search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamal nath"

    • ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்
    • காங்கிரஸ் கட்சி தற்போது 2-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இதனை அடுத்து, காங்கிரஸ் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது தனது 2-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

    மத்தியபிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மகன் நகுல்நாத் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகனான வைபவ் கெலாட் போட்டியிடுகிறார்.

    ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்.பியான ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

    • காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தனது மகன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கமல்நாத்தின் உதவியாளரும், காங்கிரஸ் தலைவர்களும் மறுத்தனர். என்றாலும் கமல்நாத்தும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து டெல்லியில் தங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சியை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.


    காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் போபால் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் தற்போதைய பிரச்சினைகள் பற்றி விரிவாக பேசினார். காங்கிரசில் இருந்து விலக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். என்றாலும் கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.

    • மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் தோல்வியால் ராகுல் காந்தி எதிர்ப்பு.
    • மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்காததால் கமல்நாத் அதிருப்தி எனத் தகவல்.

    மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அம்மாநில காங்கிரஸ் தலைவரான முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக ராகுல் காந்தி இருப்பதாலும், மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்காததாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் கமல் நாத் இணைய இருப்பதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இன்று டெல்லில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து கமல் நாத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அப்போது பத்திரிகையாளர் ஒருவர், "நீங்கள் பா.ஜனதாவில் இணையப் போவதாக செய்திகள் வருகிறதே?" என்றார்.

    அதற்கு கமல்நாத், "அதேபோல் ஒரு விசயம் இருந்தால், நான் உங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பேன்" என்றார்.

    அதற்கு பத்திரிகையாளர், "நீங்கள் இணைவது தொடர்பாக மறுப்பு தெரிவித்ததுபோல் இல்லையே உங்கள் பதில்".. என்றார்.

    அதற்கு கமல்நாத், "இது மறுப்பது பற்றியது அல்ல. நீங்கள் இதுகுறித்து பேசுகிறீர்கள். உங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிடையகிறார்கள். இந்த பக்கமா, அந்த பக்கமா என்பது குறித்து பேசுவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் அதுபோன்று ஏதாவது நடந்தால், உங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பேன் என்றார்.

    கடந்த சில தினங்களாக கமல் நாத்தின் கோட்டையாக கருதப்படும் சிந்த்வாரா தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தார். இந்தத் தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை அவரது மகன் நகுல் நாத் வெற்றி பெற்றார். பா.ஜனதா 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும் சிந்த்வாரா தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்தார்.

    இந்த தொகுதியில் நான்தான் வேட்பாளர் என அவரது மகன் நகுல் நாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கமல்நாத் இன்று டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவரது மகன் நகுல் நாத் சமூக வலைத்தள முகப்பில் இருந்து காங்கிரஸ் வார்த்தையை நீக்கியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரது மகன் நகுல் கமல்நாத்.

    இருவரும் பா.ஜனதாவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில அரசியலில் கடந்த சில தினங்களாக இதுதான் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான நகுல் நாத் தனது சமூக வலைத்தள முகப்பில் இருந்து காங்கிரஸ் பெயரை நீக்கியுள்ளார். அதேவேளையில் இன்று மாலை கமலாந்த் டெல்லி சென்று பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் இருவரும் பா.ஜனதாவில் சேர அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே மத்திய பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் வி.டி. சர்மா நேற்று, காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியின் முடிவுகளால் அப்செட் ஆகியுள்ளனர். பா.ஜனதா கட்சியின் கதவு காங்கிரஸ் கட்சியின் மேலும் சில சீனியர் காங்கிரஸ் தலைவர்களுக்காக திறந்தே இருக்கிறது.

    அந்த கட்சி தலைவர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பு விவகாரத்தில் அப்செட் ஆகியுள்ளனர். நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்களோ, அவர்களது மனதில் வலி இருந்தாலும் அவர்களும் வரவேற்கப்படுவார்கள்" என்றார்.

    மத்திய பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.எ. தினேஷ் அகிர்வார் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகேஷ் கட்டாரே ஆகியோர் கடந்த 12-ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தனர்.

