search icon
என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    • சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.

    இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார்.
    • தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

    ரெயில் பயணத்தை சிறுவர்கள் விரும்புவார்கள். ஆனால் ரெயிலிலேயே 2 வருடங்களாக வாழ்க்கையை கழிக்கும் ஒரு சிறுவனை பற்றிய தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

    ஜெர்மனியில் உள்ள லாஸ் ஸ்டோலி என்பவர் தனது 15 வயதில் இருந்தே ரெயிலில் வாழ ஆசை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லாஸ் ஸ்டோலி அதனை பொருட்படுத்தாமல் தினமும் ரெயிலிலேயே தனது வாழ்க்கை பயணத்தை கழிக்க தொடங்கினார். தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார். இதற்காக அதிக செலவு செய்கிறார்.

    ஆனால் ஜெர்மன் ரெயில்வே வழங்கும் வருடாந்திர ரெயில் அட்டையை பெற்றுள்ள லாஸ் ஸ்டோலி ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும், முதல் வகுப்பில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.8.5 லட்சம் செலவு செய்கிறார். அதே நேரம் அவர் தான் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

    • அந்த மீன் உள்ள நீர்த்தொட்டியை கடக்கும் போது வினோத சப்தம் கேட்டது
    • இந்த மீனின் உடல் கண்ணாடியை போன்று ஒளி-ஊடுருவும் விசேஷ தன்மையை கொண்டது

    ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் (Berlin) நகரில் ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வினோத ஒலி கேட்டது.

    இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக முனைந்தனர்.

    இதில், டேனியோனெல்லா செரிப்ரம் (Danionella cerebrum) எனும் மிகச் சிறிய வகை மீன் ஒன்று அதன் அங்கங்களில் ஒன்றான "ஸ்விம் ப்ளாடர்" (swim bladder) எனும் உறுப்பில் இருந்து சக்திமிக்க சீரான ஒலியை உண்டாக்குவது தெரிய வந்தது.

    இந்த மீன் வெளிப்படுத்தும் ஒலியின் அளவு மீன் தொட்டியின் நீர் நிலைகளில் 140 டெசிபெல் (decibel) என பதிவாகியுள்ளது.

    இது ஒரு துப்பாக்கி சூட்டின் ஒலிக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.


    12 மில்லிமீட்டர் நீளம் மட்டுமே உள்ள இந்த டெனியோனெல்லா மீன் எழுப்பும் ஒலிதான் உலகின் அனைத்து வகை மீன் இனத்திலும் எழுப்பப்படும் அதிகமான ஒலியாகும்.

    "டிரம்மிங்" (drumming) எனப்படும் இத்தகைய ஒலியானது ஒரு வகையான செய்தி பரிமாற்றம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    டெனியோனெல்லா மீன்களின் உடல் கண்ணாடி போன்று ஒளி-ஊடுருவும்தன்மை (transparent) கொண்டதால் அவை உயிருடன் இயங்கும் போதே ஆராய்ச்சி செய்வது எளிதாக இருந்தது.

    இந்த ஆராய்ச்சியின் போதுதான் டெனியோனெல்லா இருந்த மீன் தொட்டியை கடந்து சென்றவர்கள் அது எழுப்பும் ஒலியை கேட்க முடிந்தது.

    மிகச் சிறிய வகை மீன் மிக அதிக ஒலியை எழுப்பும் வினோதம், ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி கடல்வாழ் உயிரின ஆர்வலர்களுக்கும் சுவாரஸ்யமான செய்தியாக உள்ளது.

    இது குறித்து மேலும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

    • ஐரோப்பாவிலேயே லுஃப்தான்ஸா விமான சேவை 2-ஆம் இடம் வகிக்கிறது
    • லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்

    ஜெர்மனியின் புகழ் பெற்ற விமான சேவை நிறுவனம், லுஃப்தான்சா (Lufthansa).

    அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்வதில் ஐரோப்பாவிலேயே லுஃப்தான்சா விமான சேவை இரண்டாம் இடம் வகிக்கிறது.

    லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்த விமான நிறுவனத்தின் பல்வேறு நிலையங்களில் தரை கட்டுப்பாட்டில் பணி புரியும் 25,000 ஊழியர்களுக்காக அவர்கள் இணைந்துள்ள வெர்டி (Verdi) தொழிற்சங்கம், நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    ஜெர்மனியின் பல துறைகளை சேர்ந்த ஊழியர்களை கொண்ட மிக பெரிய தொழிலாளர் நலச்சங்கம் வெர்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால், லுஃப்தான்சா விமான தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், ஃப்ராங்க்ஃபர்ட், மியூனிச், ஹாம்பர்க், பெர்லின் மற்றும் டஸ்ஸல்டார்ஃப் ஆகிய இடங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட உள்ளது.

    இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வெர்டி தொழிற்சங்கம், பிப்ரவரி 7, புதன்கிழமை காலை 04:00 மணிக்கு தொடங்கி மாலை 07:10 மணி வரை பணி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.


    இதனால் சுமார் 90 சதவீத விமான சேவைகள் பாதிக்கப்படுவதுடன் 1 லட்சம் பயணிகளுக்கும் பயண தடை ஏற்படும்.

    வெர்டி தொழிற்சங்கம், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 12.5 சதவீத உயர்வை கோரி போராடி வருகிறது. ஒரு-நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பயன் இல்லையென்றால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வெர்டி அறிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே ஜெர்மனியில் விமானம், பேருந்து, ட்ராம் (tram), ரெயில், டிரக் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளிலும், விவசாய துறையிலும் பல வேலைநிறுத்த போராட்ட அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வாரிசு உரிமையின் அடிப்படையில அவருக்கு பாட்டி வழியில் இருந்து ரூ.225 கோடிக்குமேல் சொத்துகள் கிடைத்துள்ளது.
    • கொடைவள்ளல்கள் கோடியில் ஒருவராக மிளிர்வர்.

    ஜெர்மனியின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று பி.ஏ.எஸ்.எப். சோடா தொழிற்சாலையாக 1865-ல் இதை தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்கார்ன். தற்போது இந்த நிறுவனம் ரசாயன தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கோலோச்சுகிறது.

    இந்த நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் இளம் வாரிசுகளில் ஒருவர் பத்திரிகையாளராக இருக்கும் மர்லின் ஏங்கல்கார்ன். இவருக்கு சமூக தொண்டு ஆர்வமும் அதிகம். வாரிசு உரிமையின் அடிப்படையில் அவருக்கு பாட்டி வழியில் இருந்து ரூ.225 கோடிக்குமேல் சொத்துகள் கிடைத்துள்ளது.

    31 வயதான அவர், இந்த பணத்தை கொண்டு செல்வச் செழிப்புடன் தனது வாழ்க்கை முழுவதும் வாழலாம். ஆனால் அவர் அதன் மீது கொஞ்சமும் நாட்டமின்றி, பலருக்கும் அதை பகிர்ந்து கொடுக்க தீர்மானித்து உள்ளார். அதற்காக 'மறுபகிர்வு கவுன்சில்' என்ற திட்ட அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆஸ்திரிய குடிமக்கள் 50 பேருக்கு அந்த தொகையை பகிர்ந்து வழங்குகிறார். இதற்காக 5 ஆயிரம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. அவர்களில் 50 பேரை தேர்வு செய்து வாரம் தோறும் குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு சென்று சேரும் வகையில் கொடை வழங்குகிறார்.

    கொடைவள்ளல்கள் கோடியில் ஒருவராக மிளிர்வர். அவர்களில் மர்லின் இளம் கொடையாளர் என்றால் ஆச்சரியமில்லை!.

    • ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்ப்பு.
    • ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.

    இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது. 

    ஜெர்மனி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

    நாளை 1ம் தேதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி நாடு எதிர்பார்க்கிறது.

    தொழிற்சங்கங்கள் 4 நாள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. இந்தநிலையில் சோதனை நடைமுறையாக நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.

    இது நல்ல பலன்களை தரும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

    வாரத்தில் 4 நாள் வேலை செய்வது ஒருநிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் நடைமுறைபடுத்தப்படுகிறது.

    உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

    பெல்ஜியத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் 40 மணி நேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    ஜெர்மனியில் நாளை 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது.

    • தற்போது 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்
    • நம் நாட்டு சட்டங்களை மதித்தவர்கள் இனி நம் நாட்டினர் என்றார் ஓலாப்

    ஜெர்மன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதா, அந்நாட்டில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்களை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது.

    நேற்று, ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) கொண்டு வந்திருக்கும் இந்த மசோதா, 382-234 எனும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உறுப்பினர்களில் 23 பேர் வாக்களிக்கவில்லை.

    தற்போது ஜெர்மனியில் 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.

    இந்த மசோதா சட்டமானால், ஜெர்மனியில் 5 வருட காலங்கள் வசித்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இரட்டை குடியுரிமை இனி அனுமதிக்கப்படும். ஜெர்மனியில் தற்போது வரை இரட்டை குடியுரிமை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரவிருக்கும் புதிய சட்டம் குறித்து அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ், "பல தலைமுறைகளாக ஜெர்மனியில் வசித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்களுக்கு உதவ இந்த புதிய குடியுரிமை சட்டம் பயனளிக்கும். பல தசாப்தங்களாக எங்கள் நாட்டு சட்டதிட்டங்களை மதித்து நடந்த பல அயல்நாட்டினர்கள், இனி நம் நாட்டினர்கள்" என தெரிவித்தார்.

