search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi"

    • இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.
    • தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள்.

    தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து தை திருநாளை கொண்டாடினார். அப்போது பாஜக தொண்டர்கள் சிலர் இது அக்கா பொங்கல், கவர்னர் அக்கா பொங்கல் என கோஷமிட்ட நிலையில், இடை மறித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.

    பொங்கல் விழாவையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

    தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தி கற்றுத்தர ஏன் இந்த பாரபட்சம். இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்தியை யாரும் திக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்று சொல்லு போது இதுதான் சமச்சீர் கல்வி இல்லாமல் போகிறது. தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள். அரசு பள்ளி குழந்தைகளுக்கு அது தமிழகத்தில் மறுக்கப்படுகிறது.

    தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் இந்தி கற்றுதரப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்தினால் தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருக்கிறதா? மூன்று மொழி கொள்கை இருக்கிறதா? பல மொழி கொள்கை இருக்கிறதா? இல்லையென்றால் பொய் மொழி கொள்கை இருக்கிறதா? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா.
    • உள்துறை மந்திரி அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தனர்.

    மதுரை:

    மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    உள்துறை மந்திரி அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவரின் நடைபயணம் மதுரையை அடைந்தது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மு.க.ஸ்டாலினுக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரியாததால் மத்திய மந்திரி அமித்ஷா கூறியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நமது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார். இந்த விவகாரத்தில் தி.மு.க. இன்னும் அரசியல் செய்து வருகிறது. ஸ்டாலினும், உதயநிதியும் ஸ்டாலினுக்கு மக்களிடம் பேச வேறு விஷயமில்லை. பிரதமர் மோடி உலக சுற்றுப்பயணத்தில் தமிழ் மொழியின் பெருமை பற்றி பேசினார். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போகிறார். வரும் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்பது உறுதி என தெரிவித்தார்.

    • டி.ஜி.பி.க்கு பிரியாவிடை அணிவகுப்பு கொடுக்கப்பட்டது.
    • வழக்கத்துக்கு மாறாக போலீசாருக்கு இந்தியில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து கோரிமேடு போலீஸ் மைதானத்தில், அவருக்கு விடைகொடுக்கும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் மற்றும் ஏ.டி.ஜி.பி, சீனியர் எஸ்.பி.க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் என போலீஸ் துறை அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இதில் டி.ஜி.பி.க்கு பிரியாவிடை அணிவகுப்பு கொடுக்கப்பட்டது. இந்த அணிவகுப்பிற்கு காரைக்கால் சீனியர் எஸ்.பி. மணிஷ் தலைமை வகித்தார். வழக்கமாக அணிவகுப்பில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) ஆங்கிலத்தில் வழங்கப்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக போலீசாருக்கு இந்தியில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) வழங்கப்பட்டது.

    இவ்விவகாரம் போலீஸ் துறை வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

    வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரையும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புத்தகங்கள் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் தபால் வேன் மூலமாக அனுப்பும் பணி தொடங்கியது.

    இப்பணியை புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் பெங்களுருவில் இருந்தும், தமிழ் பாடப் புத்தகம் தமிழக பாடநூல் கழகத்தில் இருந்து வந்துள்ளது. பள்ளி சீருடைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது.

    தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து கட்டணங்களை இறுதி செய்து வெளியிடுவார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் என்னை வந்து சந்தித்தனர். இது சம்பந்தமாக முதல்-அமைச்சர், துறைச் செயலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    தமிழை கட்டாயப்பாடமாக்க என்னென்ன சாத்திய கூறுகள் இருக்கிறதோ, எந்தெந்த மாநிலங்களில் அதுபோன்று உள்ளதோ என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

    இதில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை. அவரவர் விரும்பும் பாட மொழியை எடுத்து படிக்கலாம். இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது தான் திணிப்பாகும்.

    இது தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை போக்க அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.

    • வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.
    • தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.

    திருப்பூர் :

    ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.அவர்கள் கூறும் போது, தவறான வீடியோக்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளது. எனவே பயமின்றி மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளோம். தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.

    மேலும் ெரயில்வே காவல்துறையினர், புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு இந்தி மொழியில் பேசி நீங்கள் பாதுகாப்பாக உள்ளனர். எந்த அச்சமும் தேவையில்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் இந்தியை ஒருபோதும் நுழைய விட மாட்டோம் என்று மதுரையில் வைகோ பேசினார்.
    • தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான ஒரு கவர்னரை இதுவரை கண்டதில்லை.

    மதுரை

    மதுரையில் மொழிப் போர் தியாகிகளை போற்றி டும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ம.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பூமிநாதன் எம். எல். ஏ. தலைமை தாங்கி னார். மாநில தொண்ட ரணி செயலாளர் பாஸ்கர சேது பதி முன்னிலை வைத்தார்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை யாற்றினார். அவர் பேசிய தாவது-

    தமிழ்நாடு தான் எங்கள் நாடு என்று ஓங்கி உரத்த குரலில் பேசிய பெரியார், தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த தியாக சீலர்கள் என தமிழ்நாட்டில் பல்வேறு தியாகங்களை செய்து மொழியையும், இனத்தையும் காத்து நிற்பவர்கள் நம் தலைவர்கள். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என்று நினைத்தால் நாடு துண்டாகும் என்று அன்றைக்கே எச்சரித்தார் தந்தை பெரியார். 1963-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இந்தி தான் ஆட்சி மொழி எனக் கூறி ஆட்சி மொழி மசோதா கொண்டு வந்தபோது பேரறிஞர் அண்ணா தலைமையில் அந்த அரசியல் சட்ட நகலுக்கு தீ வைத்து கொளுத்தும் போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு தலைவர் கலைஞர் என்னை வழியனுப்பி வைத்தார். நானும் போராட்டத்தில் ஈடுபட்டேன். அன்றைக்கு தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு தொடர்ந்து தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இப்போதும் மத்திய ஆட்சியாளர்களாலும், சனாதன சக்திகளாலும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. இந்துத்துவ அடிப்படை என்று கூறி நம்மை பிரிக்க பார்க்கிறார்கள். மோடியை போல மக்களை ஏமாற்றுபவர் நாட்டில் யாருமில்லை. இந்துத்துவா சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் விரட்டி அடிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

