search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boycott"

    • டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது.
    • குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது நீண்ட கால பிரச்சனைகளை நிறைவேற்றாததை கண்டித்து ஆங்காங்கே மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள திரு.வி.க. வீதி பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை கண்டித்தும், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு போர்டு வைத்து உள்ளனர்.

    மேலும் அதன் மேல் பகுதியில் கருப்பு கொடி கட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    ஈரோடு சூரம்பட்டி திரு.வீ.க. வீதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். சூரம்பட்டி காந்தி ஜி மெயின் ரோட்டில் வலது புறம் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எங்கள் பகுதி ஜனத்தொகை அதிகம் உள்ள நெருக்கடியான பகுதியாகும்.

    இங்கு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. மேலும் குழந்தைகள் நல மருத்துவமனையும் அமைந்துள்ளது.

    டாஸ்மாக் கடையில் மது அருந்த வருபவர்கள் ஆங்காங்கே குடித்து விட்டு வாந்தி எடுத்து ரோட்டில் படுத்துக் கிடக்கின்றனர். சிலர் அலங்கோலமான நிலையில் உள்ளனர். இந்த பகுதியை கடந்து செல்ல பள்ளி மாணவ- மாணவிகள், பெண்கள் கடும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் மது பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்தும் சென்று விடுகின்றனர். குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

    எனவே உடனடியாக இந்த மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் திரு.வீ.க பகுதிக்கு உடனடியாக சென்று அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் திருநீலகண்டார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஒரு சிறிய சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பவானி நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவிரி ஆற்று குடிநீர் அந்த பகுதி மக்க ளுக்கு முறையாக கிடைக்க வில்லை என அவர்கள் புகார் கூறினர்.

    மேலும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல முறை புகார் கூறியும் இது வரை முறையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க கோரி இன்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    குடிநீர் முறையாக வழங்க கோரி அந்த பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும் கருப்பு கொடிக்கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது,

    பவானி திருநீலர் கண்ட வீதியில் சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்படுகிறோம்.

    தினமும் ஒரு குடம் இரண்டு குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும். மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் திருநீலகண்டார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஒரு சிறிய சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பவானி நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவிரி ஆற்று குடிநீர் அந்த பகுதி மக்க ளுக்கு முறையாக கிடைக்க வில்லை என அவர்கள் புகார் கூறினர்.

    மேலும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல முறை புகார் கூறியும் இது வரை முறையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க கோரி இன்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    குடிநீர் முறையாக வழங்க கோரி அந்த பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும் கருப்பு கொடிக்கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது,

    பவானி திருநீலர் கண்ட வீதியில் சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்படுகிறோம்.

    தினமும் ஒரு குடம் இரண்டு குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும். மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.
    • வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேனி:

    தேனி மாவட்டம், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மீன்பிடி ஏலம் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சக்கரைபட்டி கிராம பகுதியில் உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி நகர பொதுச்செயலாளர் பொன்மணி தலைமையில், மீனவர் பழனியாண்டி மற்றும் கிராம மக்கள் கருப்பு கொடியுடன் அணை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் வைகை அணையில் மீன் பிடி ஏலத்தை ரத்து செய்ய கோரி கையில் கருப்பு கொடி ஏந்தி, நீரில் நின்று கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் மீன் பிடி நிலத்தை ரத்து செய்யாவிட்டால் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் போலீசார் மற்றும் பெரியகுளம் தாலுகா, தென்கரை வருவாய் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, வைகை அணை நீரில் இறங்கி போராட்டம் நடத்தி வருபவரிடம் உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தற்போது தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சம்பவம் வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.
    • 3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.

    3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் 20-ந்தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.

    • அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலை கள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப் படகு மீன்பிடித்துறை முகத்திலிருந்து 12-ந் தேதி புதன்கிழமை 79 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சின்னையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (25), குமார் ஆகியோரை சிறைபிடித்து சென்றனர். மேலும் சிறை பிடிக்க ப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    • தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு வக்கீல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தேனி:

    தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நாமக்கல் வக்கீல் மணிகண்டன் என்பவரை கொலை செய்த சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், அதுபோல சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வக்கீல்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும்,

    வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வக்கீல்கள் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், தேனி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செல்வன் முன்னிலையில் கோர்ட்டு பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், இளங்குமரன், ,மல்லீஸ்வரன், ஜெயபாரதி, காண்டீபன், பாலமுருகன், பாண்டிமணி, ஹரிஹரசுதன், ராமகிருஷ்ணன், ராஜ்குமார் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • நலசங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
    • பி.சி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிரப்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் உள்ள, புதுச்சேரி அரசின் கூடுதல் வேளாண் துறையில், கடந்த பல ஆண்டுகளாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி வேளாண் பட்ட தாரி அலுவலர் நலசங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் வேளாண் துறையில் பணிபுரியும் அதி காரிகளுக்கு, பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, வேளாண் துறை முன்பு அதி காரிகள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி னர். போராட்டத்தில், நீண்ட காலமாக பணிபுரியும் வேளாண் அலுவலர்களுக்கு உடனடியாக வேளாண் துறை துணை இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். விவசாயத்துறை மற்றும் அதை சார்ந்த நிறு வனங்கள், துறைகளில் கூடுதல் இயக்குனர்கள், இணை பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    விவசாய அதிகாரி பதவிக்கு இன்றியமையாத தகுதியாக பி.எஸ்.சி அக்ரி பட்டத்தை சேர்த்து ஆட்சேர்ப்பு விதிகளை திருத்த வேண்டும். எந்த தாமதமும் இன்றி அனைத்து தொழிற்நுட்ப பதவிகளை யும் முறைபடுத்த வேண்டும். வேளாண்துறை உயர் அதிகாரி களுக்கு இடையே நிலவும் பனிப்போரை கருத்தில் கொண்டு வேளாண் இயக்குனர் பதவியை தகுந்த பி.சி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிரப்பவேண்டும்.

