search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் ஐ.எஸ்.ஐ., முத்திரை குறித்து ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கோத்தகிரியில் ஐ.எஸ்.ஐ., முத்திரை குறித்து ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பி. ஐ. எஸ் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் ஐலேண்ட் அறக்கட்டளைஅரங்கில் நடைபெற்றது.
    • பயிற்சி முகாமை கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

    அரவேணு:

    இந்திய தர அமைவிடம் கோவை மற்றும் ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பி. ஐ. எஸ் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் ஐலேண்ட் அறக்கட்டளைஅரங்கில் நடைபெற்றது.

    பயிற்சி முகாமை கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் ராஜன் வரவேற்றார். நுகர்வோர் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சிட்டிசன் வாய்ஸ் ஜெயராமன் உரை நிகழ்த்தினார். பி. ஐ. எஸ்-ன்பொதுவான பணிகள் குறித்து ராஜிவ் பயிற்சி வழங்கினார்.

    இதில் உணவு பாதுகாப்பு அதிகாரி சிவராஜ், கோத்தகிரி அணைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் லியாகத்அலி, பொருளாளர் மகாராஜா சந்திரன், சுதாகேஸ் ரமேஷ், அமைப்பின் சார்பில் பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, இணை செயலாளர்கள் ஜம்புலிங்கம்,கண்மணி, முகமதுஇஸ்மாயில், கிரேஸி, வினோபா போப், விபின் குமார், ஷாஜகான், லெனின் மார்க்ஸ், ஜார்ஜ் பால், மற்றும் திரைசா,லலிதா,விக்டோரியா, ராதிகா,யசோதா, சங்கீதா, மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . முடிவில் கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்

    Next Story
    ×