

ஆலங்குளம்:
அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் அவரது உருவப் படத்திற்கு நகர தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நகர செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சுந்தரம், கவுன்சிலர் மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய பிரதிநிதி ஆதிவிநாயகம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கரன், ராசையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.