ஓசூரில் வக்கீல் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்

வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூரில் வக்கீல் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பட்டப்பகலில் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் கண்ணனை, ஆனந்தகுமார் என்பவர் சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 10 மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து ஓசூரில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com