search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "charity"

    • சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
    • பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தொண்டி:

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவபெருமான் கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் தலைவனாக இருப்பவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் சிவனின் தவத்தை கலைக்க வேண்டும் என்று பலரையும் நாடினர். ஆனால் சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில் மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்து விடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான். தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.

    இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதி தேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுதலாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று அழுது புலம்பி முறையிட்டாள். ரதிதேவியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவரிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார்.

    இந்த புராண சம்ப வத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி, பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காமன் பண்டிகையை யொட்டி காமன் மேடையில் காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படி தாரர்களால் பூஜைகள் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காமன் மேடையில் எரியூட்டப்பட்டு தகனம் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர். மேலும் குழந்தை இல்லாத தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    காம தகன ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராம மூர்த்தி, நாகராஜ், ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது.
    • தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது.

    `நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது. ரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது. உறவுமுறையினைப் பேணி, சேர்ந்து வாழ்வது ஆயுளை அதிகரிக்கிறது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி), நூல்: தப்ரானீ) மேற்கூறப்பட்ட நபிமொழியில் முத்தான மூன்று செயல்களும், அதனால் ஏற்படும் பயன்களும் பட்டியலிடப்படுகின்றன. அவை குறித்து காண்போம்.

    நற்காரியங்கள் புரிவது தீய மரணத்தைத் தடுக்கும்.

    நற்காரியங்கள் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

    'எல்லா நற்செயலும் தர்மமே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அறிவிப்பாளர்; ஜாபிர் (ரலி), நூல்: புகாரி). பொருளாதார உதவி, அன்னதானம், தண்ணீர், ஆடைகள் அளிப்பது, உதவி தேடி நிற்கும் துயருற்றவருக்கு உதவிடுவது, மக்களுக்கு உபகாரம் புரிவது, பிறருக்கு நலம் நாடுவது, வறியவருக்கு உதவுவது, அனாதைகளை ஆதரிப்பது, விதவை களுக்காக பாடுபடுவது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, அண்டை வீட்டாரை அரவணைப்பது, இருவருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவது, விபத்து, ஆபத்து, பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு தொண்டு செய்வது, வழி தவறியவருக்கு நேர்வழி காட்டுவது என்பது போன்ற செயல்பாடுகள் நற்காரியங்கள் ஆகும்.

    இவற்றை செய்வதினால் தீய மரணம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே நற்காரியங்கள் புரிவது அவசியமாகும். நற்காரியங்களால் மட்டுமே தீய மரணங்களை தடுக்க முடியும் என்பது நபி மொழியாகும். 'நற்காரியங்கள் புரிவது தீய மரணத்தையும், பேராபத்துகளையும், பேரழிவு களையும் தடுக்கிறது. மேலும், இவ்வுலகில் நன்மை உடையவர்கள் மறுமையிலும் நன்மை உடையவர்களே ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: தப்ரானீ)

    ரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கும்.

    `யார் தங்களின் பொருட்களை (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'. (திருக்குர்ஆன் 2:274)

    `இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கின்றான். அவர்களில் ஒருவர், தம் வலக் கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு ரகசியமாகச் செய்பவர் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    'நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, தொழுகையை நிலைநாட்டு கிறார்களோ நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து ரகசியமாகவும், வெளிப்படையாகவும் (தர்மமாக) செலவு செய்கிறார்களோ அவர்கள் என்றும் அழியாத ஒரு வியாபாரத்தை ஆதரவு வைக்கிறார்கள்'. (திருக்குர்ஆன் 35:29)

    `நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) 'கொடுக்கலும் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை கடைப்பிடிக்கவும், நாம் அவர் களுக்கு அளித்தவற்றில் இருந்து ரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தான தர்மங்களில்) செலவு செய்யட்டும்' என்று நீர் கூறுவீராக'. (திருக்குர்ஆன் 14:31)

    உறவுகளைப் பேணி வாழ்வது ஆயுளை அதிகமாக்கும்

    `தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி).

    `தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி).

    `உறவு என்பது அளவிலா அருளாளன் இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னுடன் ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்' என்று கூறினான். இவ்வாறு நபி (ஸல்) தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    `ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதரே! என்னை சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற்செயலை எனக்குக் கூறுங்கள்' என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் 'உறவைப் பேணி வாழ வேண்டும்' என்று கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஅய்யூப் அன்சாரி (ரலி), நூல்: புகாரி)

    `உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: சுபைர் பின் முத்யிம் (ரலி), நூல்: புகாரி)

    நபிகளார் கூறிய முத்தான இந்த மூன்று நற்செயல்களை நமது வாழ்வில் கடைப்பிடிப்போம். எதிர்பாராத விதமாக வரக்கூடிய தீய மரணங்களை தவிர்ப்போம். திருக்குர்ஆன் காட்டிய வழியிலும், நபிகள் நாயகம் வாழ்ந்த வழியிலும் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் நற்பேறுகளைப்பெறுவோம்.

    • தானம் என்பது ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வது ஆகும்.
    • தர்மம் என்பது எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது ஆகும்.