    சிந்த்வாரா மக்களவை எம்.பி.யான நகுல் நாத், தானாகவே அந்த தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என அறிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

    • ம.பி. சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு
    • ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

    இந்தியாவில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. டிசம்பர் 3 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

    ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ததியா (Datia) நகரில், பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகன் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதில் முந்தைய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முந்தைய ம.பி. முதல்வருமான கமல்நாத்தை கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    நான் பதவியேற்ற போது ம.பி. எப்படி இருந்தது என உங்களுக்கு தெரியும். துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், கும்பலாக அப்பாவி மக்கள் கடத்தப்படுவது, கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்படுவது, கொள்ளையர்கள் அப்பாவி மக்களை அடித்து நொறுக்குவது போன்றவைதான் ம.பி.யின் அடையாளமாக இருந்து வந்தது. நான் முதல்வரானதும் குவாலியருக்கு வந்தேன். காவல் அதிகாரிகளை சந்தித்து, 'ம.பி.யில் ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது கொள்ளையர்கள் இருக்க வேண்டும்' என கூறி உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். காங்கிரஸ் ம.பி.யை ஆளும் போதெல்லாம் மக்களுக்கு நாசமும் இழப்புமே மிஞ்சுகிறது. காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக இருந்த போது எந்த நல்ல திட்டத்தை நிறைவேற்றவும் 'பணம் இல்லை, பணம் இல்லை' என புலம்புவதையே வழக்கமாக கொண்டிருந்தார். எதற்கெடுத்தாலும் அழுகின்ற இவரை போன்ற மனிதர் மீண்டும் முதல்வரானால் நன்றாக இருக்குமா?

    இவ்வாறு சவுகன் பேசினார்.

    • ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார்.
    • மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    குவாலியர்:

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருந்து வருபவர் கமல்நாத். இவரது மொபைல் போனை மர்ம மனிதர்கள் ஹேக் செய்தனர். பின்னர் இவரது போனில் இருந்து காங்கிரஸ் பொருளாளர் அசோக் சிங் என்பவரை ஹேக்கர்கள் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார்கள்.

    இதேபோல இந்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுர்ஜித்சிங் சதா, குவாலியர் எம்.எல்.ஏ. சதீஷ் சகார்வார் மற்றும் முன்னாள் காங்.பொருளாளர் கோவிந்த் கோயல் ஆகியோரையும் போனில் மிரட்டினார்கள்.

    இதையடுத்து அந்த மர்ம மனிதர்களை கையும், களவுமாக பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார். உடனே 2 பேர் அவரது பங்களாவுக்கு பணம் வாங்க வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்களது பெயர் சாகர்சிங் பார்மர், பிந்து பார்மர் என்பதும் இருவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்.
    • உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு நீண்ட தூரத்துக்கு நடைப்பயணத்தை இதுவரை யாரும் மேற்கொண்டது இல்லை.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி திகழ்வார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு நீண்ட தூரத்துக்கு நடைப்பயணத்தை இதுவரை யாரும் மேற்கொண்டது இல்லை.

    அதேபோல் இந்திய நாட்டுக்காக இவ்வளவு தியாகங்களையும் நேருவின் குடும்பத்தை தவிர வேறு யாரும் செய்ததில்லை. ஆட்சி அதிகாரத்துக்காக ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை. யாரை வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தும் வல்லமை கொண்ட மக்களின் நலனுக்காகவே அவர் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் தங்களது மகன்களுக்காக சிலர் எம்பி சீட் கேட்டு நிர்பந்தித்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட தகவலுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு மூத்த தலைவர்கள்தான் காரணம் என்று ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.

    குறிப்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு எம்.பி. சீட் கேட்டு மிரட்டியதை ராகுல் ஆதங்கத்துடன் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

    ப.சிதம்பரம் தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றால் காங்கிரசில் இருந்தே விலகி விடுவேன் என்று மிரட்டியதையும் ராகுல் அந்த கூட்டத்தில் விமர்சித்தார். அது மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தங்கள் மகன்களின் தொகுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர் என்றும் தெரிவித்தார்.


    ராகுலின் இந்த அதிரடி குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம், அசோக் கெலாட் இருவரும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் நேற்று போபால் திரும்பிய மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் இது தொடர்பாக கூறுகையில், “நான் எனது மகனுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை. இது தொடர்பாக ஒருபோதும் நான் ராகுல்காந்தியிடம் பேசியதும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்ட முதல்-மந்திரி பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

    ராகுலின் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் அளித்துள்ள மறுப்பு தகவல், காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கமல் நாத் முதல்வராக பொறுப்பேற்றார்.

    230 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 109 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 4 சுயேட்சை உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது.

    இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா (பாஜக) கூறியதாவது:-


    மத்திய பிரதேச சட்டமன்ற சிறப்பு அமர்வை விரைவில் கூட்டும்படி கவர்னருக்கு கடிதம் எழுத உள்ளேன். விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அரசின் ஸ்திரத்தன்மையை  சோதிக்கவும் விரும்புகிறோம்.

    முடிவுகள் எடுப்பதிலும், நிதி விவகாரங்களிலும் இந்த பலவீனமான காங்கிரஸ் அரசுக்கு சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இருக்கிறதா என்பதை சோதிக்க விரும்புகிறோம். அரசு  மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எந்த முயற்சியையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஸ்திரத்தன்மை குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரும் என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத் கூறியுள்ளார். #KamalNath

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் காங்கிரஸ் 5 தொகுதியில் கூடுதல் பெற்று அட்சியை பிடித்தது. ஆனால் ஓட்டு சதவீதத்தில் பா.ஜனதாவே சற்று முன்னிலை பெற்றது. பா.ஜனதாவுக்கு 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.9 சதவீதமும் கிடைத்தன.

