search icon
என் மலர்tooltip icon
    • டாஸ்மாக் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    • காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வரும் மதுபான பெட்டிகள் சுமை இறக்கும் தொழிலாளருக்கு கூலி உயர்வு கேட்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுபான பெட்டிகளை கடைகளுக்கு கொண்டு செல்லும் தனியார் ஒப்பந்ததாரர் கடந்த பல ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமலும், அதனை கொடுக்க மறுத்தும் தொழிலாளர் வைப்பு நிதிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது சம்பந்தமாக கலெக்டர், மண்டல மேலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

    இதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. மதுபான பெட்டிகள் சுமை இருக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சிவகங்ைக மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து மதுபானங்களை ஏற்றாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருந்து அன்னவாசல் கிராமத்துக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அன்னவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    இந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 143 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் தகுதியுடைய 83 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அந்த மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறய தினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்ப டுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு 6.8 கிலோ மீட்டர் தொலைவில் புதிய சாலை அமைப்பதற்கென பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ4.08கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அரசாணை பெறப்பட்டு, பணிகள் ெதாடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.38லட்சத்து 30ஆயிரத்து 910 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முககையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மாரிமுத்து, அன்னவாசல் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயலட்சுமி, வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அருகே பெருங்கற்கால இரும்பு ஆலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • உருக்கு கழி­வு­கள் அதி­கம் காணப்­படு­கின்றன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வலசை கிராமம் காட்டுப்பகுதியில் தென்னக வரலாற்று மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தருனேஷ்வரன் வரலாற்றுத் துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது இந்தப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்தப்பகுதியில் ஏராள மான பெருங்கற்கால இரும்பு உருக்கு கழிவுகளும், சுமார் 4 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட துண்டு குழாய்களும் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவை இரும்பு உலைகளை எரியூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வையாகும்.

    ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பு, உருக்கு கழிவுகள் ஆகியவையும் அதிகம் காணப்படுகின்றன. பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பு பொருள்களை தயாரிக்கும் தொழிற்கூடத்தை அமைத்திருக்க வேண்டும்.

    சுமார் 2,500 ஆண்டுக ளுக்கு முன்பு இங்கு இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனி தர்கள் வசித்திருக்கலாம். அவர்கள் இரும்பை உலையில் வைத்து தனியாக பிரித்து, அதன் மூலம் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், போன்ற பல பொருள்களை தயாரித்துள்ளதை அறிய முடிகிறது. இந்தப்பகுதியில் இரும்பு உருக்கு கழிவுகள் குவியலாக காணப்படுகிறது, பல துண்டு குழாய்களும் மேற்பரப்பில் கண்டறி யப்பட்டது.

    இந்தப்பகுதிகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளதை பார்க்கும்போது இங்கு காணப்படும் அதிகப் படியான செம்பூரான் கற்களே இதற்கு காரணம் எனலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொண்டியில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் சாதனை மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.
    • உயர் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஐக்கிய ஜமாஅத் மற்றும் ராமநாத புரம் எகனாமிக் சேம்பர் இணைந்து கல்வி வழி காட்டி நிகழ்ச்சியை நடத் தின. இதில் மாண வர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    உயர் கல்வியின் முக்கி யத்துவம் பற்றி பேராசிரியர் முகம்மது அப்துல்லாஹ், ஆசிரியப்பணி மற்றும் அரசு பள்ளிகள் பற்றி பேராசிரியர் சுல்தான், மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி சம்பந்த மாக பேராசிரியர் சுல்தான் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த 17 மாணவ-மாணவிகளை பாராட்டி கேடயம், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    • ராமநாதபுரத்தில் 26-ந் தேதி மீனவர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
    • கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் கலெக்டரை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து வருகிற 26-ந்தேதிமாலை 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மீனவர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம். மேலும் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

    கீழக்கரை

    ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற மே 21-ந் தேதி மாலை மவுலீதுடன் தொடங்குகிறது. மே 31-ந் தேதி மாலை கொடியேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து, ஜூன் 12-ந் தேதி மாலை துவங்கும் சந்தனக்கூடு திருவிழா, ஜூன் 13 அதிகாலை மக்பராவில் சந்தனம் பூசப்படுகிறது.

    இந்த நிலையில், சந்தனக்கூடு திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு தலைமையில் நடந்தது. கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மே 31 முதல் ஜூன் 13 வரை முக்கிய இடங்களில் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ஏர்வாடி நகர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் பேண வேண்டும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறின்றி வாகனங்கள் வந்து செல்ல வேண்டும், கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் சமுதாயம் சார்ந்த கொடிகள் எடுத்து வரக்கூடாது, மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு தர்ஹா கமிட்டி உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகமது பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகவேல், ஜோதி மாணிக்கம், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தினம் தினம் பல குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஐ.ஏ.எஸ். தரத்திலுள்ள ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டது. கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்த போது பள்ளிக்கல்வி இயக்குநராக பணிபுரிபவர் கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார். இதனால் பள்ளிக்கல்வி இயக்குநர்களுக்கு ஆசிரியர்களின் பணி சம்மந்தமான அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். அதேபோல் மாணவர்களின் உளவியல் சம்மந்தமான அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்.

