search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன.
    • சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி கிராமத்தில் மட்டி கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பெரிய கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 3 ஆண்டுகளாக நல்லமழை பொழிந்ததால் கண்மாயில் நீர் வற்றாமல் போதிய நீர் இருந்து அதனை விவசாயிகள் நெல் வயலுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டு சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து மட்டிக்கண்மாயில் வேகமாக தண்ணீர் வற்றியதால் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மழைவரம் வேண்டியும் மீண்டும் விவசாயம் செழிக்கவும் இலவசமாக மீன்களை பிடித்து செல்ல சுற்று வட்டார கிராம மக்களுக்கு வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    அதனை தொடர்ந்து பிரான்மலை குமரத்த குடிப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, வேங்கைபட்டி, அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் , சிங்கம்புணரி, மருதிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் சாரை சாரையாக கண்மாயை சுற்றி அனைத்து சமுதாய மக்கள் ஒன்று கூடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருந்தனர்.

    இவர்கள் ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க கொக்கு காத்திருப்பது போல் காத்திருந்தனர். அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை வாணவெடி போட்டு வெள்ளை வீசி துவக்கி வைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீன்பிடி திருவிழா என்பதால் எதிர்பார்ப்புடன் காத்திருந்த கிராம மக்கள் வெடி வெடித்து வெள்ளை வீசிய உடனே கண்மாயை சுற்றி காத்திருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஆர்ப்பரித்து மீன்களை அள்ள துள்ளி குதித்து கண்மாய்க்குள் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை சல்லடை போட்டு தேடியதில் விரால், ஜிலேபி, கெண்டை, கட்லா, ரோகு, சிசி, மசரைகெழுத்தி உள்ளிட்ட அதிக ருசியான நாட்டுவகை மீன்கள் கிலோ கணக்கில் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    சிங்கம்புணரி பகுதியில் வடகிழக்கு பருவமழை முடிந்த ஒரே மாதத்தில் நடக்கும் முதல் மீன்பிடி திருவிழா இதுவே என்பதால் குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக ஆயிரக்கணக்கானோர் மீன்பிடிக்க குவிந்ததால் இந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
    • உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ரவி வரவேற்றார்.

    விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை இந்திய தொழில் நுட்ப கழக இயக்குனர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

    இதில் 116 பேர் முனைவர் பட்டமும், பல்கலையின் பல்வேறு துறைகளில் பயின்ற 1863 மாணவர்கள், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,839 மாணவர்களும், இணைவுக் கல்லூரியில் பயின்ற 4181 மாணவர்களும், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 21,443 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர். இதில் 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.


    அதில் 164 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 184 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் ஆவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    இணைவேந்தரும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தார். இதேபோல் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    • அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உள்பட 20 பேர் பாத யாத்திரை சென்றனர்.
    • படுகாயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை:

    தைப்பூச விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் கோவில்களுக்கு அந்தந்த பகுதி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள். தைப்பூச விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு கூட்ட நெரிசலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் பெரும்பாலான பக்தர்கள் முன்கூட்டியை தரிசனத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பி வருகின்றனர்.

    அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள அழகன்குளம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சென்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உள்பட 20 பேர் பாத யாத்திரை சென்றனர். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு டாடா ஏஸ் வேனில் ஊருக்கு புறப்பட்டனர். அந்த வேனை ராமநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் முகம்மது என்பவர் ஓட்டி வந்தார். பின்னால் அமர்ந்து வந்தவர்கள் பாத யாத்திரை சென்ற களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் பயணம் செய்த வேன் இன்று அதிகால சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தளக்கா வயல் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஏர்வாடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

    இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனர் முகம்மது, பின்னால் அமர்ந்து பயணம் செய்த தம்பதியினரான நம்புராஜன், காளியம்மாள் ஆகிய 3 பேரும் வேனுக்கு உள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் அதில் பயணம் செய்த 5 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாதயாத்திரை சென்று திரும்பும்போது கணவன், மனைவி உள்பட 3 பேர் விபத்தில் பலியானது அப்ப குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமான மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    முன்னதாக, பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.

    இந்த நிலையில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காளை முட்டியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் மஞ்சு விரட்டில் 75 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வலையபட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு நடைபெறும் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் வந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.