    பாராளுமன்ற தேர்தலிலும் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று முதல்கட்டமாக 6 தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பிரதேசத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டது.

    100 யூனிட்டுக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் ரூ.200 ஆக இருந்தது. இதே போல் விவசாயிகளுக்கு பென்சனும் வழங்கப்பட்டுள்ளது.

    நாங்கள் கொண்டுவந்த இந்த திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்து விட்டது. இதனால் தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

    பாராளுமன்ற தேர்தலில் எது பிரச்சினை என்று மக்களுக்கு நன்கு தெரியும். பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து அரசியல் செய்வதை மக்கள் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள்.

    புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானது தொடர்பாக மோடி முதலில் பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பில் குளறுபடு ஏற்பட்டது எப்படி என்று பற்றி அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும். மோடி அரசின் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வரும். தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரும்.

    பெரும்பாலான கட்சிகள் பா.ஜனதாவை எதிர்க்கின்றன. இதனால் தேர்தலுக்கு பிறகு அவை அனைத்தும் ஒன்றிணைக்கப்படும். பா.ஜனதாவை வெளியேற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக இருக்கும்.

    திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா, ராஷ்டிரிய சமிதி, ஆகிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் அவைகள் பா.ஜனதாவை கடுமையாக எதிர்க்கின்றன. இதுமாதிரியான கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற ஒன்றிணைக்கப்படும்.

    மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றிபெறும்.

    இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார். #KamalNath 

    பாஜக தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியினரை குறி வைத்து வருமானவரி சோதனை நடத்தியதாக கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளார். #kamalnath
    போபால்:

    மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 11 கோடி பணம் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

    இது சம்பந்தமாக கமல்நாத் கூறியதாவது:-

    மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக தனது எந்திரத்தை எதிர்க்கட்சியினரை பழிவாங்க பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

    5 ஆண்டு காலத்தில் இவர்கள் செய்த சாதனையை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

    இந்த தோல்வி பயத்தால் தான் வருமான வரித்துறையினரை ஏவி எதிர்க்கட்சியினரை குறி வைத்து சோதனை நடத்துகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இதைத்தான் செய்தார்கள். இப்போதும் அது தொடர்கிறது.



    பா.ஜ.க. அரசின் இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இவர்கள் என்னவெல்லாம்  செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதன் மூலம் எங்களை நீக்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.

    மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அவர்கள் தக்க பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு கமல்நாத் கூறினார்.

    இது சம்பந்தமாக பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறும் போது ‘மம்தா பானர்ஜி வழியில் கமல்நாத்தும் செயல்பட ஆரம்பித்துள்ளார். வருமான வரித்துறை கடமையை செய்கிறது. அதை விமர்சிப்பது ஒரு முதல்-மந்திரிக்கு அழகல்ல. வருமான வரி சோதனையில் பணமும், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதற்கு கமல்நாத் பதில் சொல்ல வேண்டும்’ என்றார். #kamalnath
    மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பேசியுள்ளார். #Sachinpilot #congress #bjp #kamalnath
    மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பசு இறைச்சி விவகாரத்தில் மூவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் கடும் விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களே விமர்சனம் செய்தனர். 

    இந்நிலையில் பெங்களூருவில் தி இந்து பத்திரிக்கையின் 'ஹடூல்' எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் துணை முதல்வருமான சச்சின் பைலட், மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறியுள்ளார். 

    பசுக்கள் வதை மற்றும் பசு கடத்தல் விவகாரங்களில் வேறுபாட்டுடன் செயல்பட வேண்டும். என்னுடைய சொந்தக் கருத்து என்னவென்றால் பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், சக மனிதன் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும், கண்ணியமற்ற முறையில் சக மனிதனை தாக்கும் செயல்களுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். புனிதமான விலங்குகளை காப்பாற்றுவது நல்லது. எனக்கு அதில்  நம்பிக்கை உண்டு. ஆனால், மாடா? மனிதனா? என்று வரும்போது மனிதனுக்குத்தான் முக்கியம் தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

    கமல்நாத் மத்தியபிரதேசத்திற்காக இப்பிரச்சினைகளில் முடிவெடுப்பதில் சிறந்தவர். ஆனால் ராஜஸ்தானுக்காக அல்ல என்பதுதான் எனது எண்ணம் என கூறியுள்ளார். #Sachinpilot #congress #bjp #kamalnath
    ×