என் மலர்
நீங்கள் தேடியது "ஆடுகள் உயிரிழப்பு"
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிரிழப்பு ஏற்பட்டது.
- வனத்துரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அருகே உள்ள நல்லவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயி. இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்துவிட்டு இரவு கொட்டகையில் அடைத்து விட்டு ரகுபதி வீட்டிற்கு சென்றார். அப்போது மர்ம விலங்குகள் கடித்து 5 ஆடுகள் உயிர் இழந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இதே கொட்டையில் 17 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து பலியானது குறிப்பிட்டதக்கது.
வனப்பகுதியையொட்டி உள்ள கிராம பகுதிகளில் இரவில் மர்ம விலங்குகள் கால்நடைகளை கடித்து கொன்று குவிப்பது வாடிக்கையாக உள்ளது.
இதே பகுதியில் உள்ள மணிவண்ணன், பழனி, கோபால், சென்னப்பன், சகுந்தலா, சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்துள்ளது. இதை வனத்துரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிர் இழப்பு ஏற்பட்டது.
அப்போதே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி ஏற்பட்டு இருக்காது.
மேலும் கால்நடைக்கு ஏற்பட்ட இழப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுமோ என அச்சத்தில் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- கோழிக் கழிவுகளால் ஈர்க்கப்பட்டு கூட்டமாக வரும் நாய்கள் தான் ஆடுகளைக் கடித்து கொன்றுள்ளன.
- குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
உடுமலை :
உடுமலையையடுத்த பெரிய கோட்டை ஊராட்சிக்கு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்ம விலங்குகளால் ஏராளமான ஆடுகள் வேட்டையாடப்பட்டன. இந்த நிலையில் சின்னவீரன்பட்டி புஷ்பகிரி வேலன் நகரைச் சேர்ந்த விவசாயி சவுந்தரராஜன் என்பவரது வீட்டை ஒட்டிய பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்குகள் பட்டிக்குள் இருந்த 18 ஆடுகளையும் கடித்துக் குதறியுள்ளது. ஆடுகளின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடித்ததுடன், உடல் பாகங்களையும் கடித்துத் தின்றுள்ளது. இதில் 18 ஆடுகளும் செத்தன.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் உதவியுடன் இறந்த ஆடுகளை குழி தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் கூறும்போது " கோழிக் கழிவுகளால் ஈர்க்கப்பட்டு கூட்டமாக வரும் நாய்கள் தான் ஆடுகளைக் கடித்து கொன்றுள்ளன.
அந்த நாய்களைப் பிடிக்க உள்ளாட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மர்ம விலங்குகள் அட்டகாசம் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும் காலத்தில் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
- சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
- ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் கடுமையான பீதி அடைந்து உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நைனார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் சுமார் 15 கால்நடைகளை பட்டியில் வழக்கம்போல் அடைத்துள்ளார். இதனை அடுத்து நள்ளிரவில் பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் கடித்து கொடூரமாக கடித்ததில் 13 ஆடுகள் ரத்த காயத்துடன் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தன.
இன்று காலையில் இதனைக் கண்ட ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், வனத்துறை வனவர் சத்தியாபிரியா, வனகாப்பளர் வேல்முருகன், பாபு, அனுமனந்தல் கால்நடை மருத்துவர் சரண்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆடுகளை கடித்த வனவிலங்கு எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை ஓரிடத்தில் கோட்டைச்சாமி அடைத்து வைத்து பராமரித்து வந்தார்.
- 43 குட்டி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரநேரி நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டைசாமி. இவர் 100-க்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை ஓரிடத்தில் கோட்டைச்சாமி அடைத்து வைத்து பராமரித்து வந்தார். இந்தநிலையில் அங்கிருந்த 43 குட்டி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இது குறித்து கோட்டைச்சாமி கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகளும், கால்டை டாக்டர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்த ஆட்டுக்குட்டிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் போதிய இட வசதி, காற்றோட்டம் இல்லாததால் ஆடுகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் சம்பவத்துக்கான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆடுகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.






