search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் காங்கிரசுக்கு தொகுதிகள் குறையும்- கார்த்தி சிதம்பரம்
    X

    புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் காங்கிரசுக்கு தொகுதிகள் குறையும்- கார்த்தி சிதம்பரம்

    • வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
    • இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

    மானாமதுரை:

    மானாமதுரையில் காங்கிரஸ் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில காங்கிரஸ் தலைவர் என்பது நியமன பதவி. எப்போது கார்கே நினைக்கிறாரோ, அப்போது நியமனம் செய்வார். வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்போது பரிசோதனை முறையில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் விவிபேட் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதை அதிகப்படுத்த வேண்டும்.

    மேலும் ஒரே ஒரு தேர்தலிலாவது அனைத்து வாக்குச் வாவடிகளின் விவிபேட் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் எண்ணிக் காட்டினாலே வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகங்கள் போய்விடும். இந்தி தேசிய மொழி அல்ல. இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆலோசனைக்கூட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பேரிடர் நடக்கும் இடங்களில் முதல்வர் நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய தொழில் நுட்பத்தில் முதல்வர் எங்கிருந்து வேண்டுமானாலும் பேரிடர் மீட்புப் பணிகளைக் கண்காணிக்கலாம். முதல்வரை அதனால் விமர்சனம் செய்யாமல், நிர்மலா சீதாராமன் பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. தொகுதிப் பங்கீட்டில் இந்த முறை காங்கிரசுக்கு மனவருத்தம் கண்டிப்பாக இருக்காது. புதிய கட்சிகள் வந்தால் எங்களுக்குத் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இதில் வருத்தப்பட முடயாது. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×