search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lawyers struggle"

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    மணிப்பூரில் தொடரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    அதன்படி வேலூர் கோர்ட்டில் வக்கீல்கள் இன்று முதல் வரும் 3 நாட்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுமதி கபிலன், கிரிமினல் பார் அசோசியேஷன் தலைவர் ரவிராமன், சிவில் பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினார்.

    கிரிமினல் ஆர் அசோசியேசன் செயலாளர் பாஸ்கரன், வக்கீல்கள் பாலமுருகன், பாலு, தாமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கவிதா, ஜமுனா, சத்யா, நித்தியா, கவுதமி, பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
    • அட்வகேட் அசோசியேசன் லாயர் அசோசியேஷன் சார்பில் அனைத்து வழக்கறிஞர்கள் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    பொன்னேரி:

    பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் முதன்மை சார்பு நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், 1-2 உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வழக்கத்திற்கு மாறாக பொன்னேரி தாலுகாவில் உள்ள நாறவாரி குப்பம், தண்டல் காலனி, அத்திவாக்கம், பால வாயில், வடகரை,விளங்காடுபாக்கம் ரெட்டில்ஸ், உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளடக்கிய வழக்குகள் தற்போது திருவொற்றியூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றவரைமுறையை மாற்றி பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சேர்க்கும்படி பொன்னேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேசன் லாயர் அசோசியேஷன் சார்பில் அனைத்து வழக்கறிஞர்கள் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    ×