search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்கள் போராட்டம்"

    • தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு வக்கீல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தேனி:

    தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நாமக்கல் வக்கீல் மணிகண்டன் என்பவரை கொலை செய்த சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், அதுபோல சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வக்கீல்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும்,

    வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வக்கீல்கள் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், தேனி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செல்வன் முன்னிலையில் கோர்ட்டு பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், இளங்குமரன், ,மல்லீஸ்வரன், ஜெயபாரதி, காண்டீபன், பாலமுருகன், பாண்டிமணி, ஹரிஹரசுதன், ராமகிருஷ்ணன், ராஜ்குமார் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    மணிப்பூரில் தொடரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    அதன்படி வேலூர் கோர்ட்டில் வக்கீல்கள் இன்று முதல் வரும் 3 நாட்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுமதி கபிலன், கிரிமினல் பார் அசோசியேஷன் தலைவர் ரவிராமன், சிவில் பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினார்.

    கிரிமினல் ஆர் அசோசியேசன் செயலாளர் பாஸ்கரன், வக்கீல்கள் பாலமுருகன், பாலு, தாமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கவிதா, ஜமுனா, சத்யா, நித்தியா, கவுதமி, பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×