    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 1,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

    • வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
    • இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

    மானாமதுரை:

    மானாமதுரையில் காங்கிரஸ் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில காங்கிரஸ் தலைவர் என்பது நியமன பதவி. எப்போது கார்கே நினைக்கிறாரோ, அப்போது நியமனம் செய்வார். வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்போது பரிசோதனை முறையில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் விவிபேட் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதை அதிகப்படுத்த வேண்டும்.

    மேலும் ஒரே ஒரு தேர்தலிலாவது அனைத்து வாக்குச் வாவடிகளின் விவிபேட் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் எண்ணிக் காட்டினாலே வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகங்கள் போய்விடும். இந்தி தேசிய மொழி அல்ல. இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆலோசனைக்கூட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பேரிடர் நடக்கும் இடங்களில் முதல்வர் நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய தொழில் நுட்பத்தில் முதல்வர் எங்கிருந்து வேண்டுமானாலும் பேரிடர் மீட்புப் பணிகளைக் கண்காணிக்கலாம். முதல்வரை அதனால் விமர்சனம் செய்யாமல், நிர்மலா சீதாராமன் பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. தொகுதிப் பங்கீட்டில் இந்த முறை காங்கிரசுக்கு மனவருத்தம் கண்டிப்பாக இருக்காது. புதிய கட்சிகள் வந்தால் எங்களுக்குத் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இதில் வருத்தப்பட முடயாது. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சிங்கம்புணரி அருகே 2 இடங்களில் மலைப்பாம்புகள் பிடிபட்டன.
    • மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகள் இடம் பெயர்ந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மகங கன்டான் கோவில்பட்டி குடியிருப்பு பகுதி அருகில் முட்புதரில் மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நிலைய அதிகாரி பிரகாஷ் தலைமை யிலான வீரர்கள் விரைந்து வந்தனர். முட்புதரில் பதுங்கியிருந்த 5 அடி நீள முள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டனர்.

    அதே போன்று சிங்கம்பு ணரி- சுக்காம்பட்டி சாலை யில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் பாம்புகள் பிடிபட்ட தால் பொதுமக்கள் பீதி அடைந் துள்ளனர். பின்னர் அந்த பாம்புகளை தீயணைப்புத்து றையினர், வனத்துறையின ரிடம் ஒப்படைத்தனர்.

    மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகள் இடம் பெயர்ந்து வருவதால் வீடுக ளுக்குள் புகும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.

    • காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • பல்வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் வீல்ஸ் லிமி டெட் நிறுவனம் சார்பில் நேர்முக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வளாக நேர்முக தேர்வில் கல்லூரியின் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட் ரானிக்ஸ் கம்யூனி கேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என பல் வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 35 மாணவர்கள் தேர்வு பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் பார்த்த சாரதி நேர்முக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்புக் கான பணி நியமன ஆணை களை வழங்கினார். மாண–வர்களை கல்லூரி தலை வர் அய்யப்பன் வாழ்த்தி னார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண் டனர்.

    • தேவகோட்டை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே கார்த்திகை திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டிற்கு 8 மைல் தூரமும் சின்ன மாட்டிற்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப் பட்டது. இந்த பந்தயம் தேவகோட்டை சிவகங்கை சாலையில் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு என்று 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாட்டில் முதலாவது மதுரை மாவட்டம் அவனியாபுரம் சாமிகுமார், 2-வது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கருப்பண சேர்வை அழியாபதி பழனிச்சாமி, 3-வது புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.கே.சேர்வை, 4-வது சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம் மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவது சிவகங்கை மாவட்டம் சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை, இரண்டாவதாக புதுக் கோட்டை மாவட்டம் பாஸ்கரன், 3-வது உடப்பன் பட்டி நந்தகுமார் மாடுகள் வெற்றி பெற்றன.

    பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப் பட்டது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு வேட்டி மாலையும் அணி வித்து மரியாதை செலுத்தி மாட்டின் உரிமை யாளர்க ளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப் பட்டது. சாலையில் இரு புறமும் சுமார் ஆயிரக் கணக்கானோர் கண்டு களித்தனர்.

    • நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Sivagangai News Tamil Nadu is becoming the 2nd largest economic state - Minister

    சிவகங்கை

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்ட பத்தில் மாவட்ட அளவி லான பெருந்திரள் கூட்டம் நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் நிறுவனங்களின் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து, தொழில் முனைவோர்களுக்கு தொழிற்கடனுதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் பொருட்டு, ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டு களில், 85 சதவீதம் வாக்கு றுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

    முதல்-அமைச்சரின் லட்சிய கனவான வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டினை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார ரீதியில் உயர்த்தும் விதமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 வருகிற ஜனவரி 7, 8 ஆகிய தேதி களில் சென்னையில் நடை பெற உள்ளது. அம்மாநாடு தொடர்பாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் வழிகாட்டு தலின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீ டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, லட்சிய கனவினை நோக்கி, இம்மாநாடு பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு இலக்காக ரூ.300 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.305.00 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 3162 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இவை அடிப்படையாகவும் அமையும். அதன்படி இந்நிகழ்ச்சியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 31 நிறுவனங்களின் ரூ.305 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந் தங்களை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், தொழில் முனை வோர்கள் 6 நபர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பீட்டி லான தொழிற்கடனு தவிகளும் வழங்கப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜீத்,, மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பால சந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் சாந்தா சகாயராணி, உதவி பொறியாளர் (மாவட்ட தொழில் மையம்) காளிதாஸ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், தொழில் முதலீட்டாளர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிரான்மலையில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
    • விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை தனியார் மண்டபத்தில் வட்டார அளவி லான விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கிருங்காக் கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களில் சிங்கம்புணரி சேவுகப்பெரு மாள் கோவிலை சேர்ந்த 5 ஆயிரம் கோவில் மாடுகள் நிலை கொண்டுள்ளது.

    இந்த மாடுகள் இப்பகுதி யில் விவசாயம் செய்யவிடாமல் விவசாயத்தை அழித்து விடுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நில மாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக விவசாயிகள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுக்கவும்.

    இந்த பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தி விவசாயம் செழிக்க உதவ வேண்டும். பிரான்மலை வட்டார 20 கிராமங்களை சுற்றி விவசாய பயிர்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கோவில் நிர் வாகம் பிடித்து பராமரிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    அரசு மற்றும் நிர்வாகம் இந்த கோவில் மாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் தேவஸ்தான நிர் வாகமும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவறும் பட்சத்தில் 20 கிராம விவசாயிகளும் ஒன்று கூடி சாலை மறியல் செய்யப்படும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மானாமதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    மானாமதுரை நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் ரெங்கநாயகி, துப்புரவு ஆய் வாளர் பாண்டிச் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட வேண்டிய தீர்மா னங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் தெய் வேந்திரன் மானாமதுரையில் பிரதான சாலைகளில் உள்ள மரங்கள் சமீபத்தில் வெட்டப்பட்டுள்ளது.

    இவை ஏன் வெட்டப் பட் டது? இதற்கு யார் காரணம் என்றார். இதற்கு பதிலளித்த தலைவர், இதற்கும், நகராட்சிக்கும் சம்பந்தமில்லை. நெடுஞ்சாலை துறை நிர்வா கம்தான் மரங்களை வெட்டியது என்றார்.

    தி.மு.க. உறுப்பினர் இந்து மதி திருமுருகன் பேசியதாவது:-

    கூடுதலாக தெருவிளக்குகள் கேட்டு இதுவரை தரப்படவில்லை தீர்மானம் மட்டுமே நிறைவேற்றபடு கிறது. கொசுமருந்து அடிக்கவில்லை. இதற்கு பதிலளித்த தலைவர், கொசுமருந்து அடிக்க வரும்போது இனி வரும் நாட்களில் கண்டிப்பாக உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்படும்.

    தி.மு.க. உறுப்பினர் சதிஷ் பேசுகையில், நகராட் சியில் 27 வார்டுகள் உள்ளது.எந்த திட்டம் தொடங்கினாலும் முதல் வார்டு அல்லது கடைசி வார்டில் தொடங்கபடுகிறது. நடுவில் உள்ள எனது வார்டையும் கவனிக்க வேண்டும். எனது வார்டில் அப்பன் பெருமாள் கோவில் அருகே பள்ளிகள் உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனை ஆய்வு செய்தும் இன்னும் மூடப்படவில்லை என பேசினார்.

    அதைத்தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், மானாமதுரை நகரில் விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை களை கட்டுப்படுத்த வேண் டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை நகரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கவும், ஏலம் விடவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

    இனிவரும் காலங்களில் கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைக்க பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

    ×