search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தலை"

    • கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
    • நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு, ஏப். 26-

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை கீழ்பவானி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்கால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பல நூறு கிராமங்களுக்கு விவசாயம் மற்றும் குடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலை காங்கிரீட் கால்வாயாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த 2 வருடங்களாக மீண்டும் காங்கிரீட் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், காங்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் துறை அமைச்சரிடம் பல சுற்று பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வரும் மே மாதம் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினர் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் வாய்க்காலில் காங்கிரீட் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

    வாய்க்கால் தொடங்கும் முதல் மைல் பகுதியில் இருந்து வாய்க்காலின் இருபுறமும் உள்ள புதுப்பாளையம், புங்கம்பாடி, வெள்ளியம்பாளையம்,

    வள்ளியரச்சல், சுந்தரபுரி, வெள்ளியங்காடு, ஆவாரங்காட்டு வலசு, காளி வலசு, மருதுறை, 100-வது மைலில் உள்ள சிவியார்பாளையம்,

    திட்டுப்பாறை, சின்னக்கவுண்டன் வலசு, சிக்காம்பாளையம், பரஞ்சேர்வழி கிராமம், நத்தக்காட்டு வலசு மற்றும் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் காங்கிரீட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    ×