search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajakannappan"

    • நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.
    • காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    சட்டசபையில் அறிவித்த படி "நடப்போம் நலம் பெறுவோம்" எனும் திட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் அறி விக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபா தைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவதற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் நாளை 4-ந் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும் நடைபயிற்சி முடிவில் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற வுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்திற்காக 8 கி.மீட்டர் தூர சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை, புதிய சோதனை சாவடி, காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடைபயிற்சியில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக குடிநீர், ஓய்வு நாற்காலிகள், வழிகாட்டி பலகைகள், நடைபயிற்சி நன்மைகள் குறித்த பதா கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நாளை (4-ந்தேதி) சனிக்கிழமை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்குகிறார். நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜகண்ணப்பன் பேசினார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அங்குள்ள அண்ணாசிலை அருகே நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிவகங்கை, ராமநாதபுரம் ஆவின் சேர்மன் அசோகன், ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கரு.சிதம்பரம், பேரவை வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 1991-96-ல் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் அமைச்சர், கட்சியின் பொருளாளர் என பெரிய பொறுப்புகளை வழங்கியது திருப்பத்தூர் தொகுதி. உள்ளாட்சி தேர்தலை நாம் நடத்தவில்லை என்பது உண்மை. காரணம் அன்று கட்சியில் சில பிரச்சினைகள் வந்தது, இன்றைக்கு முடிந்துவிட்டது. வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்.

    12 நாடுகளில் சொத்துக்கள் வாங்கிய நபர்கள் ப.சிதம்பரமும், அவரது மகனும் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பா.ஜ.க.வுடன் எங்களுக்கு உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்களோ, தொண்டர்களோ கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக, பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்த திருநாவுக்கரசார் இருக்கிறார். ஆனால் அந்த கட்சியில் 9 தலைவர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் யாரும் தலைவர்கள் கிடையாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், நான், மாவட்ட செயலாளர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தொண்டர்கள் தான். சில அதிகாரிகள் செய்கின்ற தவறுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படலாம். எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க. வெற்றியை பெறும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திரைப்பட நடிகர் சிங்கமுத்து, நெற்குப்பை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, முன்னாள் நகர துணைச் செயலாளர் பிரேம்குமார், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சின்னையா அம்பலம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.
    ×