search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested"

    • பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்
    • நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது

    தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

    யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசி கைதாகியுள்ள சவுக்கு சங்கருக்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்ணுரிமை பெண் பாதுகாப்பு எனப் பெண்கள் நலனுக்காக வெயில் என்றும் பாராமல் மழை என்றும் பாராமல் புயல் என்றும் பாராமல் வெள்ளம் என்றும் பாராமல் கடுமையாக மக்கள் பணியாற்றும் நமது பெண் காவலர்களை மகளிர் காவல் துறையை குறித்து கேவலமாக பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்

    பல தடைகளையும் இன்னல்களையும் கடந்து பெண்கள் காவல்துறையில் பணியாற்றுவதை நாம் கொண்டாட வேண்டும், பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்கள் பணியாற்றுவதை கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

    அதைவிடுத்து காவல்துறையில் உள்ள பெண்களையும் மூன்றாம் பாலினத்தவரையும், அருவருக்கத்தக்க விதமாக சவுக்கு சங்கர் அவர்கள் பேசியதை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

    பாரதி, அம்பேத்கர், பெரியார் போன்ற தத்துவார்த்த தலைவர்கள் கண்ட புதுமை பெண்கள் நாங்கள். சமூக மாற்றத்துக்கான ஒரு சீரிய சித்தாந்தத்தை முன்னெடுத்து அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அரப்பணித்துக் கொண்டவர்கள் தமிழக காவல்துறையை சார்த்த மகளிர் காவலாளிகள். அவர்கள் பெண் என்பதினால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பேசி விட முடியாது. எங்கள் பெண்களின் சுயமரியாதைக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்கு எதிராக தமிழக மகளிர் காங்கிரஸ் தெருவில் இறங்கிப் போராட தயாராக உள்ளோம்.

    பெண்ணினத்தை போற்ற கண்ணியத்தை அளவுகோலாக வைத்து எடைபோடுங்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிந்து முகமதுசு கைலை கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது பயாஸ் (வயது40). வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரை கும்பகோணம் சோழபுரத்தை சேர்ந்த முகமது சுகைல் (32) என்பவர், தான் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் எடுத்துள்ளதாக கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

    இந்த தொழிலில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு பைகளுக்கு ரூ.22 லட்சம் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

    இதனை நம்பிய முகமது சுகைல் முதல் கட்டமாக ரூ.50 லட்சமும், அடுத்த கட்டமாக ரூ. 25 லட்சமும் கொடுத்துள்ளார். இதில் அவர் கொடுத்த தொகைக்கு வட்டியாக ரூ.19 லட்சத்தை முகமது சுகைல் வழங்கி உள்ளார்.

    அதிக வட்டி தருவதாக கூறி அதில் இருந்தும் ரூ.10 லட்சத்தை கூடுதல் முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

    நாளடைவில் முகமது சுகைல் வட்டியும் கொடுக்க வில்லை. பணமும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. அப்போது, ரூ.5 கோடிக்கு ஏலச்சீட்டு போட்டுள்ளதாகவும். அதற்கு தவணை தொகை செலுத்த ரூ.50 லட்சம் கிடைத்தால் அந்த சீட்டை எடுத்து, கடன்களை அடைத்துவிடுவதாக முகமது சுகைல் கூறியுள்ளார். இதையும் நம்பி ரூ.௫௦ லட்சத்தை முகமது பயாஸ் கொடுத்துள்ளார்.

    அதன் பிறகு கொடுத்த பணம் ரூ.1.35 கோடியை திரும்பிக்கேட்ட முகமது பயாஸுக்கு, முகமது சுகைல் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்நிலையில் எஸ்பி அலுவல கத்தில் முகமது பயாஸ் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த போது, தற்காலிகமாக ரூ.10 லட்சத்தை கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக எஸ்பி அலுவலகத்தில் முகமது பயாஸ் மீண்டும் ஒரு புகார் அளித்தார்.

    இந்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முகமது சுகைலையை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வாங்கிய தொகைகளை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து முகமதுசு கைலை கைது செய்தனர்.

    இது தொடர்பாக அவரிடம் தொடர் விசாரணைக்கு பின்னர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
    • மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர்.

    தேனி:

    தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அவரை போலீசார் வேனில் கோவைக்கு அழைத்து சென்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னர் பகுதியில் செல்லும்போது, அந்த வழியாக வந்த காரும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. போலீஸ் வேனின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சவுக்கு சங்கருக்கு உதடு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர். காரில் வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுரேஷ் குமார் அதிக மதுபோதையில் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • குடிபோதையில் தினமும் என்னை திட்டி வந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 46), தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

    சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து மனைவியும் ஒரு மகளும் தனியாக சென்று விட்டனர். சுரேஷ்குமாருடன் அவரது மூத்த மகள் ஆர்த்தி (21) வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மதுபோதையில் தந்தை இறந்து விட்டதாக ஆர்த்தி கூறினார். இதையடுத்து சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேஷ் குமார் அதிக மதுபோதையில் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுரேஷ்குமாரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு தலையில் காயங்கள் இருப்பதாக கூறினார்கள். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவரது மகள் ஆர்த்தியை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தந்தையை கொலை செய்ததை ஆர்த்தி ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

    எனது தந்தை தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்ததால் எனது தாயார் மற்றும் சகோதரி தனியாக சென்று விட்டனர். நான் தந்தையுடன் வசித்து வந்தேன்.