    வேளாண்துறையில் உள்ள தொழிற்நுட்ப பணி யிடங்க ளின் பணியாளர் மதிப்பாய்வு மற்றும் மறு சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். இணை வேளாண் இயக்குனர், கூடுதல் வேளாண் இயக்கு னர் மற்றும் வேளாண்துறை இயக்குனர்கள் ஆகியோரை புதுச்சேரி குடிமைப்ப ணி யில் (பி.சி.எஸ்) இணைத்திட வேண்டும். துறையில் உள்ள வேளாண் அலுவலர்களின் காலி பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். கோரிக்கைகள் நிறை வேறாத பட்சத்தில் இன்று முதல் (12.9.23)தொடர் போராட்டம் நடைபெறும் என அதிகாரிகள் அறி வித்துள்ளனர். அதன்படி இன்று முதல் பணி புறக்க ணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரி களுக்கு ஆதரவாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதர வை தெரிவித்து வருகின்ற னர்.

    • கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
    • நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு, ஏப். 26-

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை கீழ்பவானி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்கால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பல நூறு கிராமங்களுக்கு விவசாயம் மற்றும் குடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலை காங்கிரீட் கால்வாயாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த 2 வருடங்களாக மீண்டும் காங்கிரீட் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், காங்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் துறை அமைச்சரிடம் பல சுற்று பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வரும் மே மாதம் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினர் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் வாய்க்காலில் காங்கிரீட் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

    வாய்க்கால் தொடங்கும் முதல் மைல் பகுதியில் இருந்து வாய்க்காலின் இருபுறமும் உள்ள புதுப்பாளையம், புங்கம்பாடி, வெள்ளியம்பாளையம்,

    வள்ளியரச்சல், சுந்தரபுரி, வெள்ளியங்காடு, ஆவாரங்காட்டு வலசு, காளி வலசு, மருதுறை, 100-வது மைலில் உள்ள சிவியார்பாளையம்,

    திட்டுப்பாறை, சின்னக்கவுண்டன் வலசு, சிக்காம்பாளையம், பரஞ்சேர்வழி கிராமம், நத்தக்காட்டு வலசு மற்றும் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் காங்கிரீட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • சொத்து வரியை குறைக்க கோரி வருகிற 28-ந் தேதி முற்றுகை போராட்டம் நடக்கிறது
    • ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்கம், அறம் அறக்கட்டளை, முகநூல் நண்பர்கள், தெரசா நற்பணி இயக்கம், தென்னை விவசாயிகள் சங்கம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம், நேதாஜி ரத்ததான கழகம், தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகத்திலேயே அதிகமாக வரிவிதித்துள்ள (சென்னை 12.40%, ராஜபாளையம் 20.80%) ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை குறைக்க வலியுறுத்தியும், தாமிரபரணி தண்ணீருக்கு 3 மடங்கு (மாதம் ரூ.50 என்பதை 150 ஆக) உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், ராஜபாளையம் நகரில் 5 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகத்தை வருகிற 28-ந் தேதி முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வக்கீலா பணியாற்றி வருகிறார் . நேற்று மாலை ஜமீலா பானு அவரது அலுவலகத்தில் இருந்தபோது ரகுமான்கான் என்பவர் அரிவாளால் ஜமீலா பானுவையும், அவரது மகளையும் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ,அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் (வயது 48) வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
    • இரு பள்ளிகளை சேர்ந்த 405 மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

    ேசலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி மல்லிகுந்தம் அருகே வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் (வயது 48) வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இேதபோல் அங்கிருந்த தலைமை ஆசிரியை ெஜயசித்ரா, வன்னியனூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி முதல் வாழதாசம்பட்டி மற்றும் வன்னியனூர் ஆகிய இரு பள்ளிகளை சேர்ந்த 405 மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டம் 9 நாட்களாக நீடித்தது. இைதயடுத்து சேலம் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மேட்டூர் சப்-கலெக்டர் வீர்பிரதாப்சிங் தலைமையில் வன்னியனூரில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 4 மாதங்களுக்கு வன்னியனூர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சசி தலைமையில் பள்ளி செயல்படும், அதன்பிறகு சிவகுமாரை பணி அமர்த்த முயற்சி எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 9 நாட்களாக நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×