search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anna"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டைத் தலைநிமிரவைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு.
    • பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:

    நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்கு பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று.

    "ஏ தாழ்ந்த தமிழகமே" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிரவைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு. பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



    • கருணாநிதியின் நினைவிடத்தில் 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை புத்தாண்டையொட்டி சந்தித்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புத்தாண்டையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை புத்தாண்டையொட்டி சந்தித்தார். அப்போது அவர்கள் புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரியகருப்பன், முத்துசாமி, சக்கரபாணி, ரகுபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் மயிலைவேலு, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தி.நகர் ஜெ.கருணாநிதி மேயர் பிரியா.

    தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், பணீந்திர ரெட்டி, சுப்ரியாசாகு, ராஜேஷ் லக்கானி, அமுதா, சிவதாஸ் மீனா, அதுல்ய மிஸ்ரா, நீரஜ்மிட்டல், கிரிலோஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது
    • திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.வி.நாக ராஜன் தலைமையில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    விழாவில் பேசிய மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா. தமிழகம் மட்டுமல்லாது உலகம் எங்கும் தமிழர்களின் புகழை ஓங்க செய்தவர் அண்ணா. சுயநலம் இல்லாமல் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார். அவரின் வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அ.தி.மு.க.வை உயிரினும் மேலாக கட்டிக் காத்தனர்.

    இந்த கட்சியை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காப்பாற்ற அண்ணாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேல், நகர செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் அவரது உருவப் படத்திற்கு நகர தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
    • நகர செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார்.

    ஆலங்குளம்:

    அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் அவரது உருவப் படத்திற்கு நகர தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நகர செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சுந்தரம், கவுன்சிலர் மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய பிரதிநிதி ஆதிவிநாயகம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கரன், ராசையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 15, 17-ந் தேதிகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
    • சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15, 17-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மேற்கண்ட நாட்களில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தாய் மண்ணுக்குப் பெயா் சூட்டிய தனயன்', 'மாணவா்க்கு அண்ணா', 'அண்ணாவின் மேடைத் தமிழ்', 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும்', 'பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்', 'அண்ணாவின் தமிழ் வளம்', 'அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி !' 'மக்களிடம் செல்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

    பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தொண்டு செய்து பழுத்த பழம்', 'தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்', 'தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்', 'தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம்', 'தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'தந்தை பெரியாரும், பெண் விடுதலையும்', 'தந்தை பெரியாரும், மூடநம்பிக்கை ஒழிப்பும்', 'பெண் ஏன் அடிமையானாள்?', 'இனிவரும் உலகம்', 'சமுதாய விஞ்ஞானி பெரியாா்', 'உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

    மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலராலும், கல்லூரி போட்டிக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநராலும் தோ்வு செய்து அனுப்பப்படும் மாணவா்கள் மட்டுமே பங்கேற்ற இயலும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
    • தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகா மாநிலத்தில் கொட்டிய கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சுமார் 2. 50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அப்போது மேடடூர் அணையிலிருந்து நீரை திறந்து விட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்ததன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் சென்று பார்வையிடவும் குளிக்கவும் அனுமதி இல்லை. அங்கு பராமரிப்பு பணிகள் நடத்து வருவதால் தற்போது அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

    ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சுற்றுலா பயணிகள் வருவதால் அப்பகுதியில் உள்ள வறுத்த மீன் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இனி வரும் விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை அதிகரிக்கும் . அண்ணா பூங்கா திறப்பால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார்.



    அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் வெற்றி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    காஞ்சிபுரத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். #MKStalin

    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அறிஞர் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு பத்திரிகைக்கு சொந்தமான கட்டிடத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக காஞ்சிபுரம் அடுத்த சேக்காங்குளம் பகுதியில் ஒன்றியச் செயலாளர் சிறுவேடல் செல்வம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர பிரமாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து 95 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றுகிறார். இதேபோல் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே கல்வெட்டினை திறந்து கட்சி கொடியை ஏற்றுகிறார்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. மேற்பார்வையில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதையொட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் தி.மு.க. கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் முக. ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் வண்ண விளக்குகளால் கண்ணை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிகழ்ச்சிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சி.வி.எம். அ.சேகரன், எழிலரசன் எம்.எல்.ஏ., தசரதன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். #MKStalin

    அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    திருச்சுழி:

