search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியார்"

    • ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார்
    • பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது

    பெரியாரை போற்றும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஞ்சனி-காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "90 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை மற்றும் ஆன்மீக உணர்வின் ஆலயமாகப் போற்றப்படும் மியூசிக் அகாடமி அமைப்பின் புனிதத்திற்கு பிரிவினை சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை மியூசிக் அகாடமியின் அதிகார போக்கிற்கு எதிராக குரல் எழுப்பிய அனைத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கும் தமிழ்நாடு பாஜக துணை நிற்கிறது.

    ரஞ்சனி, காயத்ரி, திருச்சூர் பிரதர்ஸ், ரவிகிரண், ஹரிகதா, துஷ்யந்த் ஸ்ரீதர்,விசாகா ஹரி, மற்றும் பலர் பழமையான மியூசிக் அகாடமியின் புனிதத்தை பாதுகாக்க பாடுபடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்தாண்டு நடைபெறும் 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டை டி.எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

    டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், "மியூசிக் அகாடமியின் மாநாடு 2024-ல் பங்கேற்பதில் இருந்தும், டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுகிறோம்.

    இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் அவர் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.

    பல ஆண்டுகளாக கர்நாடக இசையை தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசைக் கலைஞர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவரது செயல்கள் உள்ளன. ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

    பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்.

    கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், நமது கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பு சமூகத்தை நாங்கள் நம்புகிறோம். இவற்றை புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டால் அது நாங்கள் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்" என தெரிவித்துள்ளனர்.

    ரஞ்சனி, காயத்ரியின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது

    இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்தாண்டு நடைபெறும் 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டை டி.எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

    டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி,  காயத்ரி சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், "மியூசிக் அகாடமியின் மாநாடு 2024-ல் பங்கேற்பதில் இருந்தும், டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுகிறோம்.

    இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் அவர் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.

    பல ஆண்டுகளாக கர்நாடக இசையை தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசைக் கலைஞர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவரது செயல்கள் உள்ளன. ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

    பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்.

    கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், நமது கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பு சமூகத்தை நாங்கள் நம்புகிறோம். இவற்றை புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டால் அது நாங்கள் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்" என தெரிவித்துள்ளனர்.

    ரஞ்சனி, காயத்ரியின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக எழுத்தாளரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சல்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடக இசைப் பாடகர்கள் ரஞ்சனி, காயத்திரிக்கு எத்தனை ஆணவம். இது பெரியார் மண்" என தெரிவித்துள்ளார்.

    • மீண்டும் பெரியார், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • நீக்கப்பட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி தொடர்பான பாடங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இக்குழு பரிந்துரைக்கவில்லை

    2022-23 கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக அரசு மாற்றம் செய்தது. அதில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர், ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி குறித்த தகவல்கள் நீக்கப்பட்டது. இது கர்நாடகா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், 2024-25 கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது. அதில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில், மீண்டும் பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயம் சாவித்ரிபாய் பூலே அவர்களின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு, இத்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

    இருப்பினும், நீக்கப்பட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி தொடர்பான பாடங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இக்குழு பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
    • அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

    சென்னை:

    இந்திய சமூக நீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் ஆகும்.

    கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து 1924-ம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது கேரள தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி இந்த போராட்டத்திற்கு நீங்கள் வந்துதான் உயிர் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இந்த கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு வந்து, வைக்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

    இந்த போராட்டம் அப்போது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தந்தை பெரியார் 2 முறை கைதானார். முதல் முறை ஒரு மாதமும், 2-ம் முறை 6 மாதமும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் கை, கால்களில் சங்கிலியால் பிணைக்கப் பட்டு அவர் சிரமப்படுத்தப்பட்டார். அந்த சமயத்தில் திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்ததால், ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார்.

    அதுமட்டுமின்றி வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையையும் ராணி நீக்கினார். இதனால் பெரியாரின் போராட்டம் வெற்றி யில் முடிந்து 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார்.

