search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 குடிசை வீடுகள் அடுத்தடுத்து எரிந்து நாசம்
    X

    தீவிபத்தில் சேதமான வீடு.

    5 குடிசை வீடுகள் அடுத்தடுத்து எரிந்து நாசம்

    • வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின.
    • 3 ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மூங்கில் கொத்து மரம் இருந்துள்ளது.

    இதனிடையே நேற்று மதியம் மூக்கில் மரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    காற்றின் வேகம் காரணமாக மூங்கில் மரத்திலிருந்து மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவியுள்ளது.

    இதனை அடுத்து அங்கிருந்த குடிசை வீடுகளில் தீ பரவியதை தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிய தொடங்கின.

    தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் இரண்டு வாக னங்களில் தீயினை அனை க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகின.

    இதில் ஜெயராஜ், சாந்தி, பாலசுப்பிரமணியம், மல்லிகா, செல்லக்கிளி ஆகியவரின் வீடுகள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின. குறிப்பாக சாந்தி என்பவருது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் அவர் வீட்டில் வளர்த்து வந்த மூன்று ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

    இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×