search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Remedies"

    • குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்.
    • குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது.

    குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது. குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை ஆகும். குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்லலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

     வலிதாயநாதர் கோவில்:

    சென்னை, பாடியில் உள்ள வலிதாயநாதர் கோவில் குருபெயர்ச்சி தினத்தில் சென்று வழிபட வேண்டிய கோவில் ஆகும். பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது ஆகும். இந்த கோவில் குருபகவான் வழிபட்ட தலம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இந்த தலமானது குருபகவானுக்கு மிகச்சிறந்த பரிகார தலம் என்று புராணங்கள் கூறுகிறது.

     தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோவில்:

    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில். இந்த கோயிலில் தேவாரம் பாடல் பாடப்பெற்றுள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரராக காட்சி சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் இந்த கோலத்தில், இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்ற கோலத்தில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தருகிறார். தோஷங்கள் நீங்க இந்த கோயிலில் உள்ள மங்காம்பிகை - சமேத வசிஷ்டேஸ்வரருடன் காட்சி தரும் குருபகவானை வணங்கினால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     திருவாரூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மிகச்சிறந்த குரு பரிகாரத் தலம் ஆகும். இங்கு தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் காட்சி தருகிறார். குருபகவான் தனது சீடர்களுக்கு 24 அட்சரங் மந்திரத்தை உபதேசித்த காரணத்தால், இங்கு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில், குருபகவானுக்கு மஞ்சள் நிற பட்டுடுத்தி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சிறப்பு என்று கூறப்படுகிறது.

     மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்:

    மயிலாடுதுறையில் உள்ள அமைந்துள்ளது மயூரநாதர் கோவில். இந்த கோவில் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். காசிக்கு நிகரான இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.

     காரைக்குடி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் அமைந்துள்ளது. இங்கு குரு வடிவத்தில் சிவ பெருமான் தோன்றி கார்த்திகை பெண்களின் சாபத்தை நீக்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியையும், அந்த கோயிலுக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் வழிபட்டு 12 முறை வலம் வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி:

    நவ திருப்பதிகளில் ஒன்றாக ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோவில் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. நம்மாழ்வார் அவதரித்த இந்த கோயிலில் குருவாக ஆதிநாத பெருமாள் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

     திருச்செந்தூர் முருகன் கோவில்:

    அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குரு பகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். முருகப்பெருமானை வணங்கி இவரையும் வணங்குவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிட்டும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை ஆகும்.

     வல்லநாடு கைலாச நாதர் கோவில்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லநாடு. இங்குள்ள முறப்பநாட்டில் இந்த கோவில் உள்ளது. நவ கைலாயங்களில் ஒன்றான இந்த கோயிலில், குருவின் அம்சமாக கைலாச நாதர் உள்ளார். இவரை வணங்குவதால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

    மேலே கூறிய கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பாகும்.

    • பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்.
    • பெண்களுக்கான சிறப்பு ராசிபலன்கள்.

     

    மேஷம்

    இந்த சனிப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாகவே உங்களுக்கு அமையப் போகின்றது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும். புராதனக் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வாகனம் வாங்கக் கேட்ட உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியிலும் பெருமை சேரும். சுய ஜாதக அடிப்படையில் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் சொந்தங்கள் போற்றும் விதம் வாழ்வமையும்.

     ரிஷபம்

    இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பெயர்ச்சியாக அமையப்போகின்றது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் நன்மையைத் தரும்.

     மிதுனம்

    இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்து சேரும். இதுவரை இருந்த பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சகப்பணியாளர்களின் ஒத்துழைப்பும் திருப்தி தரும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

     கடகம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாகப் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க அனுசரித்துச் செல்வது உத்தமம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவெடுக்க இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் உருவாகலாம். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

     சிம்மம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அடுத்தடுத்து விரயங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீடு மாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். உடன்பிறப்புகளையும் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.

     கன்னி

    இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்திலேயே அமைகின்றது. குடும்ப வருமானம் உயரும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியிலும். தாய் வழியிலும் உதவிகள் கிடைக்கும். கடன்சுமை குறையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும், வீடு, வாகனம் வாங்க கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

     துலாம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்பட எதிர்மறை கருத்துக்களைத் தவிர்த்து நேர்மறை கருத்துக்களை மேற்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது உத்தமம். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப்பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர். பக்கத்து வீட்டாரின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

     விருச்சிகம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக வரவிற்கேற்ற செலவுகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தன்னம்பிக்கையும், தைரியமும், அயராத உழைப்பும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் உறவு பலம்பெற விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். கடன் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சிக்கனத்தைக் கையாள முயற்சி எடுப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

     தனுசு

    இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது. பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கல்யாணக் காரியங்களில் இருந்த தடைகள் அகலும். நட்பால் நல்ல காரியங்கள் நடக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தடுமாற்றங்களும், தடைகளும் அகலும். ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். வீடு வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

     மகரம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவால் பெண்களுக்கு செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் அடுத்தடுத்து நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தருவதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்ய முன்வருவர்.

     கும்பம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீடு மாற்ற மும், இட மாற்றமும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து செயல் பட்டால் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்படிப்பின் விளைவாகவோ, வேலையின் நிமித்தமாகவோ வெற்றி உண்டு. உடன்பிறந்தவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கலாம். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. வழிபாட்டின் மூலம் வளர்ச்சியை கூட்டிக் கொள்ளலாம் என்பதால் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் நன் மையை வழங்கும்.

     மீனம்

    இந்த சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியாக உங்களுக்குத் தொடங்குகின்றது. எனவே எந்த நேரமும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் விரும்பும் வண்ணம் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. நீங்கள் என்னதான் சிறப்பாகப் பணிபுரிந்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சனிக்கிழமை விரதமும், சனி பகவான் வழிபாடும் நன்மை தரும்.

    • ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.
    • மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

    * ஆடையில் நல்ல வாசனைத்திரவியம் (செண்ட்) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தை பெருக்கும்.

    * சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.

    * மனைவியை தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக்குறைவு, மன உளைச்சல், பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை.

    * மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிற பூக்களை போடச்சொல்லலாம். இது தம்பதிகளுக்கு இடையே உள்ள தோஷ நிவாரணமாகவும், அன்யோன்யத்தை பெருக்குவதாகவும் அமையும்.

    * பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.

    * பட்டு, நைலான், பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

    • செவ்வாய் பகவானை வழிபட விரைவில் சொந்த வீடு அமையும்.
    • ஒன்பது செவ்வாய் அபிஷேக செய்து வழிபட வீடுகட்டும் கனவு நிஜமாகும்.

    * சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமை செய்யாய் ஓரையில் செவ்வாய் பகவானை நினைத்து அர்ச்சனை செய்து வர விரைவில் சொந்த வீடு அமையும்.

    * நிலம் அமைத்து வீடு அமைய தாமதம் ஆகும்போது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து அந்த ஆலயத்திலேயே ஆறு மணிநேரம் தங்கி அங்குள்ள கடல் நீரை எடுத்து வந்து மஞ்சள் கலந்து வீட்டு கட்டும் இடத்தை சுற்றி தெளிக்க வேண்டும்.

    * வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய் அன்று அபிஷேகம் செய்து வணங்கிவர வீடுகட்டும் கனவு நிஜமாகும்.

    * வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரத்தை தானமாக கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    * ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்க கொடுத்தால் வீடு வாங்கவும், வீடு கட்டவும் வாய்ப்புகள் அமையும் என்பது ஐதீகம்.

    ×