search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    கோவில்பட்டி பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மன நல சமூக பணியாளர் பெரியசாமி மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக செயல்முறை விளக்கம் அளித்தார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்ட மன நல திட்டத்தின் படி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன், மருத்துவர் பூவேஸ்வரி அவர்களின் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் வரவேற்று பேசினார். ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா முன்னிலை வகித்தார்.

    மன நல சமூக பணியாளர் பெரியசாமி மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக செயல்முறை விளக்கம் அளித்தார். மாவட்ட மன நல திட்ட மருத்துவர் நிரஞ்சனா தேவி அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு தற்கொலை எண்ணம் வராத அளவிற்கு அறிவு பூர்வமான விளக்கங்கள் மற்றும் மன அழுத்தத்தை கையாளும் முறை பற்றி மாணவ, மாணவிகளுடன் கலந்து உரையாடினார்.

    நிகழ்ச்சியின் நிறைவாக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். நிகழ்வில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மன நல காப்பக மேற்பார்வையாளர்கள் மாடசாமி, ராம் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×