search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lions"

    • சிங்கம்புணரி அருகே 2 இடங்களில் மலைப்பாம்புகள் பிடிபட்டன.
    • மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகள் இடம் பெயர்ந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மகங கன்டான் கோவில்பட்டி குடியிருப்பு பகுதி அருகில் முட்புதரில் மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நிலைய அதிகாரி பிரகாஷ் தலைமை யிலான வீரர்கள் விரைந்து வந்தனர். முட்புதரில் பதுங்கியிருந்த 5 அடி நீள முள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டனர்.

    அதே போன்று சிங்கம்பு ணரி- சுக்காம்பட்டி சாலை யில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் பாம்புகள் பிடிபட்ட தால் பொதுமக்கள் பீதி அடைந் துள்ளனர். பின்னர் அந்த பாம்புகளை தீயணைப்புத்து றையினர், வனத்துறையின ரிடம் ஒப்படைத்தனர்.

    மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகள் இடம் பெயர்ந்து வருவதால் வீடுக ளுக்குள் புகும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.

    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shepherd #Lion #Goats
    ஆமதாபாத்:

    குஜராத்தில் புகழ்பெற்ற கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. ஆசிய சிங்கங்களின் சரணாலயமாக விளங்கும் இந்த பூங்காவின் ஒரு பகுதி அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பூங்காவின் எல்லையோரம் அமைந்துள்ள அம்பார்டி கிராமத்தை சேர்ந்த பவேஷ் பர்வாட் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி, தனது ஆடுகளை அருகில் உள்ள மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார்.

    இவர் மலையை நெருங்கியதும், அங்கே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த 2 சிங்கங்கள் திடீரென வெளியே வந்து ஆடுகளை வேட்டையாட முயன்றன. இதை எதிர்பாராத பவேஷ் பர்வாட், அந்த சிங்கங்களை விரட்ட முயன்றார். அப்போது ஒரு சிங்கம் திடீரென அவர் மீது பாய்ந்தது.

    இதனால் பவேஷ் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டை போட்டார். இதில் அவரது கைகளிலும், உடலிலும் சிங்கத்தின் நகக்கீறல்கள் விழுந்தன. இதனால் அவர் காயம் அடைந்தார்.

    எனினும் விடாமல் அவற்றுடன் சண்டையிட்ட பவேஷ், இடையிடையே சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கும் அழைத்தார். இதைக்கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு சிங்கங்களை விரட்டினர். பின்னர் காயமடைந்த பவேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Shepherd #Lion #Goats  #tamilnews 
    ×