search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனக்கூடு"

    • தர்கா சந்தனக்கூடு விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
    • சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சந்தனக்கூடு திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தன கூடு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கமுதி- சுந்தரபுரம் தைக்கா வீட்டில் இருந்து இந்த சந்தன கூடு ஊர்வலம் புறப்பட்டது.தர்ஹா வின் நிர்வாக தலைவரும், பேரூராட்சி தலைவருமான அப்துல் வஹாப் சகாராணி மலர்களால் அலங்கரிக் கப்பட்ட சந்தன குடத்தை, அலங்கார மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூட்டில் வைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

    ஏராளமான முஸ்லிம் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தின் முன்பு இளைஞர்கள் தீப்பந் தாட்டம் சுற்றி கொண்டே சென்றனர். இரவு முழுவதும் முஸ்லிம் பஜார் மற்றும் முஸ்லிம் தெருக்கள் வழியாக சென்ற இந்த சந்தனக்கூடு ஊர்வ லம் அதிகாலை தர்ஹாவை வந்தடைந்தது. இந் நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    • 2-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
    • 18-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கலிய கிராமத்தினரின் கொடி ஊர்வலமும், வெள்ளையபுரம் வட்டானம் ஜமாத்தார் மற்றும் கிராமத்தினர் ஸ்தானிகன்வயல் மாணவநகரி கிராமத்தினரின் ரத ஊர்வலமும் மருங்கூர், எஸ்.பி.பட்டினம், பாசிப்பட்டினம் ஜமாத்தார் கிராமத்தினர் சார்பில் கப்பல் விமானம் போன்ற அலங்கார ரதத்துடனும் பாசிப்பட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தனர்.

    இவர்களை தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை மேளதாளங்கள் வாணவேடிக்கை முழங்க தர்காவிற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கொடியை பொதுமக்கள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு மவுலீது ஓதி பாசிப்பட்டினம் வன்னியர் படையாட்சி சமூகத்தினரின் முயற்சியால் கொடிமரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் விழா கமிட்டியை சேர்ந்த முஸ்தபா கமால், சேகனா துரை, அசரப்அலி, அமீர்கான், ஊராட்சி தலைவர் உம்மு சலீமாநூருல் அமீன், ஒன்றிய கவுன்சிலர் சிவசங்கீதா ராஜாராம் மற்றும் வருவாய் துறை, காவல் துறையினர், மகான் வாரிசுதாரர்கள், தர்கா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

    வருகிற 1-ந் தேதி ஹத்தம் தமாம் சிறப்பு பயான் மற்றும் விருந்து நிகழ்ச்சியும், இரவு மவுலீது ஓதி நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 2-ந் தேதி மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் பொதுமக்கள் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும், 10-ந் தேதி இரவு தலைக்கிழமை, 18-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒலியுல்லாஹ் பேரர்கள், விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 1-ந்தேதி மவுலீது ஒதி, நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 2-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி ஹத்தம் தமாம் சிறப்பு பயான் மற்றும் மவுலீது ஒதி, நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2-ந் தேதி இரவு மதநல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து 10-ந் தேதி இரவு தலை கிழமை நிகழ்ச்சியும், 18-ந் தேதி மாலை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அனைவருக்கும் நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • 17-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவின் 122-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. அதிகாலையில் ஜலால் ஜமால் பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை ஊர்வலமாக எடுத்து வந்து தர்காவை 3 முறை வலம் வந்த பின்னர் மகான் செய்யதலி ஒலியுல்லா சமாதியில் சந்தனம் பூசப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து உலக நன்மைக்காக பிராத்தனை செய்யப்பட்டது. நேற்று காலை மவுலீது ஓதப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று பகலிலும் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த சந்தனக்கூடு திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

    வரும் 17-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணை தலைவர்கள் சிராஜுதீன், சாகுல் ஹமீது, இக்மத், செயலாளர் ஹபீபு, துணை செயலாளர்கள் சாகுல்ஹமீது, சீனிமுஸ்தபா, பசீர், களஞ்சியம், பொருளாளர் சகுபர்சாதிக், சீனிசேகு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீத், ஜாகிர் உசேன், முகமது உசேன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிங்கம் பசீர், அஸ்கர்அலி, அப்துர்ரகீம், பயாஸ்கான், சீனிபீர், பாலு, சொக்கலிங்கம், ரவி, சேகர், பஞ்சமுத்து, பஞ்சவர்ணம், காயாம்பு, கார்த்திகை செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 5 மற்றும் 6-ந்தேதிகளில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது.
    • ஜூலை 14-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு மதநல்லிணக்க சந்தனக்கூடு கந்தூரி விழாவையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக ஜலால் ஜமால் பள்ளி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    குதிரைகள் நடனம், வாணவேடிக்கையுடன் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின்பு தர்கா மினராவில் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மவுலீது ஓதப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர். வருகிற ஜூலை 5 மற்றும் 6-ந்தேதிகளில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது. ஜூலை 14-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணை தலைவர்கள் சிராஜுதீன், இக்மத், சாகுல் ஹமீது, செயலாளர் ஹபிபுல்லா, விழா அமைப்பாளர் அப்துல்மஜீத், பொருளாளர் சகுபர்சாதிக், தொழில் அதிபர் சிங்கம்பஸீர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.
    • இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகத்தின் 849-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா மே 21-ந்தேதி மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது.