    இந்த போராட்ட வெற்றி யின் 100-ம் ஆண்டை குறிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட் டம் நூற்றாண்டு சிறப்பு விழா சென்னை நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. திடீரென இன்று காலையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு விழா மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்றே சென்னை வந்துவிட்டார். அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்று தங்க வைத்தனர்.

    இன்று காலையில் விழா நடைபெற்ற வேப்பேரி பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒருசேர வந்தனர். அவர்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.

    அதன் பிறகு அங்கிருந்த பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    அதன் பிறகு பெரியார் திடலில் உள்ள நினைவு தூண் அருகே விழா நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியார் நினைவுப் பரிசு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நூற்றாண்டு விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு மலரை வெளியிட அதை பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.

    அதே போல் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பெரியாரும் வைக்கம் போராட்டமும் என்ற நூலை வெளியிட அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா. மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., பரந்தாமன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது.

    • கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்.
    • வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்.

    தந்தை பெரியார் 50-வது நினைவு நாள் முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்!

    "கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்" என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.



    • தந்தை பெரியார் இல்லை என்றால், தமிழகத்தில சமூகநீதி கிடையாது.
    • தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ, அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர், மதுரையில் பேசும்போதும் சிலை விவகாரத்தை கையில் எடுத்தார்.

    தொடர்ந்து பெரியார் குறித்த கருத்தை முன்வைக்கும் அண்ணாமலைக்கு அதிமுக, திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பா.ம.க. கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    தந்தை பெரியாரின் மண் இது. இந்த மண்ணில் இவ்வாறு பேசுவது தவறு. தந்தை பெரியால் இல்லை என்றால், தமிழகத்தில சமூகநீதி கிடையாது. தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ, அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. ஏனென்றால், எங்கள் கட்சியின் முன்னோடிகள்.

    எங்கள் கட்சியில் மூன்று பேரை முன்னோடியாக வைத்துள்ளோம். அவர்கள் அண்ணா, அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆவார்கள். மூன்று பேரை பற்றி யாராவது தவறாக பேசினால், நாங்களும் அமைதியாக இருக்கமாட்டோம்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    • ஏழைகளின் நலன், இந்தியா உலக நாடுகளிடையே உண்மையான பொருளாதார இடத்தை பெற, மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும்.
    • நீலகிரி தொகுதியில் ஊழல்வாதி ராசா எம்.பி.யை அப்புறப்படுத்த வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் நடந்த நடைபயண பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்கின்றனர். பலரும் பெண் சுதந்திரம் பற்றி பேசுவார்கள். ஆனால் நாம் அதனை செய்து காட்டியுள்ளோம்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று, மீண்டும் மோடி ஆட்சியையும், அவரை பிரதமராகவும் பாராளுமன்றத்தில் அமர வைக்க வேண்டும்.

    ஏழைகளின் நலன், இந்தியா உலக நாடுகளிடையே உண்மையான பொருளாதார இடத்தை பெற, மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும்.

    இங்கே கூடியுள்ள கூட்டம் சாதாரண கூட்டம் இல்லை. தொண்டர்கள் ரூ.1000 உழைத்தால் ரூ.500 கட்சிக்காக செலவு செய்கின்றனர். யாரிடமும் கமிஷனுக்காக கைக்கட்டி நிற்கவில்லை. ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜனதாவால் மட்டும் தான் தர முடியும்.

    நீலகிரி தொகுதியில் ஊழல்வாதி ராசா எம்.பி.யை அப்புறப்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. ஆ. ராசா ரூ. 1.70 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார்.

    கோவைக்கு பிரதமர் திட்டத்தில் 53 ஆயிரத்து 688 பேருக்கு இலவச வீடு வந்துள்ளது. குடிநீர் 66 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் வருகிறது. இப்படி பல திட்டங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். நாங்கள் அதனை சொல்லி வாக்கு கேட்போம், தி.மு.க. எதனை கூறி வாக்கு கேட்கும். அவர்கள் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து சென்று சிலர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். அப்படி அவர்கள் சென்றபோது, கண்ணீர் துளிகளோடு, திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து செல்வதாக தெரிவித்தனர்.

