search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boys arrest"

    • ஒரு வருடமாக சிறுவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார்.
    • வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மென்டாடா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி. இவரது பெற்றோர் வெளியூரில் வசிக்கின்றனர்.

    மாணவி அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர்.

    இதனிடையில் கடந்த ஆண்டு சிறுவன் மாணவியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தான். தொடர்ந்து அவனது நண்பர்கள் 3 பேரிடம் இதனை தெரிவித்தான்.

    இதைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் மாணவியை தனிமையில் சந்தித்து மிரட்டினர். மாணவியை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்தனர்.

    ஒரு வருடமாக அவர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார். இதனால் வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார். இதனை கவனித்த அவரது பாட்டி மாணவியிடம் விசாரித்தார்.

    அப்போது தன்னை அங்குள்ள சிறுவர்கள் பலாத்காரம் செய்ததை மாணவி தெரிவித்தார். இது குறித்து கஜபதி நகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

    மேலும் 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேரை கைது செய்து சிறுவர் ஜெயிலில் அடைத்தனர்.

    ஆலப்பாக்கத்தில் இன்சூரன்சு நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளையில் ஈடுபட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    ஆலப்பாக்கம் பாலமுருகன் நகர் சித்திரை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சென்று விட்டார்.

    நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. படுக்கை அறையில் உள்ள ஏ.சி. கிரில்லை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருந்தனர்.

    இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    சிறுவர்கள் 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சேலையூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளில் சேர்த்தனர்.
    சென்னை:

    அனகாபுத்தூரை சேர்ந்த ப்ரீத்தி (20). ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சேலையூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நேற்று காத்து நின்றார். செல்போனில் பேசியபடி நின்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி ப்ரித்தி போலீசில் புகார் செய்தார். குரோம்பேட்டை போலீஸ் சானடோரியத்தில் இருந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செல்போனை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டனர். போலீசில் சிக்கிய2 சிறுவர்களும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருவன் ஐ.டி.ஐ.யும், மற்றொருவன் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள மலைவாழ் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    இவரிடம், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 4 சிறுவர்கள் கடந்த 9-ந்தேதி நைசாக பேசினர்.

    பிறகு மாணவியை ஜமுனாமரத்தூர் முருகன் கோவில் பின்புறத்தில் உள்ள மலை அடிவாரத்திற்கு அந்த 4 சிறுவர்களும் அழைத்துச் சென்றனர்.

    அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால், சிறுமியை மிரட்டி சிறுவர்கள் 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதையடுத்து, யாரிடமும் தங்களை பற்றி கூறக்கூடாது என மாணவியை சிறுவர்கள் மிரட்டினர். வன்கொடுமைக்கு ஆளான மாணவி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். இதுப்பற்றி சைல்டு ஹெல்ப்லைனில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.

    கைதானவர்களில் ஒரு சிறுவன், அத்திப்பட்டு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். #Tamilnews
    ×