search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sheep"

    • ஐமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம் செய்து காட்டபட்டது.
    • ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம்.

    அம்பை:

    அம்பாசமுத்திரம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் (சீப்பர்ஸ்) கீழ் ஐமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் அம்பாசமுத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, விவசாயி ராக்சமுத்து ஆட்டுகொட்டகையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம் செய்து காட்டபட்டது.

    சிங்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் தேவிகா பேசுகையில், மழைக்காலங்களில் ஆடுகளில் குடற்புழுக்கள் மற்றும் உண்ணிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க குடற்புழு மற்றும் உண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.

    ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம். ஆடுகளுக்கு மருந்துக் குளியல் அளிக்கும் அன்று இருமடங்கு அடர்த்தியுள்ள உண்ணி நீக்க மருந்தை ஆடுகள் அடைக்கும் கொட்டகைகளின் உட்புற சுவர் மற்றும் சுற்றுபுறத்தின் தரைகளிலும் தெளித்து அங்குள்ள உண்ணிகளை ஒழித்தால் உண்ணிகளின் தாக்குதலை தவர்க்கலாம் என்றார். விவசாயி ராக்சமுத்துவிற்கு வயலில் உண்ணி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் மூலம் ஆடுகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

    இதற்கான ஏற்படுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி, உதவி வேளாண்மை அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின.
    • 3 ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மூங்கில் கொத்து மரம் இருந்துள்ளது.

    இதனிடையே நேற்று மதியம் மூக்கில் மரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    காற்றின் வேகம் காரணமாக மூங்கில் மரத்திலிருந்து மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவியுள்ளது.

    இதனை அடுத்து அங்கிருந்த குடிசை வீடுகளில் தீ பரவியதை தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிய தொடங்கின.

    தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் இரண்டு வாக னங்களில் தீயினை அனை க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகின.

    இதில் ஜெயராஜ், சாந்தி, பாலசுப்பிரமணியம், மல்லிகா, செல்லக்கிளி ஆகியவரின் வீடுகள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின. குறிப்பாக சாந்தி என்பவருது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் அவர் வீட்டில் வளர்த்து வந்த மூன்று ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

    இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் ஆடுகளை திருடும் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
    • திருட்டு கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தை அடுத்துள்ள தேவிப்பட்டி னத்தை சோ்ந்தவர் சரவணன். இவர் தனது ஆடுகளை கழனிக்குடி கண்மாயில் வழக்கம் போல மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை. அப்போது அந்த ஆட்டை 2 போ் இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றனர்.

    இதைப்பாா்த்த சரவணன் அவா்களை விரட்டி சென்று பிடித்து தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீசார் நடத்திய விசாரணையில் ஆடு திருடியது தாமரை ஊரணி முனீஸ்வரன் (34), தேர்போகி முத்துமாரி என்ற பாப்பா (32) என தெரிய வந்தது. இதைத்தொ டா்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனா்.

    இதே போல தனது 3 ஆடுகளை காணவில்லை என்று முருகேசன் என்பவா் ஏா்வாடி போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புத்தேந்தல் பகுதியை சோ்ந்த பூமிநாதன் தனது ஆடுகளை மா்மநபா்கள் திருடிச்சென்று விட்டதாக அளித்தாா். ராமநாதபுரம் பகுதியில் மர்மகும்பல் தொடர்ந்து ஆடுகளை திருடி வருகிறது.

    எனவே மாவட்ட காவல்துறை ஆடுகள் திருடப்படுவதை தடுக்கவும், திருட்டு கும்பலை பிடிக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆர்.எஸ்.மங்கலம் அருகே வீட்டில் கட்டி இருந்த 5 ஆடுகள் திருடப்பட்டது.
    • திருட்டுப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்,மங்கலம் உப்பூர் அருகே உள்ள கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது60). இவரது வீட்டு தொழுவத்தில் கட்டி இருந்த 5 ஆடுகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்லத்துரை திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய வர்களை தேடி வருகிறார். திருட்டுப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.

    • ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆவல்சூரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி லதா. இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேலும் தங்களது வீட்டில் உள்ள காலி இடத்தில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வளர்த்து வந்த 6 ஆடுகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி சென்றுவிட்டனர்.

    அதே போல் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வளர்த்து வந்த ஆட்டையும் மர்ம நபர்கள் திருடிவிட்டனர்.

    இது குறித்து லதா கொடுத்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.

    • அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம்.
    • ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விற்பனை

    திருப்பூர் :

    இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஜூலை 10 ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த பண்டிகைக்கு ஆடுகள் குா்பானி கொடுக்கப்பட்டு இறைச்சியை பகிா்ந்தளிப்பது வழக்கம். அந்நாளில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம். இந்நிலையில், திருப்பூரில் குா்பானி கொடுப்பதற்காக பெரிய அளவிலான செம்மறியாடுகள் வரத்து தொடங்கியுள்ளது.

    இதில் ஆடுகளின் எடை மற்றும் உயரம், நிறம், கொம்பின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆடுகளை விலை பேசி வாங்கிச் செல்கிறாா்கள். கா்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் வாகனங்கள் மூலமாக திருப்பூா் கொண்டுவரப்பட்டுள்ளன.ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விற்பனையாகும் என்று ஜம்ஜம் நகரை சோ்ந்த இஸ்மாயில் என்பவா் தெரிவித்துள்ளாா்.

    • விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு தாசில்தார்கள், வருவாய்த்துறையினர், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊத்துக்குளி தாலுகா புஞ்சை தளவாய்பாளையம், வடுகபாளையம், காவுத்தம்பாளையம், பல்லவராயன்பாளையம் கிராமங்களில் வெறிநாய் கடியால் ஆடுகள், கன்றுகள் ஏராளமானவை பலியாகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெறிநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊத்துக்குளி, அவினாசி, பொங்கலூர் ஒன்றியங்களில் மான்கள் இனப்பெருக்கம் அதிகரித்து, கூட்டம் கூட்டமாக வந்து விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இதை ஈடுகட்ட வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் மான்களை அப்புறப்படுத்தி வனப்பகுதியில் விடவும், வனத்தில் இருந்து மான்கள் வெளியேறாத வகையிலும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வாரந்தோறும் கால்நடை மருத்துவர்கள் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    அரசூர்-ஈங்கூர் உயர்மின் கோபுர திட்டத்தால் அவினாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பணிகளை தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்துக்கான இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் பொதுவாக பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள்.

    இழப்பீடு குறித்து தனித்தனி பட்டியல் வழங்கவும், வெளிப்படைத்தன்மை இருக்கவும் வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகை அந்த கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையம் ரேஷன் கடை பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படுகிறது. இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள குட்டையை தூர்வார வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    வீராணம் அருகே வயலில் மர்மமாக இறந்து கிடந்த ஆடுகள்
    சேலம்:

    சேலம்  மாவட்டம் வீராணம் அருகே உள்ள வளையகாரனூர்  பகுதியை  சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான ஆடுகளை நேற்று    அருகில் உள்ள ஒரு வயிலில்  கட்டி போட்டிருந்தார். 

    மாலையில்  இதில் 3 ஆடுகள்  மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை  பார்த்த சீனிவாசன் கதறினார். பின்னர் சம்பவம்  குறித்து வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். 

    அதன் பேரில்  விச செடிகளை  தின்றதால் ஆடுகள்  இறந்ததா? அல்லது யாராவது விஷம் வைத்து கொன்றார்களா?      என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    தலைவாசல் அருகே நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் பலியான சம்பவத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர்.
    தலைவாசல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை புதூரைச் சேர்ந்தவர் முகமது சுல்தான். விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் கொட்டகை போட்டு அதில் 30 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை முகமது சுல்தானின் மனைவி நூர்ஜகான் ஆட்டு கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு ஆடுகள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கணவருக்கு தகவல் கொடுத்தார். முகமது சுல்தான் வந்து பார்த்தபோது 13 ஆடுகள் செத்து கிடந்தன.