    அந்நாட்டு ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெய்ர் (Frank-Walter Steinmeier) இம்மசோதாவில் கையெழுத்திட்டதும், இது சட்டமாகி விடும்.

    அயல்நாட்டினர் குடியுரிமை பெற ஜெர்மன் முன்னோர்களின் வம்சமாக தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது வரை அங்கு இருந்து வந்தது.

    எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், இச்சட்டம், ஜெர்மன் குடியுரிமையை மலிவாக்கி விடும் என கூறி எதிர்த்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில்முறை பாடிபில்டரான அர்னால்ட் திரைத்துறையில் நுழைந்தார்
    • பாதி தொகையை கரன்சியில் செலுத்த, அர்னால்ட் வங்கிக்கு சென்று வந்தார்

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட்டின் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).

    ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன.

    தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர்.

    ஆஸ்திரியாவில் நடைபெற உள்ள ஒரு சுற்றுச்சூழல் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை சுற்றுச்சூழல் மற்றும் பருவகால சிக்கல்களை எதிர்கொள்ள நன்கொடையாக அளிக்க சென்றார், அர்னால்ட்.

    நேற்று, பயண திட்டப்படி லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து ஜெர்மனியின் மியூனிச் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினார்.

    தென் கிழக்கு ஜெர்மனியில் உள்ள முக்கிய நகரம் மியூனிச் (Munich).

    அர்னால்டின் உடைமைகளை பரிசோதித்த சுங்க இலாகா அதிகாரிகள், உடைமைகள் குறித்த பட்டியலில் இல்லாத கைக்கடிகாரம் ஒன்று அவரிடம் இருந்ததை கண்டுபிடித்தனர்.


    ஆடிமார்ஸ் பிக்கெட் (Audemars Piguet) எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம் சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையது.

    "ஐரோப்பாவிற்கு உள்ளே கொண்டு வரப்படும் எந்த வெளிநாட்டு பொருள் குறித்தும் பயணிகள் முதலிலேயே கூற வேண்டும் என்பது விதிமுறை. யாராக இருந்தாலும் இந்த விதிமுறையில் மாற்றம் இல்லை" என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்கத்துறை அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர். கிரெடிட் கார்டு மூலம் செலுத்த முன்வந்த அர்னால்டிடம் பாதி தொகையை கட்டாயமாக கரன்சியில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதால் அர்னால்ட், வங்கிக்கு சென்று பணம் எடுத்து வந்தார்.

    சுங்க விதிப்படி, வங்கி அதிகாரிகளும் அவருடன் சென்று வந்தனர்.

    அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் மியூனிச் விமான நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் அவர் பயணம் தடைபட்டது.

    • இந்திய அறிவியல் கழகத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவர் அஞ்சனா தேவி
    • இந்திய மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி குறைவு என்றார் அஞ்சனா தேவி

    கர்நாடக மாநிலத்தில் உள்ளது இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science).

    1991ல் கர்நாடகாவின் மங்களூர் பல்கலைக்கழகத்தில் (Mangalore University) அறிவியல் பட்டம் பெற்றவர் அஞ்சனா தேவி (55). இவர் இந்திய அறிவியல் கழகத்தில் பிஹெச்டி (Ph.D) பட்டமும் வெற்றிகரமாக படித்து முடித்தார்.

    தற்போது ஜெர்மனியில் பேராசிரியராக பணியாற்றும் அஞ்சனா தேவி, அங்குள்ள ட்ரெஸ்டன் (Dresden) பகுதியில் உள்ள லெய்ப்னிஸ் மையத்தில் (Leibniz Institute) "மெட்டீரியல் கெமிஸ்ட்ரி" எனப்படும் "பொருள் வேதியியல்" துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அறிவியல் கழகத்திலிருந்து ஜெர்மனியில் இத்தகைய பொறுப்பில் நியமிக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையை பேரா. அஞ்சனா பெற்றுள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலியை போன்று அடுத்த சிலிக்கான் வேலியாக ஜெர்மனி உருவாகி வருகிறது. இந்திய மாணவர்களுக்கு ஜெர்மனியில் பல வாய்ப்புகள் உள்ளன. இங்கு பெரும் வளர்ச்சிக்கான சூழல் நிலவுகிறது. குறிப்பாக செமிகண்டக்டர் துறையில் முதுநிலை கல்விக்கு இங்கு வாய்ப்புகள் அளவுக்கு அதிகமாக உள்ளன. இங்குள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்திய பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு கல்வி திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு வருகின்றன. இந்திய மாணவர்களுக்கு கல்வியில் தியரி (theory) எனப்படும் கோட்பாட்டு அறிவு அதிகம்; ஆனால், பிராக்டிகல் (practical) எனப்படும் செயல்முறை பயிற்சி குறைவு. ஆய்வுக்கூட அனுபவமும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் குறைவு. ஆனால், சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மென்பொருள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தாமல், ஆராய்ச்சி படிப்பிலும் இந்திய மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என பல வருடங்களாக கல்வியாளர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • உலகம் வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது என்றார் ஒலாப்
    • உலகெங்கிலும் மக்கள் ஜெர்மனியிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றார் ஒலாப்

