search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே கட்டிட கான்டிராக்டர் மீது கொலைவெறி தாக்குதல்
    X

    சின்னசேலம் அருகே கட்டிட கான்டிராக்டர் மீது கொலைவெறி தாக்குதல்

    • பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது
    • ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பெத்தானூர் கிராமத்தில் வசிக்கும் காசி இவருடைய மகன் சுப்பிரமணி இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. வீட்டின் பணி 80 சதவீதம் முடிந்த நிலையில் அந்த வீட்டிற்கு ஒயரிங் வேலை செய்வதற்கு அதே பகுதியில் வசிக்கும் அஜித் வயது 28 என்ற இளைஞர் வீட்டு உரிமையாளரை அணுகி உள்ளார். அப்பொழுது வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி அஜித் ஒயரிங் வேலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் சுப்பிரமணி வீட்டிற்கு குடிபோதையில் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த சுப்பிரமணியின் மனைவி ராணியிடம் உன் வீட்டுக்காரன் எங்கே அவனை இங்கே வர சொல்லு எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    பின்னர் ராணி என் கணவர் வீட்டில் இல்லை என கூறியுள்ளார். பின்பு ராணியை கீழே தள்ளி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. ராணி வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த மளிகை கடைக்கு தப்பித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சுப்பிரமணியிடம் ராணி நடந்த விஷயத்தை கூறியுள்ளார். பின்னர் அஜித்திடம் என் மனைவியை எதற்காக அடித்தார் என கேட்ட சுப்பிரமணியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இச் சம்பவத்தால் ராணிக்கு காயம் ஏற்பட்டது இதனால் ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்பு சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று ராணி புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்த விசாரணை கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×