என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா
Byமாலை மலர்15 Nov 2018 11:00 AM GMT (Updated: 15 Nov 2018 11:00 AM GMT)
அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் பேரறிஞர் அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அமைய உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
சென்னை:
அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா முழு உருவ சிலை 16.9.87ல் நிறுவப்பட்டது. தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
கருணாநிதி மறைந்து விட்ட நிலையில் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீஞ்சூர் அருகே தயார் செய்யப்பட்டு வருகிறது.
சிலை உருவாக்கப்படும் பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முகவடிவமைப்பில் உள்ள குறைகளை எடுத்து கூறி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
அதன் அடிப்படையில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படுவதால் அதன் அருகே அண்ணா சிலை பழையதாக காட்சி தரும் என்பதால் அண்ணாவுக்கும் புதிதாக வெண்கல சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞரின் திரு உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்க இருக்கிறார்கள்.
புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையும்-தலைவர் கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16-ந்தேதி தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா முழு உருவ சிலை 16.9.87ல் நிறுவப்பட்டது. தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
கருணாநிதி மறைந்து விட்ட நிலையில் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீஞ்சூர் அருகே தயார் செய்யப்பட்டு வருகிறது.
சிலை உருவாக்கப்படும் பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முகவடிவமைப்பில் உள்ள குறைகளை எடுத்து கூறி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
அதன் அடிப்படையில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படுவதால் அதன் அருகே அண்ணா சிலை பழையதாக காட்சி தரும் என்பதால் அண்ணாவுக்கும் புதிதாக வெண்கல சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை நேற்றிரவு அகற்றப்பட்டு பத்திரமாக அறையில் வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை இருந்த பீடமும் இடிக்கப்பட்டுள்ளது.
அங்கு விரைவில் புதிதாக பீடம் கட்டப்பட்டு அதில் அண்ணா, கருணாநிதிக்கு புதிய சிலை வைக்கப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞரின் திரு உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்க இருக்கிறார்கள்.
புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையும்-தலைவர் கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16-ந்தேதி தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X