search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜகண்ணப்பன்"

    • பொன்முடிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
    • அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என். ரவி எழுதியுள்ள கடிதத்தில்,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 13.3.2024 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    மேலும், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்கிறேன்.

    இவ்வாறு அக்கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

    • 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
    • உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ரவி வரவேற்றார்.

    விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை இந்திய தொழில் நுட்ப கழக இயக்குனர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

    இதில் 116 பேர் முனைவர் பட்டமும், பல்கலையின் பல்வேறு துறைகளில் பயின்ற 1863 மாணவர்கள், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,839 மாணவர்களும், இணைவுக் கல்லூரியில் பயின்ற 4181 மாணவர்களும், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 21,443 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர். இதில் 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.


    அதில் 164 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 184 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் ஆவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    இணைவேந்தரும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தார். இதேபோல் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    • நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.
    • காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    சட்டசபையில் அறிவித்த படி "நடப்போம் நலம் பெறுவோம்" எனும் திட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் அறி விக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபா தைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவதற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் நாளை 4-ந் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும் நடைபயிற்சி முடிவில் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற வுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்திற்காக 8 கி.மீட்டர் தூர சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை, புதிய சோதனை சாவடி, காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடைபயிற்சியில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக குடிநீர், ஓய்வு நாற்காலிகள், வழிகாட்டி பலகைகள், நடைபயிற்சி நன்மைகள் குறித்த பதா கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நாளை (4-ந்தேதி) சனிக்கிழமை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்குகிறார். நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    ×