search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goat death"

    • கோழிக் கழிவுகளால் ஈர்க்கப்பட்டு கூட்டமாக வரும் நாய்கள் தான் ஆடுகளைக் கடித்து கொன்றுள்ளன.
    • குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    உடுமலை :

    உடுமலையையடுத்த பெரிய கோட்டை ஊராட்சிக்கு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்ம விலங்குகளால் ஏராளமான ஆடுகள் வேட்டையாடப்பட்டன. இந்த நிலையில் சின்னவீரன்பட்டி புஷ்பகிரி வேலன் நகரைச் சேர்ந்த விவசாயி சவுந்தரராஜன் என்பவரது வீட்டை ஒட்டிய பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்குகள் பட்டிக்குள் இருந்த 18 ஆடுகளையும் கடித்துக் குதறியுள்ளது. ஆடுகளின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடித்ததுடன், உடல் பாகங்களையும் கடித்துத் தின்றுள்ளது. இதில் 18 ஆடுகளும் செத்தன.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் உதவியுடன் இறந்த ஆடுகளை குழி தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் கூறும்போது " கோழிக் கழிவுகளால் ஈர்க்கப்பட்டு கூட்டமாக வரும் நாய்கள் தான் ஆடுகளைக் கடித்து கொன்றுள்ளன.

    அந்த நாய்களைப் பிடிக்க உள்ளாட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மர்ம விலங்குகள் அட்டகாசம் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும் காலத்தில் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சூளகிரி அருகே ஆட்டுப் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை சிறுத்தைப் புலி கடித்து குதறியதில் 10 ஆடுகள் இறந்தன. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளன.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி பகுதி சென்னபள்ளி ஊராட்சியை சேர்ந்தது பலவனதிம்மன பள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி போடியப்பா (வயது 70). இவர் பலரது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துசெல்லும் தொழில் செய்து வந்தார். இதில் செம்மரி ஆடுகள், வெள்ளாடுகள் என சுமார் 15 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மேலுமலையில் இருந்து வந்த சிறுத்தைப் புலி இவரது ஆட்டுப் பட்டியில் புகுந்தது. இதில் 15 ஆடுகளை ஆவேசமாக கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் இறந்தன. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளது. 

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனப்பாதுகாவலர் மகேந்திரன் மர்ம விலங்குகள் நடமாடிய பகுதியில் கால் தடங்களை சேகரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தைப் புலியாக இல்லாமல் வெறிநாய்களாக இருக்கலாம் என தெரிவித்தார்.

    மேலும், கால்நடை மருத்துவர் ஆடுகள் எப்படி இறந்தது என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றார். சோதனை முழுவதுமாக முடிவடைந்த பிறகுதான் ஆடுகள் இறந்ததன் முழுவிவரம் தெரியவரும்.
    ×