search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள் கைது"

    • ஒரு வருடமாக சிறுவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார்.
    • வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மென்டாடா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி. இவரது பெற்றோர் வெளியூரில் வசிக்கின்றனர்.

    மாணவி அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர்.

    இதனிடையில் கடந்த ஆண்டு சிறுவன் மாணவியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தான். தொடர்ந்து அவனது நண்பர்கள் 3 பேரிடம் இதனை தெரிவித்தான்.

    இதைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் மாணவியை தனிமையில் சந்தித்து மிரட்டினர். மாணவியை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்தனர்.

    ஒரு வருடமாக அவர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார். இதனால் வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார். இதனை கவனித்த அவரது பாட்டி மாணவியிடம் விசாரித்தார்.

    அப்போது தன்னை அங்குள்ள சிறுவர்கள் பலாத்காரம் செய்ததை மாணவி தெரிவித்தார். இது குறித்து கஜபதி நகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

    மேலும் 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேரை கைது செய்து சிறுவர் ஜெயிலில் அடைத்தனர்.

    • மாட்டுப் பண்ணை ஊழியர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார்.

    இந்த பண்ணையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த மாரிச்சாமி சிவரக்கோட்டை சூர்யா நகரில் குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார். கடந்த 18-ந்தேதி வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பாததால் மனைவி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாரிச்சாமி வேலைபார்த்த மாட்டுப் பண்ணையில் விசாரணை நடத்திய போலீசார் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக மிதந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் விசாரணையில் அங்கு பால் கறவை செய்து வரும் 17 வயது சிறுவன் முன் விரோதத்தில் தனது கூட்டாளிகளுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கொலைக்கு காரணமாக கருதப்படும் 17 வயது சிறுவன், 15 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கள்ளிக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    • பேரூர் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது.
    • 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்து கொண்டிருந்தனர்.

    வடவள்ளி,

    கோவை பேரூர் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பேரூர் பட்டீஸ்வரர் கோவி லின் இணைக் கோவிலாக உள்ளது.

    பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வரு வார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவி லில் உண்டியலும் உள்ளது. நேற்று இரவு கோவிலை அர்ச்சகர்கள் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இந்தநிலையில் இரவு 11.30 மணியளவில் கோவிலுக்குள் இருந்து சத்தம் வந்தது. இதனை அந்த வழியாக சென்ற வர்கள் கேட்டு, கோவிலின் அருகே சென்ற போது, உள்ளே 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்து கொண்டி ருந்தனர்.

    இதையடுத்து திருடன். திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டனர். பொது மக்கள் வந்ததை அறிந்ததும், கோவிலுக்குள் நின்றிருந்த 2 பேரும் தப்பியோடினர்.

    இதுகுறித்து மக்கள் பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலில் பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பேரூர் கோவில் சூப்பிரண்டு அமுதா கொடுத்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொண்டா முத்தூர் வஞ்சிமா நகரில் வசித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • தரமணி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த பிலால்மியா என்ற வாலிபர் பிடிப்பட்டார்.
    • வில்லிவாக்கம் அகத்தியர் நகர் பூங்கா அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஹரிகரன், அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் போதை பொருட்களை தடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குணசேகர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தரமணி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த பிலால்மியா என்ற வாலிபர் பிடிப்பட்டார். இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3650 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. வில்லிவாக்கம் அகத்தியர் நகர் பூங்கா அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஹரிகரன், அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மடிப்பாக்கம் ஐயப்பா நகர் பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த மகாவீர் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 105 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இவர்களை தவிர கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதை தடுப்பதற்காக போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மெக்கானிக் கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் பழைய காலனி பகுதியை சேர்ந்த வீரய்யா என்பவர் மகன் பிரகாஷ் (வயது 21). இவர் பழங்காநத்தம் பகுதியில் செயல்படும் ஒரு ஒர்க்‌ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. பிரகாசின் நண்பர்களான அவர்கள் முன்விரோதம் காரணமாக அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதனை கண்ட பிரகாசின் சித்தி வாசுகி என்பவர் தடுக்க முயன்றார். அப்போது அவரது கழுத்தில் கத்தியால் குத்த முயன்றனர். அவர் தப்பி செல்ல முயன்றதால் காலில் கத்திக்குத்து விழுந்தது. இதற்கிடையே கத்திக்குத்து பட்ட பிரகாஷ் வீட்டிற்குள் சென்று விட்டார். இதனால் 6 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதைத்தொடர்ந்து கத்திக்குத்து காயம் அடைந்த பிரகாஷ் மற்றும் வாசுகியை 108 ஆம்புலன்சு மூலம் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் வாசுகி மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பிரகாசை கொலை செய்த 6 பேரும் பிடிபட்டனர்.

    போலீசாரின் விசாரணையில் 6 பேரும் சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசாரிடம் 6 பேர் கும்பல் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் உள்பட நாங்கள் 7 பேரும் ரெயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் எங்கள் 6 பேரையும் தாக்கி விட்டார். இதனால் அவரை பழி வாங்க வேண்டும். அவருக்கு மரண பயத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தோம்.

    ஆனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று கருதவில்லை. அவரை நேற்று பார்த்ததும் ஆத்திரம் அடைந்த 6 பேரும் சரமாரியாக கத்தியால் குத்தினோம். இதில் அவர் இறந்து விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கன்னியாஸ்திரி மடத்திற்குள்ளே இருந்து 3 பேர் சுவர் ஏறி வெளியே குதித்தனர்.
    • 3 பேரும் திருவனந்தபுரத்தை பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒரு கன்னியாஸ்திரி மடம் உள்ளது. இங்குள்ள விடுதியில் கன்னியாஸ்திரிகளும், சில மாணவிகளும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கன்னியாஸ்திரி மடத்திற்குள்ளே இருந்து 3 பேர் சுவர் ஏறி வெளியே குதித்தனர். இதனை கவனித்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, 3 பேரும் அங்கு தங்கி படிக்கும் 3 மாணவிகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். சமூக வலைத்தளம் மூலம் 3 பேருக்கும், மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கத்தை பயன்படுத்தி மாணவிகளிடம் அவர்கள் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளனர். அப்போது இரவு நேரத்தில் மடத்திற்குள் புகுந்த அவர்கள் மாணவிகளுக்கு மதுவாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் சில நாட்களாக நடந்துள்ளது. 3 பேரும் திருவனந்தபுரத்தை பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பலாத்காரம் செய்யப்பட்ட 3 மாணவிகளும் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கைதான 3 பேர் மீதும் போக்சோ, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • கைதான சிறுவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 41 வயது ஆடிட்டர். இவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது 9 வயது மகன் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது மகனை இந்தி படிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் அனுப்பி வைத்தேன்.

    எனது மகன் தினமும் அங்கு சென்று இந்தி படித்து வந்தான். இந்தி ஆசிரியையைக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளான். அவன் 11-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்தான்.

    அவன் மற்றும் அவரது நண்பர்களான பி.கே.எஸ். காலனியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன், மாக்கினாம்பட்டியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் ஆகியோர் சேர்ந்து எனது மனைவியின் புகைப்படத்தை செல்போன் மூலம் மார்பிங் செய்து நிர்வாணமாக சித்தரித்துள்ளனர்.

    பின்னர் அந்த புகைப்படத்தை எனது மகனிடம் காட்டி இந்த படத்தை வலைதளத்தில் பரப்பி உங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவோம். அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் நீ எங்களுக்கு பணம் தர வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

    இதனால் பயந்து போன எனது மகன் வீட்டில் உள்ள பீரோவில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை எங்களுக்கு தெரியாமல் எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளான். வீட்டில் இருந்த பணம் திடீரென மாயமானதால் நான் பீரோவை பூட்டி விட்டேன்.

    தொடர்ந்து எனது மகனிடம் 3 பேரும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். நான் பீரோவை பூட்டியதால் பணம் எடுக்க முடியாமல் திகைத்த எனது மகன், என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்று பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்து உள்ளான்.

    இதை தொடர்ந்து வீட்டின் பீரோவில் இருந்த பணம் மாயமானதால் எனது மகன் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை என்னிடம் கூறினான். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

    எனவே எனது மனைவியின் படத்தை மார்பிங் செய்து மகனை மிரட்டி பணம் பறித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் 3 மாணவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது செல்போனை பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் போக்சோ, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
    • பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    செங்கல்பட்டு:

    வந்தவாசியை அடுத்த கீழ்னாமம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (33). இவர் உறவினர் செல்வத்துடன் வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது சென்னை, மந்தைவெளி, மயிலாப்பூரை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என்பது தெரிந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • மாதவன் மற்றும் அல்லாபிச்சை, முகமது இஸ்மாயில் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய அனைவரும் மாலை நேரங்களில் ஒன்றாக விளையாடுவது வழக்கம்.
    • அல்லாபிச்சையை தேனி சிறையிலும், மற்ற 2 சிறுவர்களும் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்த ஸ்டீபன் மகன் மாதவன்(16). ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 தேர்வு எழுதியிருந்தார். கடந்த 18-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மாதவன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் 20-ந்தேதி அங்குள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தங்களது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து மாதவனுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில் மதுரை செல்லூரை சேர்ந்த அல்லாபிச்சை(23) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து மாதவனை அடித்து கொன்றுவிட்டு கிணற்றில் வீசியது தெரியவந்தது.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் விபரம் வருமாறு:

    மாதவன் மற்றும் அல்லாபிச்சை, முகமது இஸ்மாயில் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய அனைவரும் மாலை நேரங்களில் ஒன்றாக விளையாடுவது வழக்கம். இந்த சிறுவர்களுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளதால் அதனை வாங்கி வருவதற்காக மாதவனை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அதன்படி 17-ந்தேதி ரூ.1500 கொடுத்து மதுபானம், கஞ்சா மற்றும் சாப்பாடு வாங்கி வருமாறு அவர்கள் மாதவனை அனுப்பி உள்ளனர். ஆனால் மாதவன் மது வாங்கி வராமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மறுநாள் ஆத்திரத்தில் இருந்த அவர்கள் 3 பேரும் கத்தியால் குத்தி, தாக்கி கிணற்றில் வீசி சென்றுவிட்டனர்.

    இதனையடுத்து அல்லாபிச்சையை தேனி சிறையிலும், மற்ற 2 சிறுவர்களும் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    ×