search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது
    X

    பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது

    சேலையூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளில் சேர்த்தனர்.
    சென்னை:

    அனகாபுத்தூரை சேர்ந்த ப்ரீத்தி (20). ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சேலையூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நேற்று காத்து நின்றார். செல்போனில் பேசியபடி நின்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி ப்ரித்தி போலீசில் புகார் செய்தார். குரோம்பேட்டை போலீஸ் சானடோரியத்தில் இருந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செல்போனை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டனர். போலீசில் சிக்கிய2 சிறுவர்களும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருவன் ஐ.டி.ஐ.யும், மற்றொருவன் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
    Next Story
    ×