    திருச்சுழியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளர் சொக்கர் தலைமையில் ஊராட்சி செயலாளர் பால முருகன், கூட்டுறவு சங்க தலைவர் வீரக்குமார், கூட்டுறவு சங்க இயக்குனர் மடத்துப்பட்டி முத்துராஜா, தலைக்குளம் கருப்பு, புதூர் செல்வராஜ், பாறைகுளம் சுந்தர்ராஜ், புலி மருது, சுப்புராஜ் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதேபோல் கல்லூரணியில் கிளை செயலாளர் முத்துவேல், கனகராஜ், அவைத் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோரும், மடத்துப்பட்டியில் கிளை செயலாளர் முத்துராஜா தலைமையில் நிர்வாகிகளும் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டி நிலவள வங்கி அலுவலகத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சித்திக், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் கல்லூரணி முனியாண்டி, எம்.ஜி.ஆர். இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர்கள் அங்கையற்கண்ணி, கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    சாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வாசன், பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு அண்ணா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் வடக்குரதவீதியில் நகர செயலாளர் குருசாமி, கோசுகுண்டு சீனிவாசன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அசோக், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திருவேங்கடசாமி, கடற்கரை ராஜ், மாவட்ட பிரதிநிதி முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கர், ஒன்றியச் செயலாளர்கள் முருகேசன், சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அண்ணா நினைவு தினத்தையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிஹரன், செயல் அலுவலர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகரச் செயலாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி, அவைத்தலைவர் மணி, பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமச்சந்திரன், சவுண்டையா, கலுசிவலிங்கம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

    அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் முத்து தலைமையில் அண்ணா சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. இதில் மாவட்ட அவை தலைவர் ராமர், ஜெயலிதா பேரவை செயலாளர் வீரகணேசன், அவை தலைவர் கருப்பசாமி, துணை செயலாளர்கள் பரசுராமன், பூப்பாண்டி உள்பட அ.ம.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ் தலைமையில் நகர செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் சாகுல்அமீது முன்னிலையில் நேரு மைதானத்திலிருந்து தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேஷ் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    சென்னை:

    மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்து செல்லும்போது பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி 17 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும், கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது. #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    ‘பொங்கல்’, ’தமிழர் திருநாள்’ என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது. #happypongal2019
    மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டுதான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.

    இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் ‘மெட்ராஸ் பிரெசிடென்சி’ (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.

    தற்போது, காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக 'மெட்ராஸ்' என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.

    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய ஈ.வே.ரா.பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.

    1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த. பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். 

    15-8-1947-ல்  இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் ‘சென்னை மாநிலம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. 26-1-1950 அன்று இந்தியா குடியரசு நாடான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது.  
     
    தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

    சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, ‘தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை “தமிழ்நாடு” என மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.

    இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலமாத்தில் தைத்திங்கள் முதல்நாளன்று (14-1-1969) சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு ‘தமிழ்நாடு’ என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது பெருமைக்குரிய மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.

    தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ‘தைப் பொங்கல்’ இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும் என்று ‘மாலை மலர் டாட்.காம்’ உறுதியாக நம்புகிறது.

    எங்களது அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த-இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!  வாழ்க.. வளமுடன்!! #historicpride #Pongalday #prideforTamilians #Tamilians #happypongal2019
    அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் பேரறிஞர் அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அமைய உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா முழு உருவ சிலை 16.9.87ல் நிறுவப்பட்டது. தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.

    கருணாநிதி மறைந்து விட்ட நிலையில் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீஞ்சூர் அருகே தயார் செய்யப்பட்டு வருகிறது.

    சிலை உருவாக்கப்படும் பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முகவடிவமைப்பில் உள்ள குறைகளை எடுத்து கூறி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    அதன் அடிப்படையில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

    கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படுவதால் அதன் அருகே அண்ணா சிலை பழையதாக காட்சி தரும் என்பதால் அண்ணாவுக்கும் புதிதாக வெண்கல சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை நேற்றிரவு அகற்றப்பட்டு பத்திரமாக அறையில் வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை இருந்த பீடமும் இடிக்கப்பட்டுள்ளது.



    அங்கு விரைவில் புதிதாக பீடம் கட்டப்பட்டு அதில் அண்ணா, கருணாநிதிக்கு புதிய சிலை வைக்கப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

    இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைஞரின் திரு உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்க இருக்கிறார்கள்.

    புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையும்-தலைவர் கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16-ந்தேதி தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
    ×