என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரும் - கமல்நாத்
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் காங்கிரஸ் 5 தொகுதியில் கூடுதல் பெற்று அட்சியை பிடித்தது. ஆனால் ஓட்டு சதவீதத்தில் பா.ஜனதாவே சற்று முன்னிலை பெற்றது. பா.ஜனதாவுக்கு 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.9 சதவீதமும் கிடைத்தன.
பாராளுமன்ற தேர்தலிலும் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று முதல்கட்டமாக 6 தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பிரதேசத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டது.
100 யூனிட்டுக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் ரூ.200 ஆக இருந்தது. இதே போல் விவசாயிகளுக்கு பென்சனும் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் கொண்டுவந்த இந்த திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்து விட்டது. இதனால் தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலில் எது பிரச்சினை என்று மக்களுக்கு நன்கு தெரியும். பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து அரசியல் செய்வதை மக்கள் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள்.
புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானது தொடர்பாக மோடி முதலில் பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பில் குளறுபடு ஏற்பட்டது எப்படி என்று பற்றி அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும். மோடி அரசின் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.
பாராளுமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வரும். தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரும்.
பெரும்பாலான கட்சிகள் பா.ஜனதாவை எதிர்க்கின்றன. இதனால் தேர்தலுக்கு பிறகு அவை அனைத்தும் ஒன்றிணைக்கப்படும். பா.ஜனதாவை வெளியேற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக இருக்கும்.
திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா, ராஷ்டிரிய சமிதி, ஆகிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் அவைகள் பா.ஜனதாவை கடுமையாக எதிர்க்கின்றன. இதுமாதிரியான கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற ஒன்றிணைக்கப்படும்.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றிபெறும்.
இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார். #KamalNath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்