search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "north indian labours"

    • உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
    • இங்கே பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு வருகிறார்கள்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தமிழக த்தில் பல்வேறு ஊர்களில் பணிபுரிந்து வருகிறார்கள். கிராமங்கள் வரையிலும் அவர்கள் பரவி, பணியாற்றி வருகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள தொழில்துறைகளில் அவர்களது பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சா லைகளில் தொடங்கி சலூன் கடை வரையில் அவர்கள் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்.

    இவர்களால் தமிழகத்தில் தொழில் உற்பத்தி பெருகி கொண்டிருக்கிறது. இங்கே பணிபுரியும் ஒவ்வொரு வட மாநில தொழிலாளர்களும் நல்ல சம்பளம் பெற்று, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் சிலர் உள்நோக்கத்துடன் பரவ விட்டுள்ளனர். இது இங்கே பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 30 ஆண்டு களாகவே வட மாநில தொழிலாளர்கள் இங்கே பணிக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நல்ல சம்பளம், சாப்பாடு, தங்குவதற்கு பாதுகாப்பான இடம் எல்லாம் தரப்படுகிறது. அவர்கள் இங்கே பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்தியாவிலேயே வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஒரே மாநிலம், நம் தமிழகம் தான்.

    ஆனால், தற்போது வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது போன்ற தவறான பிம்பத்தை சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு இருக்கிறார்கள்.

    இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். அத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது தமிழக காவல் துறையும், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • சிறிய சம்பவத்துக்கு காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உள்ளது.

    திருப்பூர் :

    வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை ஆணையர் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளா்களின் மீது தாக்குதல் நடைபெறுவதாக வதந்திகள் பரவுவது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

    இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறை, வருவாய்த் துறை ஆகியவை சாா்பில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. இதில், கடந்த ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்போது இணையதளத்தில் பரவி வருவது தெரியவந்துள்ளது. அப்போது நடைபெற்ற சிறிய சம்பவத்துக்கு காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு மேலாளா்களுடன் ஆலோசனையும் நடத்தப்படும். திருப்பூா் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் வதந்தி பரவி வருவது தொழிலாளா்களின் உறவினா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்றாா்.

    வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் கூறியதாவது:- தற்போது சமூக வலைதளங்களில் 3 வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. இதில் 2 வீடியோக்கள் வேறு மாநிலங்களில் நிகழ்ந்தவையாகும். இது திருப்பூரில் நிகழ்ந்ததுபோல ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்புவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில், வதந்தியாகப் பரவும் வீடியோக்களை வடமாநிலத் தொழிலாளா்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த சந்திப்பின்போது திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் அபிஷேக்குப்தா உடனிருந்தாா்.

    புகாா் தெரிவிக்க தனி பிரிவு தொடக்கம்:

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க ஏடிஎஸ்பி., தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் வடமாநிலத் தொழிலாளா்களின் பிரதிநிதிகளும் இருப்பாா்கள். இந்தப் பிரச்சினைகள் தொடா்பாக 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் வடமாநில தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிதாக 10 ஆயிரம் பேர் வந்தால் கூட வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல் உள்ளது.
    • வட மாநில தொழிலாளர்கள் விரைவாக தங்களுக்குரிய வேலையை கற்று கொள்கின்றனர்.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று, ஊரடங்கு என சவாலான காலகட்டத்திலும் கூட திருப்பூர் தொழில் துறையினர், தொழில் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் விடாமல் சாதித்து வருவது வியப்புக்குரிய விஷயம் தான்.கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளை வசப்படுத்த, வட மாநில தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தான் தற்போதைய யதார்த்த நிலை.

    ஆரம்ப காலங்களில் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இருந்து மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் வந்த நிலையில் சமீபநாட்களாக நேபாளம், சட்டீஸ்கர், அசாம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வட மாநில தொழிலாளர்கள் வரத்துவங்கியுள்ளனர்.

    பின்னலாடை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.திருப்பூரில் நடந்த தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி ஏற்பாடு குறித்து தகவல் பரிமாற்றத்தின் போது இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், ''ஒரு நாளில், புதிதாக 10 ஆயிரம் பேர் வந்தால் கூட வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல், திருப்பூரில் உள்ளது என்றார்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏ.இ.பி.சி.,) செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியம் கூறுகையில், பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் விரைவாக தங்களுக்குரிய வேலையை கற்று கொள்கின்றனர்.தங்கள் வேலையை பாதியில் விட்டு செல்லாமல், அதில் தங்களை நிலைப்படுத்தி கொள்கின்றனர். வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் பின்னலாடை நிறுவனங்களை இயக்குவது கடினம் என்றார்.

    • மோட்டார் சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
    • 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

    இந்தத் தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இசக்கி, கார்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் திருப்பூர் தாராபுரம் பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது தாராபுரம் மூலனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் குளத்துப்பாளையம் குலுக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உமாநாத் (வயது 47) என்பதும் மேலும் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாநாத் பல்வேறு இடங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • பரமசிவம் பாளையத்தில் தொடக்கப்பள்ளியில் 18 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள்.
    • பெரும்பாலான பெற்றோர் விழிப்புணர்வு இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த பொங்கு பாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.ஒரே வகுப்பறை, ஒரே ஆசிரியர் செயல்பட்டு வருகிறார். பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 22 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 18 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள். 4 பேர் தமிழ் குழந்தைகள்.பரமசிவம் பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் நியூ திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பனியன் மற்றும் அதனை சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் மட்டுமே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலான பெற்றோர் விழிப்புணர்வு இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.பள்ளி ஆசிரியர் தாங்களே தங்கள் முயற்சியில்அவர்களது வீட்டுக்கு சென்று குழந்தைகளை கட்டாயபடுத்தி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

    ஏழ்மை நிலையில் உள்ள பலர் வட மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.விழிப்புணர்வு இல்லாததால் இவர்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில்லை. குழந்தைகளின் படிப்பிற்காக அரசு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது.அரசு வட மாநில தொழிலாளர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    ×