என் மலர்tooltip icon

    வழிபாடு

    வழுத்தூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா
    X

    வழுத்தூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா

    • அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், நாலு கொடி கந்தூரி விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு பக்கீர்மார்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு இரவு முழுவதும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்கீர்மார்கள், பொது மக்கள் சிலம்பாட்டம், வீர விளையாட்டுகள் விளையாடி ஆன்மிக பாடல்கள் பாடி மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் வழுத்தூர், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் அப்துல் ரவூப் முன்னிலையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஹாஜா மைதீன், ஓ.பி.பசீர் அகமது, கமாலுதீன் பைஜி, முகம்மது நஜீர், ராஜம்மா மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    Next Story
    ×