search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ராஜகண்ணப்பன்"

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

    தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று அவர் கூறினார்.

    • கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
    • பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது. கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    இந்நிலையில், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.

    • 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
    • உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ரவி வரவேற்றார்.

    விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை இந்திய தொழில் நுட்ப கழக இயக்குனர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

    இதில் 116 பேர் முனைவர் பட்டமும், பல்கலையின் பல்வேறு துறைகளில் பயின்ற 1863 மாணவர்கள், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,839 மாணவர்களும், இணைவுக் கல்லூரியில் பயின்ற 4181 மாணவர்களும், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 21,443 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர். இதில் 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.


    அதில் 164 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 184 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் ஆவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    இணைவேந்தரும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தார். இதேபோல் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    • ராமநாதபுரத்தில் டீ கடைக்காரருக்கு நிதிஉதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
    • டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் டீக்கடை வைத்தி ருப்பவர் சிவலிங்கம். இவர் நேற்று வழக்கமாக கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவில் பெய்த கன மழை காரண மாக இவரது கடைக்கு அருகில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து டீக்கடையில் விழுந்தது.

    இதில் இந்த கடை முற்றி லும் சேதமடைந்தது. இது குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனுக்கு தெரிய வந்ததை அடுத்து பாதிக்க பட்ட சிவலிங்கத் திற்கு நிதிஉதவி வழங்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தலைமையில் கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த நிதியுதவியை வழங்கினர்.அருகில் பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்தில் நிரந்தர மேற்கூரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
    • முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் மற்றும் கமுதி வட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் விழாவை–யொட்டி மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டப்பணி களை பார்வையிடுதல் மற் றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் பங்கேற்பு

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் முன்னி லையில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய திட்டப்பணிகளை பார்வையிட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத் தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச் சர் ராஜகண்ணப்பன் பர மக்குடி வட்டம், பார்த்திப னூர் பகுதியில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலி ருந்து கமுதி புறவழிச்சாலை ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினை பார்வை யிட்டு, நாளை (30.10.2023) பசும்பொனில் நடைபெறு கின்ற பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்க ளுக்கு பயன்பெறும் வகை யில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், இந்த புறவழிச்சாலையின் மூலம் பசும்பொன்னிற்கு வரக்கூடியவர்கள் பார்த்தி பனூர் நகர் பகுதிக்குள் வராமலும் எந்த ஒரு இடையூ றுமின்றி பசும்பொன் செல் வதற்கு ஏதுவாக பயனுள்ள தாக இருக்கும் என தெரி வித்தார்.

    பின்னர் அபிராமம் அருகே உள்ள மார்னிங் ஸ்டார் பெண்கல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணி கள் நிழற்குடை மற்றும் பசும்பொன்னில் முதுகுளத் தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட் டப்பட்ட பயணிகள் நிழற்கு டையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் சென்று வரும் வழியில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் நிரந் தர மேற்கூரை அமைக்கப் பட்டுள்ளதை அமைச்சர் திறந்து வைத்தார்.

    பின்னர் பசும்பொன்னில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புறத் தார்சா லையினை பார்வையிட்ட துடன், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மருத் துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளை போதியளவு அமைத்து செயல்படுத்திட வேண்டுமென அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரெத்தினசாமி, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ் செல்வி, கமுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசு தேவன், வட்டாட்சியர் சேது ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள்.
    • முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் வினா-விடை நேரத்தில் வந்தவாசி தொகுதியில் கோரைப்பாய் நெசவு பூங்கா அமைக்க அரசு முன் வருமா? என வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-

    கதர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வந்தவாசி மத்திய பாய் நெசவாளர்கள் மற்றும் கோரை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 1962 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உயர்ந்துள்ளது.

    சங்கத்தில் 36 வகைகளில் காதி கிராப்ட், அரசு மருத்துவமனைகள் சர்வோதய சங்கங்கள், அரசு பள்ளிகள், கல்லூரி விடுதிகள் அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் வாரியத்தால் நடத்தப்படும் கண்காட்சிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள். இச்சங்கத்தின் பாய் வகைகள் கதர் வாரியத்தின் வழிகாட்டுதலின்படி உரிய வகையில் சந்தை படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய ஒரு பாய் உற்பத்தி செய்யும் சங்கம் உள்ளது. வந்தவாசியிலும் சிறுபான்மையினர் சார்பில் அதிக நபர்கள் வசிக்கிறார்கள். இடம் வழங்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.

    ஆவூர் மற்றும் வந்தவாசியில் பாய் நெசவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். சீர்காழியில் இருக்கும் பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது இல்லை. அதே போன்று பாய் நெசவு பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கீழ்பெண்ணாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப் பன், "ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பாய் நெசவு தொழில் பொருட்கள் அரசு நிறுவனங்களுக்கு முறையாக அளிக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி அல்லது ஆவூரில் பாய் உற்பத்தியாளர் சங்கம் அமைக்கப்பட்டு பாய் நெசவுப் பூங்கா அமைப்பது குறித்து இடம் வழங்கப்படுமானால் பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    • பனை விதைகள் நடும் தொடக்க விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
    • நிர்வாகிகள், உறுப்பினர்கள்‌ திரளாக கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பை யூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரி யம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி, சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாரா யணன் வழிகாட்டுதலின் படி பனை விதை நடும் விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வ நாதன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், பனைமர வாரிய ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கலா கணேசன்,

    சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் பி.ஜி.ஜெகன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முரு கன், சாயல்குடி பேரூர் கழக செயலாளர் ஜெயபால், நகர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் குலாம் மைதீன், ஆப்பனூர் ஆறுமுக வேல், கோவிந்தராஜ், அண்ணாமலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநி திகள், பனைமர தொழிலா ளர் நலவாரியம் சார்ந்தோர், மற்றும் பொதுமக்கள், தமிழ் நாடு நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
    • போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே கண்டாங்கி பட்டியில் உள்ள மவுண்ட் லிட்டரா சி.பி.எஸ்.இ. பள்ளியில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மாநிலங்களுக்கு இடையே தமிழக மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 19 வயதுக்குட்பட்ட 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இறுதி நாள் போட்டியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு பரிசு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் பல தடைகளை மீறி சிறப்பான மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். 8½ கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் குறை இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் அணி திரள வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட மாணவ விடுதிகளில் உணவு, சமையலறை, கூடுதல் இடவசதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசாணை வெளியானதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மாணவிகளின் நலன் கருதி சீர்மரபினர் மாணவிகள் விடுதி தொடங்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தேவர் கல்லூரி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவிகள் விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக் கல்லூரியில் படிக்கும் 100 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் புதிதாக விடுதி கட்டிடம் கட்ட கடந்த 9-ந் தேதி அரசாணை வெளியானது.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.

    மதுரை:

    மதுரை முத்துப்பட்டியில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ரூ.23 லட்சம் மதிப்பிலான கட்டிடப் பணிகளை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் செயல்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் கடந்த ஆட்சியை விட திறம்பட செயல்பட்டு வருகின்றன.

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை சார்பிலான பள்ளிகளில் நடைபெறும் கட்டிடப் பணிகளையும், வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

    இன்று மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளை மேம்படுத்த முதலமைச்சர் ரூ.100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

    மேலும் தமிழக முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் 1356 பள்ளிகளிலும், விடுதிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், கள்ளர் சீரமைப்புத்துறை செயலாளர் நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×