    இதுகுறித்து முகமது சுல்தான் கிராம நிர்வாக அலுவலர் ரகுபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து காட்டுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் மணிவேல் அங்கு வந்து பரிசோதனை செய்தார். பின்னர் ஆட்டின் உடல்கள் புதைக்கப்பட்டன. நாய்கள் கடித்ததில் ஆடுகள் செத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறும்போது, காட்டுக்கோட்டை சுடுகாட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதேபோல் கறிக்கடை பகுதிகளிலும் நாய்கள் சுற்றுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களில் இதே ஊரைச் சேர்ந்த சிலருடைய 100 கோழிகள், 30 ஆடுகள், ஒரு கன்றுகுட்டி ஆகியவற்றை நாய்கள் கடித்துக் கொன்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், என்றனர். 
    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shepherd #Lion #Goats
    ஆமதாபாத்:

    குஜராத்தில் புகழ்பெற்ற கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. ஆசிய சிங்கங்களின் சரணாலயமாக விளங்கும் இந்த பூங்காவின் ஒரு பகுதி அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பூங்காவின் எல்லையோரம் அமைந்துள்ள அம்பார்டி கிராமத்தை சேர்ந்த பவேஷ் பர்வாட் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி, தனது ஆடுகளை அருகில் உள்ள மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார்.

    இவர் மலையை நெருங்கியதும், அங்கே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த 2 சிங்கங்கள் திடீரென வெளியே வந்து ஆடுகளை வேட்டையாட முயன்றன. இதை எதிர்பாராத பவேஷ் பர்வாட், அந்த சிங்கங்களை விரட்ட முயன்றார். அப்போது ஒரு சிங்கம் திடீரென அவர் மீது பாய்ந்தது.

    இதனால் பவேஷ் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டை போட்டார். இதில் அவரது கைகளிலும், உடலிலும் சிங்கத்தின் நகக்கீறல்கள் விழுந்தன. இதனால் அவர் காயம் அடைந்தார்.

    எனினும் விடாமல் அவற்றுடன் சண்டையிட்ட பவேஷ், இடையிடையே சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கும் அழைத்தார். இதைக்கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு சிங்கங்களை விரட்டினர். பின்னர் காயமடைந்த பவேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Shepherd #Lion #Goats  #tamilnews 
    பழனி அருகே, தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் இறந்தன. தெருநாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    கீரனூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மேல்கரைப்பட்டி நால்ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டகை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேந்திரனின் தோட்டத்துக்குள் தெருநாய்கள் புகுந்து கொட்டகையில் இருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த 5 ஆடுகள் துடிதுடித்து இறந்தன.

    நேற்று காலையில் வழக் கம்போல் தோட்டத்துக்கு சென்ற ராஜேந்திரனிடம் தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் இறந்து போனதை அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்துக்கு சென்று இறந்த ஆடுகளின் உடல்களை பார்த்தார். பின்னர் ஊராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்த அவர், தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அதையடுத்து இறந்த ஆடுகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மேய்ச்சலுக்காக விடப்பட்ட கன்றுக்குட்டியை தெருநாய்கள் கடித்து கொன்றன. மேலும் ஆடு, கோழிகள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் எங்கள் பகுதி மக்கள் சாலையில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினரின் எதிர்ப்பால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதி செய்வதை அம்மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. #SheepExport #Maharashtra
    மும்பை:

    விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக இரண்டாயிரம் ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று மதியம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயின் சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஆதரவு கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இதனால், ஆடுகள் ஏற்றுமதி திட்டத்தை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏற்றுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய திகம்பர் ஜெயின் மகாசபா சமிதியின் தலைவர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இதைவிட சிறந்த வழிகள் பல இருப்பதாகவும், ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். #SheepExport #Maharashtra
    ×