    தமிழ்நாட்டில் இருக்கின்ற கவர்னர் தமிழகம் என்கிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் தமிழ்நாடு என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான ஒரு கவர்னரை இதுவரை கண்டதில்லை. தமிழ் மொழிக்காக உயிரைத் தந்த போராளிகளின் மீது ஆணையாக கூறுகிறோம் இந்துத்துவாவையும், இந்தியையும் தமிழ்நாட்டில் ஒருபோதும் நுழைய விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் சுப்பையா, மனோகரன், பசுபதி அம்மாள், கீரைத்துறை பாண்டியன், முனியசாமி, அன்னமுகமது, மகபூப்ஜான், தொண்டரணி அமைப்பாளர்கள் பச்ச முத்து, சண்முகவேல், ராஜா என்ற ராஜ்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    • ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்.
    • தாய்மொழி எமது பிறப்புரிமை கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

    சென்னை

    கேரளா எம்.பி ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் ஹிந்தியை பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக பேசிய விடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்துவிடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அந்த டுவீட் மேற்கோள்காட்டி புதிய பதிவை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.

    75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும். ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகில் நடந்தது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். வடக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கழக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேசியதாவது :- இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தி.மு.க.வின் முதன்மை கொள்கையாகும். இந்தி எதிர்ப்பு போராட்டம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்தியை மக்களிடம் திணிக்கக்கூடாது. இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் குலக்கல்வி திட்டத்தை புகுத்தும் வகையில் பாடங்கள் அமைந்துள்ளது.

    இந்தியை எந்த காலத்திலும் திணிக்க அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார். கனமழை பெய்தபோதும் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளார். தொழில் நகரான திருப்பூரில் நூல் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நூல் விலை படிப்படியாக குறைந்து தொழில் நடக்கிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்ல இப்போது இருந்தே பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, தம்பி கோவிந்தராஜ், தெற்கு மாநகர பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகிகள் திலகராஜ், சிவபாலன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.



    பரமக்குடி நகர் பகுதியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தி.மு.க. நகர செயலாளர்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம் ஆகியோர் தலைமையில் 36 வார்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. அரசு கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் இந்தி திணிப்பால் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் தெருக்களில் தி.மு.க.வினர் கொடிகளை ஏந்தி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செந்தில் செல்வானந்த் மற்றும் கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டிதட்டி கிராம சாலையில் போக லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் அவைத் தலைவர் அப்பாஸ் கனி பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் முதலூர் ரவி, மஞ்சூர் கனகராஜ், கலைச்செல்வி முன்னிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உறுப்பினர் தனிக்கொடி, ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்று நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.

     


    • ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
    • ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது?
    • தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க.வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது?

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தீர்மானம் மட்டும் போடத்தான் இந்த ஆட்சியா? தமிழக அரசின் இருமொழி கொள்கை என்பது என்ன? ஆங்கிலம் கட்டாயம், ஆனால் தமிழ் கட்டாயம் இல்லை என்பதுதானே? அதனால்தான் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற பெயரில் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தமிழே படிக்காமல், படிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இது தமிழ்மொழிக்கு செய்யும் துரோகம் இல்லையா?

    தமிழக அரசு செலவில் தமிழ்மொழியை படிக்காமலேயே, கல்லூரி வரை படிக்க வசதியாக, அரசு செலவில் இயங்கும் அரசு பள்ளிகள் பட்டியல் உண்மையா? இல்லையா? பயிற்றுமொழியாக உருது மொழியில் 56 பள்ளிகள், மலையாள பள்ளிகள் 50, தெலுங்கு பள்ளிகள் 35, கன்னட பள்ளி 1, இதுதவிர பாடமொழியாக உருது மொழியில் 204 பள்ளிகள், மலையாள மொழியில் 50 பள்ளிகள், தெலுங்கு மொழியில் 234 பள்ளிகள், கன்னட மொழியில் 60 பள்ளிகள் அரசு செலவில் இயங்குகின்றன. தமிழ்மொழியை நீக்கிவிட்டு பிற மொழிகளை சொல்லித்தரும் அரசு இந்தியை மட்டும், விருப்பம் உள்ளவர்கள் படிக்க அனுமதி மறுப்பது ஏன்? கல்வியில் ஏன் அரசியல் செய்கிறீர்கள்?

    50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது?

    தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க.வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது? ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார். தமிழுக்கு எதுவுமே செய்யாமல் தமிழுக்காக போராட்டம் என்ற பொய்ப் பிரசாரத்தை இன்னும் எத்தனை நாள் தி.மு.க. சொல்லிக்கொண்டு இருக்கும்? இந்தி எதிர்ப்பு போர் தி.மு.க.வை 1967-ல் அரியணை ஏற்றியது. இப்போது காலம் மாறிவிட்டது. அதே இந்தி எதிர்ப்புதான் தி.மு.க.வின் வீழ்ச்சிக்கும் காரணமாகப்போகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இன்று காலை தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ -மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன், மாவட்ட துணை செயலாளர் பிரேம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்பாட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×