    புத்தாண்டையொட்டி ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    பல துன்பங்கள்; பெரும் ரத்த சேதம். மின்னல் வேகத்தில் நமது உலகம் முன்பை விட வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது. ரஷிய-உக்ரைன் போர், அதிகரிக்கும் எரிபொருள் விலை, ரஷியாவினால் ஏற்படுத்தப்பட்ட எரிவாயு தடை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட பல கவலையளிக்கும் நிகழ்வுகள். ஆனால், ஜெர்மனியர்களான நாம் அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து விடுவோம்.

    விலைவாசி குறைந்துள்ளது. ஊதியம் மற்றும் பென்சன் உயர்ந்துள்ளது. எரிபொருள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் மேல் வரிவிதிப்பு குறைந்துள்ளது.

    போக்குவரத்திலும், பசுமை எரிசக்தியிலும் அரசு முதலீடு செய்து வருகிறது.

    நாட்டை முன்னே கொண்டு செல்ல மக்கள் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மக்கள் நம்மிடம் அதை எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.

    இவ்வாறு ஒலாப் கூறினார்.

    • கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன.
    • 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது.

    தெற்கு ஜெர்மனியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைங்கள் மூடப்பட்டன. இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

    பேயர்ன் முனிசி- யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான முனிச்  மூடப்பட்டது. வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

    • அனைவரையும் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • அன்னாலினா மென்மையாக ராட்மேனின் அத்துமீறலை தவிர்த்தார்

    ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    65 வயதான குரோஷியா நாட்டை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர் கோர்டன் க்ரிலிக்-ராட்மேன் (Gordan Grlic-Radman) இச்சந்திப்பில் பங்கு பெற்றார். அப்போது அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து கொள்ளும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. ஜெர்மனியின் வெளியுறவு துறை அமைச்சர் அன்னாலினா பேர்பாக் (Annalena Baerbock) அந்த நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருடன் குழுவில் நின்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அன்னாலினா அருகில் நின்று கொண்டிருந்த ராட்மேன், அன்னாலினாவை கன்னத்தில் முத்தமிட முற்பட்டார். அன்னாலினா மென்மையாக ராட்மேனின் இந்த செய்கையை தவிர்த்தார்.

    பலரையும் இந்த செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பாக பேசப்பட்டது.

    குரோஷியா நாட்டின் பெண்கள் உரிமை ஆர்வலர் ராடா போரிக், "நெருக்கங்களை அனுமதிக்கும் உறவுகளுக்கு இடையேதான் இது போன்ற செய்கைகளை வெளிப்படுத்த வேண்டும். இந்த இருவருக்கும் இது போன்ற உறவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய அநாகரீகமான செயல்" என விமர்சித்துள்ளார்.

    முன்னாள் குரோஷியா நாட்டு பிரதமர் ஜட்ரன்கா கோஸோர் (Jadranka Kosor), "வலுக்கட்டாயமாக பெண்களை முத்தமிடுவதும் வன்முறைதானே?" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ராட்மேனை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆனால், இது குறித்து ராட்மேன் கருத்து தெரிவிக்கும் போது,"இதில் என்ன பிரச்சனை என எனக்கு தெரியவில்லை. ஒரு சக பணியாளரை சந்தித்த மகிழ்ச்சியை மனிதாபமான அணுகுமுறையில் வெளிப்படுத்தினேன். இந்த சந்திப்பின் போது இவ்வாறு நடந்து கொண்டது பொருத்தமற்ற தருணமாக சிலருக்கு தோன்றலாம். அவ்வாறு நினைப்பவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்" என தெரிவித்தார்.

    தற்போது வரை இது குறித்து அன்னாலினா எந்த கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×