    தமிழ்நாடு கல்வித்து றையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்தவரை பள்ளி கல்வித்துறை சிறப்பாக இருந்தது. ஆனால் கல்வித்துறையில் இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டதில் இருந்து கல்வித்துறையில் பல குழப்பங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்களில் ஈடுபடுவதில் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமனம் செய்யப்படாமல் இருப்பது அனைத்து ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆணையர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி அப்பணியிடத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அனுபவமிக்க இணை இயக்குநர்களை பள்ளிக்கல்வி இயக்குநர்களாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொண்டி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • தொண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தைச் சேர்ந்தவர் தூய மணி (வயது65), மீனவர் இவரது மகள் தனலட்சுமி (28). இவர் தொண்டியில் செயல் பட்டு வரும் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் தட்டச்சு செய்பவராக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தனலட்சுமின் தந்தை தூயமணி எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தொண்டியில் நேற்று முன்தினம் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த தொண்டீஸ்வ ரன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மறுநாள் அதே பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம்பெண் தனலெட்சுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன படிப்புகளை படிக்கலாம்? என்பது பற்றி பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கம் அளித்தார்.
    • கூடுதல் வெற்றி பெறலாம்.

    மதுரை

    எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன படிப்பு படிக்கலாம் என்று பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பொதுவாக மாணவர்கள் அவரவர் சொந்த விருப்பப் படியும், ஆர்வத்தின் அடிப் படையிலும் உயர் கல்விகள் தேர்ந்தெடுத்து படித்தால் அதிவேக முன்னேற்றம் அடையலாம். இருந்தாலும் அவர வர் ராசிப்படி ராசிக் கேற்ற குணங்கள், தன்மை அடிப்படையில் உயர் கல்வியை தேர்ந்ெதடுத்து படித்தால், மேலும் முன்னேற்றம் அடையலாம் என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.

    அதன் அடிப்படையில் மேஷ ராசிக்காரர்கள் கணிதம் எந்திரவியல் அரசியல் படிப்புகளையும், ரிஷப ராசியினர் கலை, இலக்கியம், ஜோதிடம் மருத்துவ துறையிலும், மிதுன ராசியினர் ஆசிரியர் பயிற்சி, பட்டய கணக்கு, ஆராய்ச்சி படிப்புகளையும், கடக ராசிக்காரர்கள் மருத்துவம், அறிவியல், நீர், கடல் சார்ந்த படிப்பு களை யும், சிம்ம ராசிக்காரர்கள் மின்னியல், சட்டம், அரசியல் சார்ந்த படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

    இதேபோல் கன்னி ராசிக்காரர்கள் ஆசிரியர் பயிற்சி , பட்டய கணக்கு, மனோ வியல் படிப்பு களையும், துலாம் ராசிக் காரர்கள் சட்டம் நீதித்துறை, வணிகம் சார்ந்த, படிப்பு களையும், விருச்சிகம் ராசிக் காரர்கள் நெருப்பு, மின்னி யல், பாதுகாப்பு சம்பந்தப் பட்ட துறைகளையும், தனுசு ராசிக்காரர்கள் சித்த மருத்துவம், ஜோதிடம், மனோவியல் துறைகளையும், மகரம் ராசிக்காரர்கள் ஆசிரியர் பயிற்சி, கணிதம், அரசியல் சார்ந்த படிப்பு களையும், கும்ப ராசிக் காரர்கள் மின்னியல், எந்திரவியல் சார்ந்த படிப்பு களையும், மீன ராசிக் காரர்கள் கலைத்துறை அரசியல் அறிவியல் மருத்துவம் சார்ந்த படிப்பு களையும் தேர்ந்தெடுத்தால் கூடுதல் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் கூறினார்.
    • ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.

    மதுரை

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

    இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இனி கால்நடைகளுக்கு எந்த தீங்கும் நடைபெறாமல் இன்னும் கூடுதல் கவனத்தோடு போட்டியை நடத்துவோம். மாநில அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய அரசு சார்பிலும் வாதாடினர். அவர்கள் அளித்த தகவல் வலுவாக இருந்தது. இது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி. சத்தியம், உண்மை, உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.

    2007-ல் இருந்து வழக்கை நடத்துவதில் கவனத்துடன், வலுவான அமைப்பாக இருந்து வெற்றி பெற்றோம். நாங்கள் மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதன் பேரில் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி. ஆகியோரிடம் இந்த வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன் பேரில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டு வாதாடினர். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மத்திய-மாநில அரசுகள் இரு வேறு கொள்கையோடு செயல்பட்டாலும் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.

    பல காலக்கட்டங்களில் சர்ச்சைக்கு ஆளாகி இருந்த ஜல்லிகட்டு தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீாப்பால் அக்னி பிரவேசம் செய்து வெளிவந்திருக்கிறது. இது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பொதுச்செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் வீரணசாமி, சிறாவயல் வேலுசாமி, பிரகாஷ், விராதனூர் நாகராஜ் ஆகிேயார் உடனிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு பேரவை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அலங்காநல்லூர்

    ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. இதை வரவேற்று கொண்டும் வகையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலை சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் விழா குழுவினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் காளை களுக்கும், பொதுமக்க ளுக்கும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ் ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ் கூறுகையில், பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருந்தோம். எங்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றனர்.

    • ஏ.டி.எம். கார்டை வாங்கி பெண்ணிடம் ரூ.30ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    மேலூர்

    மேலூர் காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மனைவி வைகை ஜோதி (வயது42). பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    அவர் அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்புவது வழக்கம். அதேபோல் கணவர் பணம் அனுப்பியதால் அதை எடுப்பதற்காக வைகை ஜோதி மேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். சென்டர் சென்றார். அப்போது அங்கு பணம் எடுக்க பலர் நின்றிருந்தனர். இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வைகை ஜோதியிடம் பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    அதை நம்பி வைகை ஜோதி அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் தெரிவித்து ள்ளார். அந்த வாலிபர் பணம் வரவில்லை என்று வேறு கார்டை அவரிடம் மாற்றி கொடுத்து விட்டு வைகை ஜோதியின் ஏ.டி.எம் .கார்டில் இருந்து ரூ.30,ஆயிரம் எடுத்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகை ஜோதி மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×