search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் அனைத்து வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
    X

    பொன்னேரியில் அனைத்து வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

    • நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
    • அட்வகேட் அசோசியேசன் லாயர் அசோசியேஷன் சார்பில் அனைத்து வழக்கறிஞர்கள் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    பொன்னேரி:

    பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் முதன்மை சார்பு நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், 1-2 உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வழக்கத்திற்கு மாறாக பொன்னேரி தாலுகாவில் உள்ள நாறவாரி குப்பம், தண்டல் காலனி, அத்திவாக்கம், பால வாயில், வடகரை,விளங்காடுபாக்கம் ரெட்டில்ஸ், உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளடக்கிய வழக்குகள் தற்போது திருவொற்றியூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றவரைமுறையை மாற்றி பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சேர்க்கும்படி பொன்னேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேசன் லாயர் அசோசியேஷன் சார்பில் அனைத்து வழக்கறிஞர்கள் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    Next Story
    ×