என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kejriwal"
- அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.
- நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள விடாமல் தடுத்து கொலை செய்ய பா.ஜனதா மற்றும் அமலாக்கத்துறை சதி திட்டம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பா.ஜனதா பதில் அளித்துள்ளது.
பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷஜியா இல்மி டெல்லி மாநில கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஷஜியா இல்மி கூறியதாவது:-
அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம். நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
எந்த அமைப்பும் அல்லது ஜெயில் நிர்வாகமும் அவரது உடல்நலத்தை கெடுத்து, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த ஏன் விரும்பனும்?. யாரும் இதுபற்றி ஏன் யோசிக்கனும்?.
இதுபோன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இது போன்ற உணர்வுப்பூர்வமான கருத்துகளை ஆம் ஆத்மி கட்சி தவிர்க்க வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்ள அதிகாரிகள் மறுப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் எந்த சிறையிலும் இதைச் செய்ய மாட்டார்கள். நாம் மிகவும் பொறுப்புள்ள ஜனநாயக நாடு. முதலமைச்சர் அல்லது யாராக இருந்தாலும் மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக நான் நினைக்கவில்லை.
இவ்வாறு ஷஜியா இல்மி தெரிவித்துள்ளார்.
- பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது.
- கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கான இனிப்பு வகைகள் மற்றும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இனிப்பு அதிகமாக சாப்பிட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து அதன்மூலம் ஜாமின் பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது என டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். சர்க்கரையுடன் தேனீர் குடிப்பதாகவும், இனிப்புகள் சாப்பிடுவதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. அது முற்றிலம் பொய். கெஜ்ரிவால் கெஜ்ரிவால் செயற்கை இனிப்பை எடுத்து வருகிறார்.
சர்க்கரை அளவு குறைவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அல்லது ஏதேனும் சாக்லேட் எடுத்துச் செல்லுமாறு டாக்டர்கள்களால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். உருளைக்கிழங்குடன் பூரி சாப்பிடுவதாக அமலாக்கத்துறை சொல்கிறது. இவ்வளவு பொய் சொன்னதற்காக அமலாக்கத்துறை கடவுளுக்கு பயப்பட வேண்டும். நவராத்தியின் முதல் நாளில் மட்டும் பூரி சாப்பிட்டார். வீட்டு உணவை நிறுத்துவதற்காக இந்த பொய்கள் எல்லாம் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜனதாவல் பரப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களில் இருந்து கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300 mg/dl-க்கு அதிகமாக உள்ளது. ஆனால் திஹார் ஜெயில் அதிகாரிகளால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவை நிறுத்தி கெஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது.
இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.
- அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜரானார்.
- டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைதுசெய்தனர். தொடர்ந்து 22-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, கெஜ்ரிவாலின் காவல் இன்றுடன் முடிந்தநிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
கோர்ட்டில் ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலிடம் மேலும் விசாரணை நடத்த ஒரு வார காலம் அவகாசம் கேட்டது அமலாக்கத்துறை. அப்போது சட்டத்தைஅ விட முதல் மந்திரி மேலானவர் இல்லை என வாதமிட்டது. இதையடுத்து தீர்ப்பை தள்ளிவைத்தார் நீதிபதி.
Enforcement Directorate tells the court, "A CM is not above the law." https://t.co/Sdq1l4IXs6
— ANI (@ANI) March 28, 2024
- கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி.
- கெஜ்ரிவால் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டு நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது:-
நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புவது சுதந்திரம் அல்ல. ஒன்றுபடுவோம் அல்லது நாடு நாசமாகிவிடும். கெஜ்ரிவால் பெரிய புரட்சியை கொண்டு வருவார்.
டெல்லி அரசு சட்டப்படி செயல்படும்.
அரசியல் பழிவாங்கலின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எந்த சட்டமும் கூறவில்லை. அவர் அமலாக்கத்துறை காவலில் இருக்கிறார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு வேட்பாளரும் கெஜ்ரிவாலாக இருப்பார். ஒவ்வொரு தொண்டரும் கெஜ்ரிவாலாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி.
- பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் ஜாமின் கிடைப்பது கடினம்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என ஆம் ஆத்மி கட்சி மந்திரி ஆதிஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆதிஷி கூறுகையில் "இந்த நீதிமன்ற உத்தரவில் எங்களுக்கு மரியாதையுடன் உடன்பாடு இல்லை என்பதை பணிவுடன் சமர்ப்பிக்க விரும்புகிறோம். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை.
அமலாக்கத்துறை எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால், இதுபோன்ற வழக்குகளில் பெரும்பாலும் ஜாமின் கிடைப்பது கடினமாகும்.
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கைது செய்தது நாட்டின் ஜனநாயக கொலை" எனத் தெரிவித்துள்ளார்.
- கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
- வரும் 28-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
- அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தடைவிதிக்க கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.
- டெல்லி உயர்நீதிமன்றம் சம்மனுக்கு எதிராக தடைவிதிக்க மறுத்துவிட்டது.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
தனக்கு சம்மன் அனுப்பியது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 7-வது மற்றும் 8-வது முறையாக சம்மன் அனுப்பியபோது நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார்.
அதில் விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டாம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்படும். அதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
ஒன்பது சம்மனுக்கும் எதிராக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வக்கீல் அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜரானால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.
இருந்தபோதிலும், சம்மன் அனுப்பியதற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் கேட்டுக்கொண்டதுடன் வழக்கை ஏப்ரல் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அதனைத் தொடர்ந்துதான் கெஜ்ரிவால் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
- முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவர்.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் இதனை செயல்படுத்தி வருகின்றன
டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2024-25 நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக பட்ஜெட்டில் 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் டெல்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவர்.
அதே சமயம், ஓய்வூதியம் மற்றும் டெல்லி அரசின் வேறு திட்டங்களில் பலனடைபவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு இத்திட்டத்தின்மூலம் ₹1,000 வழங்கப்படமாட்டாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் இதனை செயல்படுத்தி வருகின்றன
- தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் என கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டு.
- விசாரணை என்ற பெயரில் கைது செய்ய முயற்சி என பா.ஜனதா மீது விமர்சனம்.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் இரண்டு மந்திரிகளை அமலாக்கத்துறை கைது செய்தது. இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் அம்மாநில முதல்வரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். நான் எந்த தவறும் செய்யவில்லை என கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வருகிறார்.
கெஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை மூலம் பா.ஜனதா அழிக்க பார்க்கிறது என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. மேலும் சோதனை என்ற பெயரில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, விசாரணை என்ற பெயரில் அவரை கைது செய்வதுதான் அமலாக்கத்துறையின் குறிக்கோள். இதன் மூலம் மக்களவை தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா முடக்க நினைக்கிறது என்றும் குற்றம்சாட்டியது.
ஆறு முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஏழாவது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, எப்படி சம்மன் அனுப்ப முடியும் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் 8-வது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீதிமன்றம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், மார்ச் 16-ந்தேதி நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆனால் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
- ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதி பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள்.
- டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் சேர அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது.
INDIA கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலகவில்லையெனில், அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு CBI நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று CrPC Section 41 (அ) படி அவரை சிபிஐ கைது செய்யும் என மிரட்டல் விடுக்கிறார்கள் என டெல்லி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை 6 சம்மன்களை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன .டெல்லியில் உள்ள 7 இடங்களில் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
- ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. சிக்கலான நேரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி மத்திய அரசின் செயல்பாட்டையும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு பா.ஜ.க.விற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.
- தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது.
- பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்
மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.
இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.
சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.இதற்கு, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்