search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness"

    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாம் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய மக்காத தன்மை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உள்ளூர் வெடி மருந்து தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ள நேரங்களில் மட்டும் வெடி வெடிக்கும்படியும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள பேக்கரி, பட்டாசு கடைகள், ஜவுளிக்கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் பல வணிக நிறுவனங்களுக்கு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    புகையில்லாத மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாமினை சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து ஆகியோர் ஏற்பாடு செய்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், கோமதி அம்பாள் மெட்ரிக்பள்ளி, பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • சிறுவளூர் அரசு பள்ளியில் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட காவல் துறை சார்பில் நடத்தப்பட்டது

    அரியலூர்,

    அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ) செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துறையின் மாவட்ட தலைமை கண்காணிப்பு அலுவலக உதவி ஆய்வாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். காவல் மஞ்சித், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முன்னதாக ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார்.முடிவில் ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் சரண்யா கண்ணகி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பெரம்பலூர் போலீசார் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதுமதி (டவுன்), சுப்பையன் (நெடுஞ்சாலை) தலைமையிலான போலீசார் வெவ்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கினால் விபத்துகளை தவிர்த்து விடலாம், என்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆரோக்கிய மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.43-ம் இணைந்து மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆரோக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி, காயாமொழி புற மருந்தக கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரூபன் கிங்க்ஸ்லி மற்றும் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் பிந்துஜா தரண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இவ்வுரையில் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றுடன் வைட்டமின் சி நிறைந்த பழங்கள், மெக்னீசியம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று கூறினர். நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவிதா, தீபாராணி மற்றும் அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
    • டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவும் முறைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆற்றி வரும் பணிகள் குறித்து பேசினார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கலைமணி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவக்கோட்டை ஒன்றியத் வட்டார தலைவர் ரகமதுல்லா டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவும் முறைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.மாணவர்களுக்கு துளிர் மாத இதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சிவதீபன்,திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.  

    • மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அரியலூரில் நடைபெற்றது
    • விழிப்புணர்வு பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட வனத்துறை சார்பில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தடி நீரை சேமிக்க, மரம் வளர்ப்போம் என்பன உள்பட மரம் வளர்க்க வேண்டியதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் எழுதப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் சந்தைப்பேட்டை வழியாக சென்று பழைய பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. முன்னதாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவ-மாணவிகள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில், அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், பெரம்பலூர் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான போலீசார் தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கினால் விபத்துகளை தவிர்த்து விடலாம், என்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் சுப்பையன் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • அரியலூர் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும் பூமிப் பந்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓசோன் படலத்தை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாயக் கடமையாகும்நாகரிக வளர்ச்சியில் மனிதன் பயன்படுத்தும் பல பொருள்கள் ஓசோன் படலத்தை சிதைக்கின்றன. ஓசோன் சிதைவை பாதுகாக்கும் ஒரே வழி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.பூமியில் உயிரினங்களின் ஆதாரம் மரங்களே ஒவ்வொரு மாணவரும் குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.முன்னதாக பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன் வரவேற்றார் . முடிவில் செந்தமிழ்ச் செல்வி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்கொண்டனர்.

    • பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
    • சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது, சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளினாலும், வாகனங்களில் நிறுத்தி விற்பனை செய்யும் உணவுப்பொருட்களை வாங்க வரும் நபர்களும் சாலையில் வாகனத்தை நிறுத்துவதாலும் உள்ளிட்டவைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. அவற்றை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும் விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள்,போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிகம் வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர சட்டம்,ஒழுங்கு குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன்,மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா விஜயன் , துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மண்வளம் குறித்தும், சுகாதாரம் காப்பது குறித்தும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் என்னுடைய தாய் மண்- எனது தேசம் என்ற தலைப்பில் பொது சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் மண் வளத்தை காக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுவதை தடுத்து மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மரக்கன்றுகள் நடவு செய்து கிராமத்தின் பொது சுகாதாரம் மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்துதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றிய ஆணையர் பால் பிரான்சிஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் ,வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மண்வளம் குறித்தும், சுகாதாரம் காப்பது குறித்தும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி ஒருங்கிணைத்திருந்தார்.

    • அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் கல்யாணி முன்னிலை வகித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன்(தளி) ,போதை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.

    அதைத் தொடர்ந்து காணொளி வாயிலாக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் என்.சி.சி, கல்லூரி மாணவர்கள், போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர். பேரணி கல்லூரியில் இருந்து உடுமலை திருமூர்த்திமலை சாலையை சென்றடைந்து மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ்(சட்டம்ஒழுங்கு), சந்திரமௌலி(மதுவிலக்கு)உள்ளிட்ட போலீசார், மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ப.விஜயா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் ராசேந்திரன்,கார்த்திகா உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று உடுமலை உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், கொமரலிங்கம், தளி, அமராவதிநகர், கணியூர் உள்ளிட்ட காவல் சரக பகுதியில் 20 இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சம்பந்தமான ஒளிபரப்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது. இந்தப் பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் போலீசார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக் கூறியதுடன் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    • கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா்.
    • திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

    திருப்பூா்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா். தாவரவியல் துறை தலைவா் ஆா்.குருசாமி வரவேற்புரையாற்றினாா்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சவூதி அரேபியா தபுக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் முகமது அலிசயத், கடல் சாா்ந்த இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது என்ற தலைப்பில் பேசினாா்.இந்தக் கருத்தரங்கில், தாவரவியல் துறை செயலாளா் அபிநயா, கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×