    இந்த விழாவில் தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். கொடியிறக்கத்தை முன்னிட்டு நேற்று காலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசலில் மவ்லீது (புகழ்மாலை) ஓதப்பட்டு, அனைத்து சமுதாய மக்களுக்கும் நெய் சாதம் பிரசாதமாக வழங்கப் பட்டது.

    தொடரந்து கடலோர பகுதிகளில் வாழும் 9 கிராம மக்களுக்கு தேர்ச்சி வழங்கினர். மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக கடலாடி வட்டார ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தக்பீர் முழக்கத்துடன் தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பி னர்கள், தர்கா ஹக்தார்கள் கொடி இறக்கினர். இறக்கப் பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப் பட்டது. தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நள்ளிரவு வரை நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் (நெய்சோறு) பெற்று சென்றனர்.

    கொடியிறக்கத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ராமநாதபுரம் எஸ்.பி. தங்கவேலு உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

    ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணை தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்யது இப்ராகிம், சோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை, ஹாஜி செய்யது ஹூசைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹசன், முர்சல் இப்ராஹிம் ஆலீம், அமீர் ஹம்சா, சுல்தான் செய்யது இப்ராஹிம், அப்துல்கனி, கலீல் ரஹ்மான், செய்யது இப்ராகிம், அமின், சித்திக் லெவ்வை, அப்துல் ரஹிம் அம்ஜத் ஹுஸைன், லெவ்வைக்கனி, செய்யது அபுதாஹிர் ஆலிம், செய்யது இஸ்காக் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்தனர்.

    • கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • 3 நாட்களுக்கு தர்கா உட்புறம் மவுலூது நடைபெறும்.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆண்டகையின் கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது. துல்ஹஜ்ஜூ பிறை என்பதால் அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைக்கப்பட்டது.

    வியாபாரிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக காணிக்கை பொருட்களை அந்த தொட்டில் பந்தலில் கட்டினர். 3 நாட்களுக்கு தர்கா உட்புறம் மவுலூது நடைபெறும்.

    வருகிற 21-ந்தேதி மாலை சின்ன ஆண்டவர் சாமதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், இரவு தர்கா அலங்கார வாசலில் இருந்து பூகலேபு ஊர்வலம் புறப்படும்.

    இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேனேஜிங் டிரஸ்டி மற்றும் போர்டுஆப் டிரஸ்டிகள் செய்துவருகின்றனர்.

    • சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது.
    • ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லாஹ் தர்காவில் கடந்த 12-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர். கடந்த 13-ந் தேதி திருவிழா முடிவடைந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சையாக நெய்சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணைத்தலைவர் சாதிக் பாட்ஷா ஆகியோர் தலைமையில் தர்கா அக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

    • ஜூலை 5-ந்தேதி மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை சந்தனக்கூடு விழா ஊர்வலம் நடைபெறுகிறது.
    • ஜூலை 5-ந்தேதி பிற்பகல் பகல்கூடு நடைபெற உள்ளது.

    பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. 122-ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவையொட்டி வருகிற 25-ந்தேதி மாலை தர்கா வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை சந்தனக்கூடு விழா மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் பகல்கூடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியினர் அனைத்து சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

    • ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
    • 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அல் குத்பு சுல்த்தான் செய்யது பாதுஷா நாயகம் ஷஹீது ஒலியுல்லாஹ் (ரலி) அவர்களின் தர்காவில் கடந்த மாதம் மே 21-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை யானை, 21 குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதிகாலை ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்கா வந்தடைந்தது. தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையை மாவட்ட காஜி சலாஹுத்தீன் ஓதினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், நவாஸ் கனி எம்.பி., மாவட்ட பா.ஜனதா தலைவர் தரணி முருகேசன் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். காலை 6 மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது.

    தற்போது தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். முன்ன தாக தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    மதுரை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    • 19-ந்தேதி கந்தூரி விழா தொடங்குகிறது.
    • 21-ந்தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் வருகிற 19-ந்தேதி சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப்பின் கந்தூரி விழா தொடங்குகிறது.

    தொடர்ந்து வருகிற 21-ந்தேதி அன்னாரின் புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவையொட்டி நேற்று சந்தனம் அரைக்கும் பணி நாகூர் தர்காவில் தொடங்கியது.

    இந்த பணி நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகளால் துவா ஓதப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் அடங்கப் பட்டிருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 849-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நாளை (12-ந்தேதி) நடை பெறுவதையொட்டி, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏர்வாடிக்கு வரத் துவங்கினர். இதனால் தர்கா பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தர்காவில் மின் அலங்காரம் செய்யும் பணி மதுரை மதினா லைட் நிறுவனத்தினர் செய்து வரு கின்றனர்.

    நாளை மாலை 4.30 மணிக்கு யானை. குதிரையு டன் ஊர்வலமாக சென்று தர்்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும், தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த் தனையும், தொடர்ந்து தர்கா வில் சந்தனம் பூசும் நிகழ்சசி நடைபெறும்.

    மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்துவக்குழுவினர் முகா மிட்டு தயார் நிலையில் உள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற் பாடுகள் செய்யப் பட்டு ள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்ற 50-க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளுர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகை யில் 24-ந்தேதி (சனிக் கிழமை) வேலை நாளாக அறிவிக்கப் படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித் துள்ளார்.

    எஸ்.பி., தங்கதுரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். தர்கா நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான் லெவ்வை, செயலாளர் சிராஜ்தீன், துணைத் தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற் பாடுகளை செய்து வருகிறார்கள்.

    ×