என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிரிழப்பு ஏற்பட்டது.
    • வனத்துரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அருகே உள்ள நல்லவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயி. இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்துவிட்டு இரவு கொட்டகையில் அடைத்து விட்டு ரகுபதி வீட்டிற்கு சென்றார். அப்போது மர்ம விலங்குகள் கடித்து 5 ஆடுகள் உயிர் இழந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இதே கொட்டையில் 17 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து பலியானது குறிப்பிட்டதக்கது.

    வனப்பகுதியையொட்டி உள்ள கிராம பகுதிகளில் இரவில் மர்ம விலங்குகள் கால்நடைகளை கடித்து கொன்று குவிப்பது வாடிக்கையாக உள்ளது.

    இதே பகுதியில் உள்ள மணிவண்ணன், பழனி, கோபால், சென்னப்பன், சகுந்தலா, சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்துள்ளது. இதை வனத்துரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிர் இழப்பு ஏற்பட்டது.

    அப்போதே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி ஏற்பட்டு இருக்காது.

    மேலும் கால்நடைக்கு ஏற்பட்ட இழப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுமோ என அச்சத்தில் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×