    உலகில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள முக்கியமான இரண்டு கடமைகள் தானம் மற்றும் தர்மம் ஆகியவையாகும். தானம் என்பது ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வது ஆகும். தர்மம் என்பது எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது ஆகும். அவரவருக்கு உரிய வகையில் இவற்றை கடைப்பிடித்தால், உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்ற வாழ்க்கை நியதியில், மகிழ்ச்சி கொண்ட மனதுடன் இந்த உலகை விட்டுச் செல்ல இயலும்.

    மரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் எமதர்மன் ஆவார். அவருக்கு `தர்மராஜன்' என்ற பெயரும், காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் `காலன்' என்ற பெயரும் உண்டு. பேராசையில் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நினைத்தபடியே வாழ்பவர்கள்தான் மரணத்துக்கு பயப்படுவார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதி, நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அஷ்டதிக்கு பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன், மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றிய பிரம்மா, அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரீசி, காஸ்யபர், சூரியன் ஆகியோர் சூரியனிடம் இருந்து தோன்றியவரே எமதர்மன் ஆவார்.

    விஸ்வகர்மாவின் மகள் சம்ப்ஜனாவை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு மகன்கள் மற்றும் யமுனா என்ற மகளும் பிறந்தனர். எமன் நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் பிரதிநிதி. தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சூரியனின் ஆணைப்படி சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடமிருந்து தென் திசை அதிபதி என்ற பட்டத்துடன், எமலோகத்துக்கும் அதிபதி ஆனார்.

    சிவபெருமான், தனது ரிஷபத்துக்கு சமமான தோற்றம்கொண்ட, கரிய எருமை மாடு ஒன்றை உருவாக்கி, விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு வாகனமாக அருளியதுடன், ஜீவன்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார்.

    இரண்டு கூரிய சிகரங்களுக்கு நடுவில் உள்ள பாதாளத்தில் ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிகரங்களை இணைத்துக் கட்டிய ஒரு தலைமுடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து எமதர்மன் நீதி வழங்குவதாக ஐதீகம். அவரது நீதி சிறிது பிசகினாலும், சிம்மாசனத்துடன் எமன், அக்னி ஆற்றில் விழ நேரிடும் என்ற நிலையில், சரியான நியாயம் வழங்குவதாகவும் புராணக்கதை வழக்குகள் உள்ளன. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக எமதர்மன் குறிப்பிடப்படுகிறார்.

    • திருஆக்கூரில் அவதரித்தவர், சிறப்புலி நாயனார்.
    • கொடும்பாளூரில் அவதரித்தவர், இடங்கழியார்.

    சிறப்புலி நாயனார்

    மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருஆக்கூரில் அவதரித்தவர், சிறப்புலி நாயனார். இவர் நீலகண்டப் பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்தார். சிவனடியார்கள் தம்மை வந்தடைந்தபோது, அவர்கள் திருவடிகளில் விழுந்து வணங்கி உணவு வழங்கி உபசரிப்பார். அடியவர்கள் விரும்பும் யாவற்றையும் வழங்கியதால் புகழ்பெற்றவர். சிவபெருமான் திருவடிகள் மீது பற்று கொண்ட சிறப்புலி நாயனார், பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி, முக்தியை தேடி வந்தார். இவர் சிவ வேள்விகளை எல்லாம் சிவபெருமானைக் குறித்தே செய்தார். சிவனடியார்களுக்கு இல்லை என்று கூறாமல் கொடுத்து வந்தார். இவ்வாறு பல புண்ணிய காரியங்களை செய்து புகழும், சிறப்பும் பெற்ற தன்மையினால் சிறப்புலி நாயனாராகப் போற்றப்பட்டு சிவபெருமான் திருவடி நிழலிலே நிலைபெற்றிருந்தார்.

    இடங்கழி நாயனார்

    விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள கொடும்பாளூரில் அவதரித்தவர், இடங்கழியார். மன்னரான இவரது ஆட்சிக்காலத்தில் அடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் திருத்தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கட்டத்தில் அடியார்களுக்கு திருவமுது வழங்குவதற்கு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டார். மனம் வருந்திய அவர், இடங்கழியாரின் அரண்மனைக்குள் புகுந்து நெற்கூடத்தில் இருந்து நெல்லை திருடினார். அவரை அரண்மனைக் காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன்பாக நிறுத்தினா். அவரிடம் இடங்கழியார், நடந்த விஷயத்தைக் கேட்டார். அதற்கு அந்த நபர், சிவனடியார்களுக்கு திருவமுது செய்விக்க பொருள் இல்லாததால், இப்படிச் செய்ததாகக் கூறினார். அதைக் கேட்டு அவரை விடுதலைச் செய்யும்படி இடங்கழியார் உத்தரவிட்டார். மேலும் நெற்கூடத்தில் உள்ள நெல் மட்டுமின்றி, அரண்மனையில் உள்ள எந்த மதிப்புமிக்க பொருளையும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லவும் அனுமதி கொடுத்தார். இந்த செயலால், இடங்கழியார், நாயன்மார்கள் பட்டியலில் இணைந்தார்.