    குடிபோதையில் தினமும் என்னை திட்டி வந்தார். சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் குடிபோதையில் வந்து என்னை தாக்க முயன்றார். அப்போது நான் என்னை பாதுகாத்துக்கொள்ள அவரை தாக்கினேன். அப்போது அவர் சுவரில் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் மறுநாள் மீண்டும் என்னிடம் தகராறு செய்தார்.

    என்னை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தந்தையின் கழுத்தை பிடித்து நெரித்தேன். அப்போது அவர் மயங்கி விழுந்துவிட்டார். ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். மதுபோதையில் தந்தை விழுந்து விட்டதாக கூறினேன். ஆனால் பிரேத பரிசோதனையில் கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் ஆர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தந்தையை மகள் கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எதிரொலித்தது.
    • பிஷப்பை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்திற்குள் புகுந்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எதிரொலித்தது. கடந்த 16-ந்தேதி நடந்த இந்த பயங்கரவாத சம்பவத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பிஷப்பை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் 7 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

    • சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.

    இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதையொட்டிய நகரங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக சி.பி.ஐ. கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் ரோகிணி மற்றும் கேசவ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக பெண்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 7 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களது பெயர் சோனிபட்டை சேர்ந்த நீரஜ், டெல்லி பஸ்சிம் விஹாரை சேர்ந்த இந்து பவார், படேல் நகரை சேர்ந்த அஸ்லம், கன்னையா நகரை சேர்ந்த பூஜா காஷ்யப், மாளவியா நகரை சேர்ந்த அஞ்சலி, கவிதா மற்றும் ரிது ஆகும். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    இந்த கும்பல், குழந்தை இல்லாத தம்பதிகளை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பிறந்த பச்சிளம் குழந்தைகளை தத்துக்கொடுப்பு என்ற பெயரில் முறையாக வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி பலரும் இந்த கும்பலிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் பெறப்பட்டு உள்ளது.

    பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர். இந்த குழந்தைகள் பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 10 குழந்தைகளை இந்த கும்பல் விற்றுள்ளதாக தெரிகிறது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    மேலும் இந்த சோதனையின்போது 2 பச்சிளம் குழந்தைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    இதுபோன்ற சட்டவிரோத குழந்தை விற்பனை செய்யும் தொழில் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார்.
    • இளம்பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார்.

    பெங்களூரு:

    பெங்களூரு தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏ.இ.சி.எஸ். லே அவுட் பகுதியில் வசித்து வரும் 30 வயது இளம்பெண் ஒருவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் தோசை ஆர்டர் செய்தார்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஆகாஷ் (27) என்பவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த தோசையை மாலை 6.45 மணி அளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார். இதையடுத்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து ஆகாஷிடம் கொடுத்தார்.

    இதையடுத்து தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் தண்ணீர் கேட்டார். இதனால் அந்த பெண் தண்ணீர் கொண்டு வர சமையலறைக்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற ஆகாஷ் திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார். உடனே ஆகாஷ் படிக்கட்டு வழியாக இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு தென்கிழக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆகாஷ் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி உணவு டெலிவரி செய்து வருவதும், இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்தவர் என்பவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.

    • தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம்.
    • கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

    தக்கலை:

    பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தக்கலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாநில துணை தலைவர் வக்கீல் ராபரட் புரூஸ், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டார் வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜான் விக்னேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தாரகை கட்பர்ட், நிர்வாகிகள் குமார், செல்வின்ராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மக்களை பிரித்தாள நினைக்கும் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் இன்றைக்கு கோ பேக் மோடி எனும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என்றார்.

    அவரை தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில், தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

    சி.ஏ.ஏ. எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கண்டிக்கின்றோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ராதா கிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
    • தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி படுகொலை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

    சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை காலைத்து வருகின்றனர். pondஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • படுகொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
    • உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்தித்து பேசினர்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியில் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் கோரப்பட்டது.

    உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மைதிலி.

    தம்பதியின் 2-வது மகள் ஆர்த்தி (வயது 9) கடந்த 2-ந் தேதி வீட்டுக்கு வெளியே ஆர்த்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு சி.சி.டி.வி.யில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் எங்கே சென்றார்? என்ற எந்த பதிவும் கிடைக்கவில்லை.

    போலீசார் அந்த பகுதியில் வீடு வீடாக தேடியும் சிறுமி பற்றி தகவல் தெரியவில்லை. 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவும் வலியுறுத்தினர்.

     

    4 நாட்களாகியும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் 40 போலீசார் நேற்று முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அப்போது ஒரு கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. சோலை நகரை ஒட்டிய அம்பேத்கார் நகர் பகுதி மாட்டு கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வாய்க்காலில் வேட்டியால் கட்டி மூட்டை ஒன்று கிடைப்பதை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அதில் மாயமான சிறுமியின் உடல் இருந்தது. அவரை கொலை செய்து கை, கால், வாயை கட்டி மூட்டையாக வீசியது தெரியவந்தது.

    இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலியல் துன்புறுத்தல் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய கோரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ள 5 நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினர்.

    முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்குள் மறியல் செய்த பொதுமக்கள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைத்தனர்.

    இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    கொலையாளிகளை பிடிக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்தார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டிற்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர்.

    இவ்வாறு போலீசார் கூறினார்.

    இதுதொடர்பாக 2 பேரிடமும் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×