search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்"

    • உள்ளூர் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநிலத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு.
    • பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர்

    கோவை,

    தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக கோவை உள்ளது. ஆனாலும் இங்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரை க்கொம்பாக இருக்கிறது. எனவே இங்கு உள்ள பல்வேறு தொழிற்சா லைகள், வடமாநில தொழி லாளிகளை வேலை க்கு அமர்த்தி உள்ளன.

    உள்ளூர் தொழிலா ளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநி லத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு. எனவே அவர்களுக்கு கோவை மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பொதுவாக பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர். ஆனால் சொந்த ஊருக்கு சென்றவர்களில் 30 சதவீதத்துக்கும் மேற்ப ட்டோர் வேலைக்கு திரும்ப வில்லை. இது கோவை மாவட்ட தொழி ற்சாலை நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்களை மீண்டும் கோவைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி தரப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான வேலைகள் அப்படியே நிற்கிறது.

    எனவே வடமாநில தொழிலாளிகள் கோவைக்கு உடனடியாக புறப்பட்டு வருவதற்கு ஏதுவாக, தொழிற்சாலைகள் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக அவர்களை விமானத்தில் திருப்பி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டுகள் பதிவு செ ய்யப்ப ட்டு வருகின்றன. வடமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளிகளை கோவைக்கு விமானத்தில் அழைத்து வரவேண்டும் என்றால், ஒருவருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் செலவு பிடிக்கும். கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு, வெளிமாநில ஆர்டர்களை குறிப்பிட காலத்துக்குள் முடித்து தரவேண்டும் என்ற காலவரையறை நிர்ணயிக்க ப்பட்டு உள்ளது. எனவே அந்த நிறுவனங்கள் கூடுதல் செலவை கருத்தில் கொள்ளா மல் வடமாநில ங்களில் வசிக்கும் தொழி லாளர்களை விமானத்தில் மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுக ளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    • 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடியிருப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்மநபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் கரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 14 வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக 14 தற்காலிக போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இரவு நேரங்களில் சோதனை சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரணை நடத்தி அவர்களுடைய முகவரிகளை கேட்டு எழுதப்பட்ட பின்னரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம், முதற்கட்டமாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே நேற்று மேலும் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியில் இருந்து 600 போலீசார் வரவழைக்கபட்டு, மொத்தம் 750 போலீசார் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கரும்பு ஆலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் உள்ளிட்டோர் வெல்ல ஆலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறியதாவது:- ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் 20 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக சோதனை சாவடிகள் மற்றும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கு மண்டலத்தில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் கள்ளசாராயம் விற்பனை ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • வடமாநில தொழிலாளர்களைஎப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டு துறை சார்பில் கோவை மண்டல அளவிலான வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் தொழிலாளர் நலத்துறை, போலீசார், தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடமாநில தொழிலாளர்களைஎப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில்துறையினர் பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த கூட்டம் குறித்து அதில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், எளிதாக தரவுகளை கையாளும் வகையில், தமிழக அரசு வடமாநில தொழிலாளர்களுக்கு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.அனைத்து தன்னார்வ அமைப்புகள், தொழில்துறை உள்ளிட்டோரை அழைத்து கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது என்றார்.

    • ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டது.
    • விசாரணைக்காக மீண்டும் வருகிற 13-ந்தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

    தூத்துக்குடி:

    வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

    இதைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. நிர்வாகியான வக்கீல் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியபாகம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வக்கீல் பிரசாந்த் குமார் உம்ராவ், சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் பிரசாத் குமார் உம்ராவ் நேற்று விசாரணைக்காக ஆஜர் ஆனார்.

    அவரிடம் டி.எஸ்.பி.க்கள் வசந்தராஜ், சத்யராஜ், தூத்துக்குடி மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். காலை தொடங்கிய விசாரணை மாலை வரை 8 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் அவரை விசாரணைக்காக மீண்டும் வருகிற 13-ந்தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

    பிரசாந்த் குமார் உம்ராவுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு உதவியாக பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட வக்கீல் அணி சுரேஷ்குமார் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் அவருடன் உடனிருந்தனர்.

    இந்நிலையில் ஜாமீன் தொடர்பான வழக்கில் சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்து தொடர்பாக வக்கீல் பிரசாந்த் குமார் உம்ராவ் இன்று தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜரானார்.

    • வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.
    • தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.

    திருப்பூர் :

    ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.அவர்கள் கூறும் போது, தவறான வீடியோக்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளது. எனவே பயமின்றி மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளோம். தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.

    மேலும் ெரயில்வே காவல்துறையினர், புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு இந்தி மொழியில் பேசி நீங்கள் பாதுகாப்பாக உள்ளனர். எந்த அச்சமும் தேவையில்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    • தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • தீ வைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீசும் சம்பவமும் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல், புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் ஆகியோருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இங்குள்ள கொட்டகைகள் மற்றும் அங்கு வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடுகளுக்கு கடந்த வாரம் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இதில் 10 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவங்கள் தொடர்பாக 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவர், தனக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய குடிசை வீடுகள் அமைத்திருந்தார். அதில் ஒரு கொட்டகையில் 3 டிராக்டர்களை நிறுத்தி வைத்திருந்தார்.

    நேற்று நள்ளிரவில் கொட்டகைக்கு பின்புறம் வந்த மர்ம நபர்கள், அதற்கு தீ வைத்தனர். இதில் குடிசைகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்களும் தீப்பிடித்து எரிந்தன.

    இதை பார்த்த துரைசாமி, ஓடிவந்து டிராக்டரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கூரையில் எரிந்து கொண்டிருந்த தீ அவர் மீது விழுந்தது.

    இதையடுத்து டிராக்டரை விட்டுவிட்டு வெளியில் ஓடி வந்தார். இதில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

    தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. டிராக்டர்கள் தீயில் எரிந்து நாசமானது.

    இதேபோல் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் பழனிச்சாமி (55) என்பவர் கூரையின் மீது தகரம் வேய்ந்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

    இதை பார்த்து உள்ளே படுத்திருந்தவர்கள், கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவி, அதிலிருந்த 10 மூட்டை அரிசி, ரூ.30,000, பிரிட்ஜ், பீரோ, கட்டில் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கடந்த சில நாட்களாக பரமத்திவேலூர் பகுதியில் தொடர்ந்து தீ வைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீசும் சம்பவமும் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதையடுத்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • பரமசிவம்பாளை யத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினா்.
    • 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் அருகே ரேஷன் அரிசி பதுக்கியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இவரிடமிருந்து 350 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா்.

    திருப்பூா், கருக்காங்காடு அருகே உள்ள பரமசிவம்பாளையத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கிவைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பரமசிவம்பாளை யத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். அங்கு பதுக்கி வைத்திருந்த 350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புள்ளாரெட்டிகாரி பள்ளியைச் சோ்ந்த கே.ஆசம்கதரிரெட்டி (37) என்பவரைக் கைது செய்தனா்."

    • பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பாணிபுரிந்து வருகின்றனர்.
    • இது போன்ற சம்வங்கள் நிகழாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எம்.எஸ். எம்.ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கபடுவதாக ஏற்பட்ட வதந்தியை தொடர்ந்து அம்மாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக பல தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஹார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பாணிபுரிந்து வருகின்றனர். பல்லாண்டுகளாக இவர்கள் இங்கே பணியாற்றியும் ஒரு சிலர் வளர்ந்து இங்கே தொழில் நிறுவனங்களை துவங்கியும் அமைதியான முறையில் வாழ்ந்து வரும் போது இப்போது ஏற்பட்டுள்ள இந்த அசாத்திய சூழ்நிலை துரதிர்ஷ்டவிதமானது.

    கடந்த எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொரோனா கால ஊரடங்கின் போது புலம் பெயர் தொழிலாளர்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் தேடி அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது. மேலும் தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி உற்றாருக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தந்து அவர்களின் சொந்த மாநிலத்திற்கே சிரமமின்றி அழைத்து செல்லபட்டதை நினைவு கூற விரும்புகிறேன். திருப்பூர் மாவட்டத்தில் பெருகி கிடக்கும் வேலை வாய்ப்பின் மூலம் திருப்பூர் மாநகரிலும் பல்லடத்திலும் பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு, சாய ஆலை, நூற்பாலை, விசைத்தறி, ப்ரிண்டிங் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள், ஏற்கனவே திமுக ஆட்சி அமைந்தது முதல் நூல் விலை உயர்வு, கடுமையான மின்

    கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் ஜவுளி தொழில் புலம் பெயர் தொழிலாளர்கள் பணியை விட்டு செல்லும் நிலையில் மிகப்பெரிய சவாலையும், உற்பத்தி தடையையும் சந்திக்க வேண்டிய அபாயம் உள்ளது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இப்பிரச்சனையை சீர் செய்ய அனைத்து முயற்ச்சிகளும் எடுத்து வருவது ஆறுதல் அளிக்கும் நிலையில் தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்களை தீர்வு கண்டு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் என்றும் தங்களை நம்பி வருவோருக்கு துணை இருப்பார்கள் என்ற வரலாற்று உண்மையை உறுதிபடுத்துகின்ற வகையில் சிறிதும் சமூக பொறுப்பின்றி தமிழ்நாடு புலம்பெறும் தொழிலாளர்களுக்கு ஆபத்தான மாநிலம் என்பது போன்ற வதந்திகளை பரப்பும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து மேலும் இது போன்ற சம்வங்கள் நிகழாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
    • ஆம்பூர் டி.எஸ்.பி. அறிவுரை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னவரிகம் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷூ கம்பெனி உற்பத்தி தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்க ளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமை வகித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    பணிபுரியும் இடங்களில் ஏதேனும் மிரட்டல் விடுத்தாலோ தொல்லை கொடுத்தாலோ உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மாவட்ட காவல் துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள ஹெல்ப்லைன் சேவையை பயன்படுத்தி குறைகளை தெரிவிக்கலாம் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் வீண் வதந்திகளை நம்பி அந்த தகவலை மற்றவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் எவரேனும் தவறான கருத்துகள் மற்றும் வதந்தி பரப்பினால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்துக்கு உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி முன்னிலை வகித்தார்.

    இதில் வடமாநில தொழிலாளர் 150 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.
    • தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் நிலைமையை நேரில் கண்டறிய பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர்கள் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று கூறினார்கள்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த இடத்திலும் சென்று பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது.

    தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    எனவே சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பாதீர் என்று கேட்டுக் கொண்டேன் என்று கூறினார்.

    • பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
    • சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    எனவே இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 உயர் அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர். இவர்கள் தமிழக அதிகாரிகளிடம் நடந்த விசயங்களை கேட்டறிந்தனர்.

    இந்த குழுவினர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் அங்குள்ள வட மாநில தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார்கள். இந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ள பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அதன்பிறகு கிண்டி ராஜ்பவன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான மனுவையும் கவர்னரிடம் அளித்தார்.

    • சிறிய சம்பவத்துக்கு காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உள்ளது.

    திருப்பூர் :

    வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை ஆணையர் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளா்களின் மீது தாக்குதல் நடைபெறுவதாக வதந்திகள் பரவுவது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

    இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறை, வருவாய்த் துறை ஆகியவை சாா்பில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. இதில், கடந்த ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்போது இணையதளத்தில் பரவி வருவது தெரியவந்துள்ளது. அப்போது நடைபெற்ற சிறிய சம்பவத்துக்கு காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு மேலாளா்களுடன் ஆலோசனையும் நடத்தப்படும். திருப்பூா் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் வதந்தி பரவி வருவது தொழிலாளா்களின் உறவினா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்றாா்.

    வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் கூறியதாவது:- தற்போது சமூக வலைதளங்களில் 3 வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. இதில் 2 வீடியோக்கள் வேறு மாநிலங்களில் நிகழ்ந்தவையாகும். இது திருப்பூரில் நிகழ்ந்ததுபோல ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்புவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில், வதந்தியாகப் பரவும் வீடியோக்களை வடமாநிலத் தொழிலாளா்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த சந்திப்பின்போது திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் அபிஷேக்குப்தா உடனிருந்தாா்.

    புகாா் தெரிவிக்க தனி பிரிவு தொடக்கம்:

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க ஏடிஎஸ்பி., தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் வடமாநிலத் தொழிலாளா்களின் பிரதிநிதிகளும் இருப்பாா்கள். இந்தப் பிரச்சினைகள் தொடா்பாக 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் வடமாநில தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×