search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cattle cart"

    • தேவகோட்டை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே கார்த்திகை திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டிற்கு 8 மைல் தூரமும் சின்ன மாட்டிற்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப் பட்டது. இந்த பந்தயம் தேவகோட்டை சிவகங்கை சாலையில் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு என்று 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாட்டில் முதலாவது மதுரை மாவட்டம் அவனியாபுரம் சாமிகுமார், 2-வது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கருப்பண சேர்வை அழியாபதி பழனிச்சாமி, 3-வது புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.கே.சேர்வை, 4-வது சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம் மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவது சிவகங்கை மாவட்டம் சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை, இரண்டாவதாக புதுக் கோட்டை மாவட்டம் பாஸ்கரன், 3-வது உடப்பன் பட்டி நந்தகுமார் மாடுகள் வெற்றி பெற்றன.

    பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப் பட்டது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு வேட்டி மாலையும் அணி வித்து மரியாதை செலுத்தி மாட்டின் உரிமை யாளர்க ளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப் பட்டது. சாலையில் இரு புறமும் சுமார் ஆயிரக் கணக்கானோர் கண்டு களித்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழா

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இந்த மாட்டுவண்டி பந்தயம் காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 28 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 52 ஜோடிகள் என மொத்தம் 91 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 52 வண்டிகள் கலந்து கொண்ட தால் 27 மற்றும் 25 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    அதேபோன்று மாடு ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு 4 காளைகள் இணைந்து 2 வண்டிகள் ஒன்றாய் சென்றதால் சாலையில் நின்று மாட்டு வண்டியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் சிதறி அடித்து ஓடினர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×