search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Penal Code"

    • இந்த கொலை வழக்கு 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
    • உணர்ச்சி வசத்தால் கொலை நடந்துள்ளது என்றார் நீதிபதி

    கடந்த 2009 ஆகஸ்ட் 16 அன்று அல்மந்தா என்பவருக்கு தன் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அல்மந்தாவின் மனவி, அவரை தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த அல்மந்தா, தனது மனைவியை கத்தியால் குத்தினார். இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், 14 ஆண்டுகளாக நடைபெறும் அந்த வழக்கு இன்று டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நவ்ஜீத் புதிராஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர் கூறியதாவது:

    கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. மனைவி கணவனை தாக்கி உள்ளார். இதில் கோபமடைந்த போதுதான் கணவன் கத்தியால் அவரை குத்தியுள்ளார்; அதில் மனைவி உயிரிழந்து விட்டார். எனவே இதில் "முன்கூட்டியே திட்டமிடல்" (premeditation) என்பது பொருந்தாது. சூழ்நிலையை சாதகமாக்கி கொலை முயற்சியில் இறங்குவதையும் கணவன் செய்யவில்லை. கொடுமையாகவோ அல்லது குரூரமாகவோ தாக்குதலில் ஈடுபடவுமில்லை. ஆனால், தனது தாக்குதலால் மனைவி இறக்க நேரிடும் என்பதை அறிந்திருந்தார்.

    குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியில் ரத்த கறை இருந்திருக்கிறது. அதை அழிக்க கணவன் முயற்சி செய்யவில்லை.

    சண்டையில் உணர்ச்சி பெருக்கெடுத்து இந்த கொலை நடந்துள்ளது. கொலை செய்யும் எண்ணம் முன்னரே இருந்ததாக சாட்சியங்கள் இல்லை.

    கணவன் மீதும் காயங்கள் இருந்துள்ளது. தன் மீது ஏற்பட்ட தாக்குதலால் "திடீர்" என ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை பதிலுக்கு தாக்கி உள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் 302 பிரிவு இங்கு பொருந்தாது. அதற்கு பதில் 304 பாகம் 1 பிரிவில்தான் அவர் குற்றவாளி ஆகிறார்.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

    • ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களே நடைமுறையில் உள்ளது
    • பரிந்துரைகளை செய்ய மார்ச் 2020ல் கிரிமினல் சட்ட சீர்திருத்த குழு உருவாக்கப்பட்டது

    இந்தியாவை 1858லிருந்து 1947 வரை பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர். 1860ம் வருடம் குற்றங்களுக்கான தண்டனை சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தை கொண்டு வந்தனர்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து குடியரசான பிறகும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்களே நாட்டில் நடைமுறையில் உள்ளது.

    பல தசாப்தங்களை கடந்தும் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த சட்டங்களில் தற்போதைய மற்றும் எதிர்கால இந்தியாவின் தேவைகளையும், நலன்களையும், நாடு சந்திக்கும் சவால்கலையும் கருத்தில் கொண்டு இதில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்த மத்திய அரசாங்கம் இதற்கான பரிந்துரைகளை செய்ய மார்ச் 2020ல் கிரிமினல் சட்ட சீர்திருத்த குழு ஒன்றை உருவாக்கியது.

    பல சட்ட வல்லுனர்களை கொண்ட இக்குழுவிற்கு தலைவராக புது டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேரா. டாக்டர் ரன்பிர் சிங் நியமிக்கப்பட்டார்.

    இக்குழுவின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின்படி புதிய சட்டங்களை உருவாக்க, முதல் கட்டமாக 3 மசோதாக்களை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் உள்துறை மந்திரி அமித் ஷா.

    இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்.

    இவை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு பரிந்துரைகளுக்காக அனுப்பப்படும்.

    இது குறித்து பேசிய அமித் ஷா கூறியிருப்பதாவது:

    ஆங்கிலேயர் ஆட்சியினால் விளைந்த அடிமைத்தன மனோபாவத்தை இந்தியாவில் ஒழிக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். பிரிட்டிஷ் நிர்வாகத்தை வலிமைப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள இ.பி.கோ. சட்டங்கள், தண்டனை வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டவையே தவிர, நீதி வழங்குவதை அல்ல. புதிய 3 சட்டங்களின் மூலம் இவற்றை மாற்றுவதனால் இந்திய குடிமக்களின் உரிமைகளை காக்கும் நோக்கம் சிறப்பாக நிறைவேற்றப்படும். குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மட்டுமே இனி தண்டனைகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    511 செக்ஷன்களை கொண்ட இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படும் புதிய சட்டத்தில் இனி 356 செக்ஷன்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×