    • தொண்டியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் பால சுப்பிரமணியன் கொடியேற்றினர்.நகர் தலைவர் காத்த ராஜா இனிப்பு வழங்கினார். தனியார் மின் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவுரவ தலைவர் ஜவஹர் அலிகான் தேசிய கொடியை ஏற்றினார். பாவோடி ஆட்டோ சங்கம், அக்ரஹாரம் குடியிருப்போர் சங்கம் சார்பில் தேசியகொடி ஏற்றப்பட்டது. கிங் பீட்டர் இனிப்பு வழங்கினார்.

    திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தேசியகொடி ஏற்றினார். பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    • பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.
    • முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிரபல அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி இளம் பெண்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களின் தகுதிக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளத்தை இந்த தொண்டு நிறுவனமே வழங்கி வந்துள்ளது. ஆனால் இவ்வாறு பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் இப்படி வாங்கப்பட்ட தொகை, பணம் கொடுத்தவர்களின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான பட்டதாரி பெண்கள் பணம் செலுத்தி குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்களாகி தற்காலிக ஆசிரியைப் பணியை பெற்றுள்ளதாக தெரிகிறது.

    அத்துடன் அவர்கள் வழங்கிய நன்கொடை தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையில் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இப்படியான மாத சம்பளத்தொகை கடந்த 7 மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனிடையே தற்காலிக ஆசிரியை பணிக்கு சில மாவட்ட கல்வி அதிகாரிகள் திடீர் தடை விதித்து விட்டதாகவும் தெரிகிறது. சம்பள பிரச்சனை, பணி நீக்கம் ஆகிய இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலோற்பவம், வேல்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.

    இதனிடையே முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது. இதன்படி பாதிக்கப்பட்ட அனைவரும் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்தனர்.

    இது பற்றிய தகவல்கள் பரவியதை தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமான பெண்கள் இன்று காலையில் வந்து சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு துறை அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தொண்டி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • தொண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தைச் சேர்ந்தவர் தூய மணி (வயது65), மீனவர் இவரது மகள் தனலட்சுமி (28). இவர் தொண்டியில் செயல் பட்டு வரும் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் தட்டச்சு செய்பவராக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தனலட்சுமின் தந்தை தூயமணி எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தொண்டியில் நேற்று முன்தினம் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த தொண்டீஸ்வ ரன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மறுநாள் அதே பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம்பெண் தனலெட்சுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களை சார்ந்து ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளனர்.
    • அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்கப்படுகிறது.

    பல்லடம் : 

    தமிழக கோவில் பூசாரிகள் நல சங்க தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்கப்படுகிறது.

    தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களை சார்ந்து ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளனர்.

    வருவாய் குறைந்த அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கும் பொங்கல் கருணைக்கொடை வழங்க வேண்டும். இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் குடும்பங்கள் பயனடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அங்கன்வாடி மையத்தில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அங்கன்வாடி மையத்தில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் லவராஜா, மன்ற தலைவர் முருகன், சேர்முகச்சாமி, பாஸ்கர், ஆனந்த், சபீனா, வைரவசாமி, ஜெயமாரியப்பன், கணபதி, சிலம்பம் ஆசிரியர் சோலை நாராயணன், தினேஷ், கனக லட்சுமி, சதீஷ் உள்ளிட்ட பலர் கலர் கலந்து கொண்டனர்.

    மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் கருத்துருக்களை அனுப்பலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் 2022-23-ம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் வருகிற 25-ஆம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் கருத்துருக்களை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார்.
    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55).

    இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

    இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

    அதனை தொடர்ந்து, ஜெப் பெசோஸ், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார்.

    அதன்படி 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.

    இதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பேசோஸ் சொந்தக்காரர் ஆனார்.

    அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

    மெக்கின்சியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 37 பில்லியன் டாலர்களாக (ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் கோடி) உள்ளது.

    இந்த நிலையில் தனது சொத்தில் சரிபாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக மெக்கின்சி உறுதிமொழி அளித்துள்ளார்.

    அதவாது 18.5 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கோடி) நன்கொடையாக வழங்க இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் வாழ்வதற்கு தேவையானதை விட கூடுதலாக, பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அதிகமான சொத்துகள் என்னிடம் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் “எனது மனித நேய அணுகுமுறை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு சற்று காலம் ஆகும். ஆனால் நான் அதுவரை காத்திருக்க மாட்டேன். என்னிடம் இருப்பது காலியாகும் வரை நான் இதை தொடருவேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

    மெக்கின்சியின் இந்த கொடை உள்ளத்தை அவரது முன்னாள் கணவர் ஜெப் பெசோஸ் பாராட்டி உள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில், “மெக்கின்சி, மனநேய அணுகுமுறையில் மிக சிறப்பாகவும், நல்ல சிந்தனையுடனும் செயல்படுகிறார். அவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
    ×