    இதனால் பெரியார், அவர்களை தி.மு.க. தலைவர்கள் என்று அழைக்கவில்லை. கடைசி வரை கண்ணீர் துளி தலைவர்கள் என்றே அழைத்தார். பெரியார் சுத்தமாக மதிக்காத ஒரு கட்சி என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.

    1965-ல் இந்தி திணிப்பு போராட்டத்தின்போது, பெரியார் இந்தி திணிப்பு போராட்டம் என்பதே தி.மு.க.வின் ஒரு நாடகம். தி.மு.க. கட்சியே ஒரு நாடக கட்சி. கண்ணீர் துளி கட்சி, பொய்யை சொல்லி ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி. இந்த கட்சியை நீங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும். தி.மு.க.வுக்கு தலைவர்கள் கிடையாது. அவர்களுக்கு கொள்கை கிடையாது. மொத்தத்தில் தி.மு.க. என்பது தலைவர்கள், கொள்கை இல்லாத கட்சியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், செயலாளர் ஜெயபால், மத்திய நலத்திட்ட மாவட்ட தலைவர் செயலாளர் ராகவன், சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் லியாகத்அலி, காரமடை நகர தலைவர் ஆனந்தகுமார் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 11-ந்தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 12-ந் தேதி அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஒரு கல் லூரிக்கு இரண்டு மாண வர்கள் பெயர்ப்பட்டியலையும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டிக்கு பள்ளிக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளும், கல்லூரிக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய் மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் பள்ளி களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்புகளும், கல்லூரிக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற் காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

    கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர் களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர் கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப் புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 11-ந் தேதி பள்ளி, கல்லூரியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
    • ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி விருது நகரில் வருகிற 11-ந் தேதி பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப் படும்.

    போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பான பேச்சு திறனை வெளிப்படுத்தும் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2ஆயிரம் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

    ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சேதுசமுத்திர திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று திண்டுக்கல் வந்தார். பின்னர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    தந்தைபெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர். தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.

    இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென்தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.

    வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என பா.ஜ.க மத்தியமந்திரிநிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இத்துறைக்கான அமைச்சர் பேசுகையில், ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி இத்திட்டத்தை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.

    தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பிறகாவது சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும். இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராஜபாளையம்

    தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி ராஜபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு வெங்கடேஷ் ராஜா, அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் ஜீவா, சிறுபான்மை பிரிவு மைதீன் என்ற ராஜப்பா, ஆந்திரா குமார், விக்னேசுவரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமர், ராமராஜா, ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ராஜபாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு விருதுநகர் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நகரசெயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், நகர அவைத்தலைவர் சேது.இன்பமணி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது போல மக்கள் மனதைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.
    • அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை” என்றார்.

    அவர்கள் ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் "கடவுளைக் காணலாம்" என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.

    அப்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார்.

    ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப்படுத்தி விட்டுப் போயிருக்கிறார்.

    பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே" என்றார்.

    அதற்கு மகரிஷி அவர்கள், "அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைநிலையை எல்லை கட்டி ஒரு இடத்தில் ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார்.

    அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.

    நானும் அதைத்தான் சொல்கிறேன். இறையாற்றல் எங்கும் நிறைந்த பரம்பொருள். இறையாற்றல் தான் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளது.

    அவனுள் இறையாற்றலே அறிவாகவும் இருக்கிறது. இதை யோகப் பயிற்சியின் மூலமும் தத்துவ விளக்கங்களையும் கொண்டு சிந்தித்து அறியச் சொல்கிறேன்.

    கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது போல மக்கள் மனதைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.

    அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை" என்றார்.

    -ஆர்.எஸ்.மனோகரன்

    ×