search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "culpable homicide"

    • இந்த கொலை வழக்கு 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
    • உணர்ச்சி வசத்தால் கொலை நடந்துள்ளது என்றார் நீதிபதி

    கடந்த 2009 ஆகஸ்ட் 16 அன்று அல்மந்தா என்பவருக்கு தன் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அல்மந்தாவின் மனவி, அவரை தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த அல்மந்தா, தனது மனைவியை கத்தியால் குத்தினார். இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், 14 ஆண்டுகளாக நடைபெறும் அந்த வழக்கு இன்று டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நவ்ஜீத் புதிராஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர் கூறியதாவது:

    கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. மனைவி கணவனை தாக்கி உள்ளார். இதில் கோபமடைந்த போதுதான் கணவன் கத்தியால் அவரை குத்தியுள்ளார்; அதில் மனைவி உயிரிழந்து விட்டார். எனவே இதில் "முன்கூட்டியே திட்டமிடல்" (premeditation) என்பது பொருந்தாது. சூழ்நிலையை சாதகமாக்கி கொலை முயற்சியில் இறங்குவதையும் கணவன் செய்யவில்லை. கொடுமையாகவோ அல்லது குரூரமாகவோ தாக்குதலில் ஈடுபடவுமில்லை. ஆனால், தனது தாக்குதலால் மனைவி இறக்க நேரிடும் என்பதை அறிந்திருந்தார்.

    குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியில் ரத்த கறை இருந்திருக்கிறது. அதை அழிக்க கணவன் முயற்சி செய்யவில்லை.

    சண்டையில் உணர்ச்சி பெருக்கெடுத்து இந்த கொலை நடந்துள்ளது. கொலை செய்யும் எண்ணம் முன்னரே இருந்ததாக சாட்சியங்கள் இல்லை.

    கணவன் மீதும் காயங்கள் இருந்துள்ளது. தன் மீது ஏற்பட்ட தாக்குதலால் "திடீர்" என ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை பதிலுக்கு தாக்கி உள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் 302 பிரிவு இங்கு பொருந்தாது. அதற்கு பதில் 304 பாகம் 1 பிரிவில்தான் அவர் குற்றவாளி ஆகிறார்.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

    • துப்பட்டாவை இழுத்ததால் நிலை தடுமாறி விழுந்தவர் மீது பைக் மோதியது
    • குற்றவாளிகள் காவல் துறையினரை சுட்டு தப்பிக்க முயன்றனர்

    உத்தர பிரதேசத்தில் உள்ளது அம்பேத்கர் நகர் மாவட்டம்.

    இரு தினங்களுக்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்வார் பகுதியில், ஹிராபூர் அங்காடி தெருவில் ஒரு 17-வயது பள்ளி மாணவியும், அவரது தோழியும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த மாணவியை பின் தொடர்ந்து வந்து சீண்டலில் ஈடுபட்டு வந்தனர். அந்த இரு மாணவிகளும் அவர்களிடமிருந்து தப்பிக்க ஒதுங்கி சென்றாலும் அவர்கள் பலவந்தமாக தவறாக நடக்க முயன்றனர்.

    இதில் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் அம்மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்தான். இதில் அந்த மாணவி நிலை தடுமாறி சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த வேறொரு இரு சக்கர வாகனம் அந்த மாணவியின் மீது மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அத்துடன் அவரது தாடை பகுதி நொறுங்கியது. கீழே விழுந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் இந்த சம்பவத்தின் காட்சிகள் பதிவாகி, அவை சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

    சம்பவத்திற்கு காரணமான இருவர் மற்றும் மாணவி மீது மோதிய வாகனத்தை ஓட்டி வந்தவர் ஆகிய 3 பேரையும் கேமிரா காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் காவல் அதிகாரிகளின் துப்பாக்கியை பிடுங்கி கொண்டு தப்பிக்க முயன்றதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். காயமடைந்த அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×