search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

    யூனியன் சேர்மன் பாலசிங் குழந்தைகள் பாதுகாப்பு கையேடுகளை வழங்கிய போது எடுத்தபடம்.

    உடன்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • தமிழகஅரசின்சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு சார்பில் உடன்குடி வட்டார அளவிலான குழந்தைகள்பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஓன்றிய அரங்கில் நடந்தது.
    • இலவச தொலைபேசி எண் 1098, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்தல், பெண் குழந்தைகளை பெற்றோர்கள் அதிககவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார்.

    உடன்குடி:

    தமிழகஅரசின்சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு சார்பில் உடன்குடி வட்டார அளவிலான குழந்தைகள்பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஓன்றிய அரங்கில் நடந்தது.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். குழுந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசுஎடுத்து வரும் சீரிய நடவடிக்கைகள், அமல்படுத்தியுள்ள சட்டங்கள்குறித்து பேசி விழிப்புணர்வு எண்கள் கொண்ட பலகையைத் திறந்து வைத்தார்.

    குழந்தைகள் பாதுகாப்பில் சமூக நலத்துறை, மருத்துவம், பள்ளிகள், ஊராட்சி களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், எடைசத்துகுறைபாடு உடையவர்களை கண்டறிதல், இலவச தொலைபேசி எண் 1098, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குமறுவாழ்வுஅளித்தல், பெண் குழந்தைகளை பெற்றோர்கள் அதிககவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மலர்கொடி சுகிர்தா, ஜேம்ஸ், சமூக நலத்துறை அலுவலர்கள் ஞானேஸ்வரி, கிறிஸ்டி விஜயராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சைல்டு லைன் உறுப்பினர் தங்கமது, கிறிஸ்தியாநகரம் நவஜீவன் விடுதி பொறுப்பாளர் ஜேசுதாசன், சிறுநாடார்குடியிருப்பு ஊராட்சி மன்றத் தலைவி கமலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாவாஜி பக்கீர் முகைதீன் வரவேற்றார்.

    Next Story
    ×