search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Homicide"

    • இந்த கொலை வழக்கு 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
    • உணர்ச்சி வசத்தால் கொலை நடந்துள்ளது என்றார் நீதிபதி

    கடந்த 2009 ஆகஸ்ட் 16 அன்று அல்மந்தா என்பவருக்கு தன் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அல்மந்தாவின் மனவி, அவரை தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த அல்மந்தா, தனது மனைவியை கத்தியால் குத்தினார். இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், 14 ஆண்டுகளாக நடைபெறும் அந்த வழக்கு இன்று டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நவ்ஜீத் புதிராஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர் கூறியதாவது:

    கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. மனைவி கணவனை தாக்கி உள்ளார். இதில் கோபமடைந்த போதுதான் கணவன் கத்தியால் அவரை குத்தியுள்ளார்; அதில் மனைவி உயிரிழந்து விட்டார். எனவே இதில் "முன்கூட்டியே திட்டமிடல்" (premeditation) என்பது பொருந்தாது. சூழ்நிலையை சாதகமாக்கி கொலை முயற்சியில் இறங்குவதையும் கணவன் செய்யவில்லை. கொடுமையாகவோ அல்லது குரூரமாகவோ தாக்குதலில் ஈடுபடவுமில்லை. ஆனால், தனது தாக்குதலால் மனைவி இறக்க நேரிடும் என்பதை அறிந்திருந்தார்.

    குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியில் ரத்த கறை இருந்திருக்கிறது. அதை அழிக்க கணவன் முயற்சி செய்யவில்லை.

    சண்டையில் உணர்ச்சி பெருக்கெடுத்து இந்த கொலை நடந்துள்ளது. கொலை செய்யும் எண்ணம் முன்னரே இருந்ததாக சாட்சியங்கள் இல்லை.

    கணவன் மீதும் காயங்கள் இருந்துள்ளது. தன் மீது ஏற்பட்ட தாக்குதலால் "திடீர்" என ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை பதிலுக்கு தாக்கி உள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் 302 பிரிவு இங்கு பொருந்தாது. அதற்கு பதில் 304 பாகம் 1 பிரிவில்தான் அவர் குற்றவாளி ஆகிறார்.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

    படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த 2 பேர் வெங்கடேசனை வழிமறித்து தாக்கினர்.இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்த வெங்க டேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விடாமல் துரத்திய மர்மநபர்கள், வெங்கடேசனை வழி மறித்து தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் கீழே விழுந்தார்.தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த நபர்கள் வெங்கடேன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் சாலை யில் சென்றவரை வழி மறித்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    • வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.
    • வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அக்னி திருவிழா முடிந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது.இந்நிலையில் கோவில் நிகழ்ச்சிக்காக அப் பகுதியில் பேனர் வைத்துள்ளனர். இப்பொழு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக பேனர் வைப்பதற்காக ஒருவர் பேனரை கழற்சி அதே பகுதியில் நடுத்தெருவில் வசிக்கும் பாஸ்கர் மகன் சரவணனிடம் (19,) கொடுத்துள்ளார். அதை கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் பேனரை ஏன் கிழித்து இங்கு வைத்துள்ளாய் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.

    இந்த தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு ள்ளார். இந்த தாக்குதல் குறித்து ராமநத்தம் போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தில் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது
    • ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பெத்தானூர் கிராமத்தில் வசிக்கும் காசி இவருடைய மகன் சுப்பிரமணி இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. வீட்டின் பணி 80 சதவீதம் முடிந்த நிலையில் அந்த வீட்டிற்கு ஒயரிங் வேலை செய்வதற்கு அதே பகுதியில் வசிக்கும் அஜித் வயது 28 என்ற இளைஞர் வீட்டு உரிமையாளரை அணுகி உள்ளார். அப்பொழுது வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி அஜித் ஒயரிங் வேலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் சுப்பிரமணி வீட்டிற்கு குடிபோதையில் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த சுப்பிரமணியின் மனைவி ராணியிடம் உன் வீட்டுக்காரன் எங்கே அவனை இங்கே வர சொல்லு எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    பின்னர் ராணி என் கணவர் வீட்டில் இல்லை என கூறியுள்ளார். பின்பு ராணியை கீழே தள்ளி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. ராணி வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த மளிகை கடைக்கு தப்பித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சுப்பிரமணியிடம் ராணி நடந்த விஷயத்தை கூறியுள்ளார். பின்னர் அஜித்திடம் என் மனைவியை எதற்காக அடித்தார் என கேட்ட சுப்பிரமணியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இச் சம்பவத்தால் ராணிக்கு காயம் ஏற்பட்டது இதனால் ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்பு சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று ராணி புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்த விசாரணை கொண்டு வருகின்றனர்.

    ×