக அந்த ப்ரோமோ வீடியோக்களை எடுப்பதில் திறம் பெற்றவர். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று எல்லாரும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் 171- வது படமான கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

    இதற்கு முன் விக்ரம் படத்தின் ப்ரோமொ வீடியோவில் வரும் 'ஆரம்பிக்கலாங்களா', லியோ படத்தில் வரும் 'ப்லடி ஸ்வீட்' வசனங்கள் மிகவும் வைரலாகியது.

    அதைத் தொடர்ந்து கூலி படத்தின் ப்ரோமோ வீடியோவில் ஒரு கேங்கஸ்டர் கும்பல் துறைமுகத்தில் பல வகையான தங்கத்தை கடத்தி அதை அனுப்புவதற்கு பேக் பண்ணி கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது ஒரு ஃபோன்காலில் துறைமுகத்தில் செக்யூரிட்டி அடித்து விட்டு ஒருவன் உள்ளே வருகிறான் என்ற தகவலை கூறுகிறான்.

    ரஜினிகாந்த் உள்ளே வந்து அனைவரையும் மாஸாகவும், ஸ்டைலாகவும் அடிக்கிறார். அடிக்கும் பொழுது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த 'ரங்கா' படத்தில் புகழ் பெற்ற 'அப்பாவும் தாத்தாவும்" என்ற வசனத்தை பேசிக்கொண்டே அடிக்கிறார்.

    அடித்து முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் ஃபைனல் டச்சாக இதில் ரஜினிகாந்து 'முடிச்சடலாம் மா!!' என்ற வசனத்தை பேசுகிறார். தற்பொழுது இந்த டைடில் டீசர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. . இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.

    ரஜினிகாந்த இதற்கு முன் உழைப்பாளி, மன்னன், முள்ளும் மலரும் போன்ற படங்களில் கூலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    இதற்குமுன் 1983 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் மன்மோகன் தேசாய் இயக்கத்தில் இந்தி திரைப்படமான கூலி வெளியாகியது.

    1991 ஆம் ஆண்டு சுரேஷ் பாபு தயாரிப்பில் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் தபு நடிப்பில் தெலுங்கு திரைப்படமான கூலி வெளியாகியது.

    1995 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சரத்குமார் மற்றும் மீனா இணைந்து நடித்து வெளியான தமிழ் திரைப்படமான கூலி வெளியாகியது.

     

    இதைத்தொடர்ந்து தற்பொழுது ரஜிகாந்தின் 171 - வது படத்திற்கும் 'கூலி' என்ற தலைப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் லோகேஷின் சினிமாடிக் யூனிவர்சில் சேராது என தெரிவித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற போகிறார்கள். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை குறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த நடிப்பில் “தலைவர் 171” படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்

    லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த நடிப்பில் "தலைவர் 171" படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியது.

    லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர். ஹோலிவுட் ஸ்டைலில் அவருக்கென LCU என சினிமேட்டிக் யூனிவர்சை தன் படங்களின் மூலம் உருவாக்கியுள்ளார்.

    இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ இந்த எல்.சி.யூ கான்சப்டில் வரும். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ் போன்ற படங்கள் இயக்குவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

    இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார்.

    நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் இப்படத்தில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார். கேரளா ரசிகர்கள் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். பின் இப்பொழுது கோட் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

    இந்நிலையில் விஜய் சாய் பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு பணிப்புரியும் குருக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் லியோ. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியானதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அங்கிருந்து கிளம்பும் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

    "லியோ 2 படத்தின் கதை இருக்கு, விஜய் OK சொன்னால் எப்ப வேண்டுமானாலும் பண்ணிடலாம்," என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதங்களில் துவங்கும் என்றும் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லோகேஷ் கனகராஜ் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார்.


    இயக்குனர் லோகேஷ் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர் 'பைட் கிளப்' என்ற படத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.

    இந்நிலையில் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பியுள்ளனர். அதாவது, ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து கொண்டிருக்கும் காட்சி இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மேலும், 'இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு.. இதுவே சூழ்நிலை... இதுவே மாயை' என பதிவிடப்பட்டுள்ளது.


    இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் இசை ஆல்பத்தை லோகேஷ் இயக்குகிறாரா? என சமூக வலைதளத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 'லியோ' படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


    அந்த மனுவில், 'லியோ' திரைப்படத்தில் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளார்.


    இதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை 'லியோ' படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார். இது போன்ற படங்களை தணிக்கை குழு முறையாக அய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 'லியோ'படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார்.


    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன? இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரிவான பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    • நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.


    இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், 'லியோ' திரைப்படத்தில் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளார்.


    இதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை 'லியோ' படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார். இது போன்ற படங்களை தணிக்கை குழு முறையாக அய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.


    மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 'லியோ'படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். 

    • லோகேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து இருக்கும் 'லியோ' படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் 'நா ரெடிதான்' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. இந்த பாடல் பாராட்டை பெற்றாலும் வரிகளால் விமர்சனத்தையும் சந்தித்தது.

    இந்நிலையில் 'நா ரெடி தான்' பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. அதாவது பிரீமியர் லீக் கால்பந்தில் பிரபல கால்பந்து அணியாக விளங்கும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சமூக வலைதள பக்கத்தில், "எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ் உருவாத டா நம்ம டூல்ஸ் அத்தன பேரு அசைவும் ஒரே மாதிரி சிங்க்கு" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.


    கடந்த 10-ஆம் தேதி டாட்டன்ஹாம் அணிக்கும் நியூகேஸ்டில் அணிக்கும் இடையே நடந்த பிரிமீயர் லீக்கில் டாடன்ஹாம் அணி நான்கு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. எனவே அதை கொண்டாடும் வகையில் இந்த வரிகள் பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • இதன் முதல் படைப்பான 'பைட் கிளப்' டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.


    இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக 'பைட் கிளப்' என்ற திரைப்படத்தை வெளியிடுகிறார். இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பெயரில் பேஸ்புக் தளத்தில் ஆபாச வீடியோ பரவியது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவத:-

    நான் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன். வேறெந்த சமூக வலைதளத்தில் இல்லை. வேறு தளங்களில் என் பெயரில் கணக்குகள் இருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். அன் பாலோ செய்து விடவும் என பதிவிட்டுள்ளார்.

    • நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
    • இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. தற்போது அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில் நடிகை திரிஷா சமூக வலைத்தளத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வெள்ளையில் நிற புடவையில் அவர் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் 'அவள் என்னை சாய்த்தாலே' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    ×