search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்

    • பொன்முடிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
    • அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என். ரவி எழுதியுள்ள கடிதத்தில்,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 13.3.2024 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    மேலும், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்கிறேன்.

    இவ்வாறு அக்கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

    Next Story
    ×